Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»கடல் உணவு பொருள் ஏற்றுமதியாளர்கள் புதிய சந்தையை தேட வேண்டும்: மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்ஜன் சிங் வலியுறுத்தல்
    வணிகம்

    கடல் உணவு பொருள் ஏற்றுமதியாளர்கள் புதிய சந்தையை தேட வேண்டும்: மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்ஜன் சிங் வலியுறுத்தல்

    adminBy adminAugust 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கடல் உணவு பொருள் ஏற்றுமதியாளர்கள் புதிய சந்தையை தேட வேண்டும்: மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்ஜன் சிங் வலியுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: இந்​திய பொருட்​களுக்கு அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் 50 சதவீத வரி விதிப்பை அறி​வித்​துள்ள நிலை​யில், அது இந்​திய கடல் உணவுப் பொருட்​கள் ஏற்​றும​தி​யில் கடும் தாக்​கத்தை ஏற்​படுத்​தும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இந்த நிலை​யில், புதிய சந்​தைகளை தேடு​மாறு ஏற்​றும​தி​யாளர்​களை மத்​திய அரசு வலி​யுறுத்​தி​யுள்​ளது

    இதுகுறித்து மத்​திய மீன்​வளம் மற்​றும் கால்​நடை பராமரிப்பு துறை அமைச்​சர் ராஜீவ் ரஞ்​ஜன் சிங், கடல் உணவு ஏற்றுமதியாளர்களு​டன் நடை​பெற்ற சந்​திப்​பின்​போது கூறிய​தாவது: தற்​போதைய சூழலை ஏற்​றும​தி​யாளர்​கள் தைரி​யத்​துடன் எதிர்​கொள்ள வேண்​டும். இந்​திய இறால் மற்​றும் பிற மீன் வகைகளுக்கு உலகள​வில் நல்ல வரவேற்பு உள்​ளது. இதனால், ஏராளமான மாற்று சந்தை வாய்ப்​பு​கள் உள்​ளன.

    இதனை கருத்​தில் கொண்டு புதிய சந்​தைகளை கைப்​பற்​று​வ​தில் ஏற்றுமதியாளர்​கள் தீவிர​மாக செயல்பட வேண்​டும். இவ்​வாறு ராஜீவ் கூறி​னார். அமெரிக்கா​வுக்​கான பதப்​படுத்​தப்​பட்ட இறால் ஏற்​றும​தி​யில் இந்​தியா தற்​போது முன்​னிலை​யில் உள்​ளது. இதன் சந்​தைப் பங்கு 2015-ல் 24.4%-ஆக இருந்த நிலை​யில் 2024 -ல் 40.6% -ஆக கணிச​மாக அதி​கரித்​துள்​ளது.

    இந்​தநிலை​யில், அமெரிக்​கா​வின் அதிக வரி விதிப்​பின் காரண​மாக இந்​தி​யா​வின் சந்​தைப் பங்கு கடுமை​யாக பாதிக்​கப்​படும் சூழல் ஏற்​பட்​டுள்​ளது. இதனால், இந்​திய ஏற்​றும​தி​யாளர்​கள் மாற்று சந்​தைகளை தேட வேண்​டிய நிலைக்கு தள்​ளப்​பட்​டுள்​ளனர். இந்​தி​யா​வின் சந்தை வரம்பை விரிவுபடுத்​து​வதற்​கான ஒரு உத்​தியை வகுக்க ஏற்​றும​தி​யாளர்​களு​டன் மத்​திய அரசு பேச்​சு​வார்த்தை​யில் ஈடு​பட்​டுள்​ளது.

    மாற்று சந்​தைகளாக இங்​கிலாந்​து, ஐரோப்​பிய ஒன்​றி​யம், ஓமன், ஐக்​கிய அரபு அமீரகம், தென் கொரி​யா, ரஷ்​யா, சீனா ஆகியவை அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளன. இதற்​காக, மதிப்​புக் கூட்​டல், பதப்​படுத்​துதல், பேக்​கேஜிங் வசதி​களை மேம்படுத்தவும், வலுப்​படுத்​த​வும் மீன்வள உட்​கட்​டமைப்பு நிதியை பயன்​படுத்​திக் கொள்​ளு​மாறு ஏற்​றும​தி​யாளர்​களை மத்​திய அரசு கேட்​டுக்​கொண்​டுள்​ளது.

    இந்​தி​யா​வின் வரு​டாந்​திர மீன் உற்​பத்தி 104% என்ற உயர் வளர்ச்​சியை எட்​டி​யுள்​ளது. 2013-14-ல் 96 லட்​சம் டன்​னாக இருந்த மீன் உற்பத்தி 2024-25-ல் 195 லட்​சம் டன்​னாக அதி​கரித்​துள்​ளது. 2023-24 நிதி​யாண்​டில் ரூ.60,524 கோடி மதிப்​புள்ள 17.81 லட்​சம் மெட்​ரிக்டன் கடல் உணவு​களை இந்​தியா ஏற்​றுமதி செய்​துள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    தங்கம் ஒரு பவுன் விலை ரூ.80,000 தாண்டியது: நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி 

    September 7, 2025
    வணிகம்

    அமெரிக்க வரி விதிப்பு தாக்கம்: ராணிப்பேட்டையில் காலணி உற்பத்தி பாதிப்பு!

    September 6, 2025
    வணிகம்

    ‘ஜாப் ஒர்க்’ நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி 18% ஆக உயர்வு: தொழில் துறையினர் அதிருப்தி

    September 6, 2025
    வணிகம்

    வரலாற்றில் முதன்முறை: தங்கம் விலை ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்தை கடந்து அதிர்ச்சி

    September 6, 2025
    வணிகம்

    அமெரிக்க வரி வதிப்​பால் பாதிக்​கப்​படும் ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு நிவாரணம்

    September 6, 2025
    வணிகம்

    ஒரேநாளில் பத்திரப் பதிவு மூலம் ரூ.274 கோடி வருவாய்: அமைச்சர் மூர்த்தி தகவல்

    September 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தமிழகத்தில் 46 காவல் நிலையங்கள் சிறந்த காவல் நிலையங்களாக தேர்வு: கோப்பைகளை இன்று வழங்குகிறார் டிஜிபி
    • லண்டன் மார்க்ஸ் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை: அம்பேத்கர் தங்கிய இல்லத்தையும் பார்வையிட்டார்
    • பாஜக கூட்டணியில் நடக்கும் நிகழ்வுகள் திருப்தி தரவில்லை: அண்ணாமலை கருத்து
    • கால்நடை ஆய்வாளர் பதவிக்கு புதிய கல்வித்தகுதி 
    • காஞ்சி சர்க்கரை ஆலையை ரூ.450 கோடிக்கு வாங்கிய சசிகலா: சிபிஐ பதிவு செய்துள்ள எப்ஐஆரில் தகவல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.