Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»ஒழுங்குமுறை அனுமதியை தாமதிப்பது தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை பாதிக்கும்: நிர்மலா சீதாராமன்
    வணிகம்

    ஒழுங்குமுறை அனுமதியை தாமதிப்பது தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை பாதிக்கும்: நிர்மலா சீதாராமன்

    adminBy adminMay 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஒழுங்குமுறை அனுமதியை தாமதிப்பது தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை பாதிக்கும்: நிர்மலா சீதாராமன்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ஒழுங்குமுறை அனுமதி வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் செயல்முறைகளில் குறைவான வெளிப்படைத்தன்மை ஆகியவை நிச்சயமற்றத் தன்மையை உருவாக்கி, தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் (FTAs) சரியான நேரத்தில் முடிவடைவதை பாதிக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரித்துள்ளார்.

    மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் தற்போது அமெரிக்காவில் அந்நாட்டு வர்த்தகத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும்வேளையில் நிதியமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்திய போட்டி ஆணையத்தின் (Competition Commission of India) 16-வது ஆண்டு விழாவில் பேசிய மத்திய நிதியமைச்சர், இந்தியாவின் சுதந்திரமான மற்றும் நியாயமான சந்தையின் முக்கியத்துவத்தையும், அது எவ்வாறு முழுமையான பொருளாதாரத்துக்கு உதவும் என்பதையும் எடுத்துரைத்தார்.

    இந்நிகழ்வில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது: “ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்ட, வேகமான பொருளாதாரத்தில் ஒழுங்குமுறை அனுமதி வழங்குவதில் ஏற்படும் தாமதம் நிச்சயமற்ற தன்மைக்கு வழிவகுக்கும். வெளிநாடுகளுடன் நாம் சுதந்திர வர்த்தகத்துக்கான பேச்சுவார்த்தைகள் நடத்தி வரும் இந்த வேளையில், அவை வர்த்தக காலக்கெடுவை சீர்குலைக்கும், பரிவர்த்தனைகளுக்கான நோக்கத்தின் மதிப்பை அழித்து, பாதிப்பை ஏற்படுத்தும்.

    கட்டுப்பாட்டு அதிகாரிகளின் திறன், சுறுசுறுப்பு மற்றும் ஆயத்தநிலை, முதலீட்டாளர்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. சரியான நேரத்துக்குள் தடையற்ற வர்த்த ஒப்பந்தங்களை நாம் முடிக்க முயற்சிக்கும்போது, ஒழுங்குமுறை கட்டமைப்பின் இந்த அம்சங்கள் தீவிரமான அர்த்தம் கொண்டவையாக மாறிவிடுகிறது.

    எனவே, சிக்கல்கள் எழும் போதும், சிக்கல்களைத் தீர்க்க எடுத்துக்கொள்ளும் நேரம் அல்லது கட்டுப்பாட்டு அதிகாரிகளின் குறைவான வெளிப்படைத்தன்மை போன்றவை பேச்சுவார்த்தைகளை சிக்கலாக்கிவிடும். எனவே, ஒழுங்குமுறை கட்டமைப்புகள் கடுமையான மேற்பார்வைகளை கைகொள்ளும் அதேநேரத்தில், போட்டிகளை பாதிக்காத வகையில், தடையற்ற ஒப்புதல்களை எளிமையாக்குவதும் அவசியம்.

    சந்தைகள் சிலருக்காக மட்டும் இல்லாமல், பலருக்காகவும் வேலை செய்யவேண்டும் என்பது மிகவும் முக்கியமான கொள்கையாகும். சுதந்திரமான மற்றும் நியாயமான சந்தைகள், வளங்களைக் குறிப்பிட்ட சிலர் மட்டுமே கைப்பற்றுவதையோ, அதிகமான தேர்வுகளையும், விலைகளையும் கட்டுப்படுத்துவதையோ தடுக்கிறது. போட்டிகள் நுகர்வோரின் குரலை உறுதி செய்கிறது, அதுதான் சாமானியர்களின் குரல்களை முக்கியமானதாக்குகிறது, அதைக் கேட்க வணிகர்களை நிர்பந்திக்கிறது” என்று நிர்மலா சீதாராமன் பேசினார்.

    பல துறைகளில் ஒரு சிலர் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த கருத்துக்கள் குறிப்பிடத்தகுந்தவையாக இருக்கிறது.

    உதாரணமாக, விமானப்போக்குவரத்து துறையில், இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்கள் இணைந்து சந்தைப் பங்குகளில் 85 – 90 சதவீதத்தை வைத்துள்ளன. தொலைத்தொடர்புத் துறையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் இணைந்து 77 – 80 சதவீதம் இந்தியச் சந்தைகளை கைவசம் வைத்துள்ளன. நாடு முழுவதும் உணவுத்துறையில் இருக்கும் மிகப்பெரிய நிறுவனங்களாக சோமாட்டோ மற்றும் ஸ்விகி மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    கோ​யம்​பேடு சந்​தை​யில் தக்​காளி விலை ரூ.30 ஆக உயர்வு

    July 28, 2025
    வணிகம்

    அடுத்த ஆண்டு முதல்  வெளி சந்தைகளில் இருந்து 1,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்: மின் வாரிய அதிகாரிகள் தகவல்

    July 28, 2025
    வணிகம்

    தூத்துக்குடி மாவட்டத்தில் மினி உலக முதலீட்டாளர் மாநாடு: அமைச்சர் டிஆர்பி.ராஜா தகவல்

    July 28, 2025
    வணிகம்

    பிரபல டிசிஎஸ் நிறுவனம் 2% ஊழியரை குறைக்க முடிவு: 12,000 பேருக்கு வேலை பறிபோகும் அபாயம்

    July 28, 2025
    வணிகம்

    திருச்சி விமான நிலையத்தில் அதிநவீன சொகுசு பயணிகள் ஓய்வறை!

    July 27, 2025
    வணிகம்

    இந்தியா – இங்கிலாந்து வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஒரு முக்கிய மைல்கல்: ஜவுளித் தொழில்துறையினர் நம்பிக்கை

    July 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்ததாக ஏன் நினைக்கிறீர்கள்?” – ப.சிதம்பரம் கேள்வியால் சர்ச்சை
    • போலீஸ் அதிகாரியாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன்  
    • அன்புமணி நடைபயணத்துக்கு தடை விதிக்கவில்லை: டிஜிபி அலுவலகம் விளக்கம்
    • அதிகப்படியான பழங்களை சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் மற்றும் வகை 2 நீரிழிவு நோயை ஏற்படுத்துமா? இங்கே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மகாராஷ்டிராவில் 2 மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பள்ளி காவலாளி கைது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.