Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»ஒரே நாளில் 70 கோடி பரிவர்த்தனை: புதிய மைல்கல்லை எட்டிய யுபிஐ
    வணிகம்

    ஒரே நாளில் 70 கோடி பரிவர்த்தனை: புதிய மைல்கல்லை எட்டிய யுபிஐ

    adminBy adminAugust 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஒரே நாளில் 70 கோடி பரிவர்த்தனை: புதிய மைல்கல்லை எட்டிய யுபிஐ
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மும்பை: இந்தியாவில் யுபிஐ மூலம் கடந்த 2-ம் தேதி அன்று மட்டும் ஒரே நாளில் 70.7 கோடி பண பரிவர்த்தனை நடந்துள்ளது. இதனை நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்பிசிஐ) உறுதி செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் யுபிஐ பயன்பாடு புதிய மைல்கல் சாதனையை எட்டியுள்ளது.

    கடந்த 2023-ம் ஆண்டோடு ஒப்பிடும் போது தற்போது யுபிஐ பண பரிவர்த்தனையில் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அப்போது 35 கோடியாக இருந்த தினசரி பண பரிவர்த்தனையின் எண்ணிக்கை கடந்த 2024 ஆகஸ்ட்டில் 50 கோடியாக அதிகரித்தது. இப்போது அது 70 கோடியாக உயர்ந்துள்ளது. இதை என்பிசிஐ வெளியிட்டுள்ள தரவுகள் உறுதி செய்துள்ளன.

    கடந்த ஜூலை மாதம் யுபிஐ-யில் தினசரி பண பரிவர்த்தனையின் எண்ணிக்கை 65 கோடியாக இருந்தது. இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் பிறந்ததும் பல்வேறு பயன்பாட்டு கட்டணங்கள், வாடகை, ஊதியம் போன்ற பரிவர்த்தனைகளை மேற்கொண்ட காரணத்தால் 70 கோடி பண பரிவர்த்தனையை கடந்த 2-ம் தேதி அன்று எட்டியுள்ளது.

    இந்தியாவில் யுபிஐ: இந்தியாவில் நொடிப் பொழுதில் டிஜிட்டல் முறையில் சாமானியர்கள் தொடங்கி அனைத்து தரப்பினரும் பணத்தை பெறவும், அனுப்பவும் உதவுகிறது யுபிஐ பேமென்ட். இது வணிகர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் சாதகமானதாகவும் உள்ளது. நகரம் முதல் கிராமம் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ செயல்பாட்டில் உள்ளது. இதனால், ரொக்கத்தின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது.

    கூகுள் பே, போன் பே, பேடிஎம், அமேசான் பே, BHIM என பல்வேறு செயலிகளின் மூலம் இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. நாளுக்கு நாள் இதன் பயனர்கள் மற்றும் பண பரிவர்த்தனைகயின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    சர்வதேச நிதியம் அறிக்கை: யுபிஐ மூலம் பணம் செலுத்தும் முறையை நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்பிசிஐ) கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கியது. இத்தளம் ஏராளமான வங்கி கணக்குகளை ஒரு செல்போன் செயலி மூலம் இணைக்க அனுமதிக்கிறது. இதன் மூலம் குறைந்த செலவில் எளிதாக, உடனடியாக, பாதுகாப்பான முறையில் பண பரிமாற்றம் நடைபெறுகிறது.

    யுபிஐ மூலம் ஒவ்வொரு மாதமும் 1,800 கோடி பண பரிமாற்றம் நடைபெறுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் 32 சதவீதம் அதிகரிக்கிறது. யுபிஐ முறை இந்தியாவை ரொக்க பணம் மற்றும் கார்டு மூலம் பணம் செலுத்தும் முறையில் இருந்து மாற்றி டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு தள்ளியுள்ளது. தனிநபர்கள் மற்றும் சிறு தொழில்களில் நிதி உள்ளடக்கத்தில் முக்கிய அங்கமாக யுபிஐ மாறியுள்ளது.

    இந்தியாவில் நடைபெறும் அனைத்து டிஜிட்டல் பணம் செலுத்தும் முறைகளில் 85 சதவீதம் யுபிஐ கணக்குகள் மூலம் நடைபெறுகிறது. இதில் 49 கோடியே 10 லட்சம் பேரும், 6 கோடியே 50 லட்சம் வணிகர்களும், 675 வங்கிகளும் ஒரே தளத்தில் இணைக்கப்பட்டுள்ளனர் என சர்வதேச நிதியம் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    111 அறைகள், குறைந்த வாடகை: கோவை ‘சிட்கோ’ புதிய தொழிலாளர் விடுதிக்கு வரவேற்பு

    August 5, 2025
    வணிகம்

    4.08 கோடி போலி எல்பிஜி சிலிண்டர் இணைப்புகள் நீக்கம்: மத்திய அமைச்சர் தகவல்

    August 5, 2025
    வணிகம்

    வங்கிக் கடன் மோசடி வழக்கு: அமலாக்கத் துறை விசாரணைக்கு அனில் அம்பானி ஆஜர்

    August 5, 2025
    வணிகம்

    தங்கம் விலை தொடர்ந்து உயர்வு: பவுனுக்கு ரூ.600 அதிகரிப்பு

    August 5, 2025
    வணிகம்

    கடலலை மேல் கால் நூற்றாண்டு

    August 5, 2025
    வணிகம்

    அமெரிக்காவின் அழுத்தத்தை மீறி ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குகிறது இந்தியா: 4 சரக்கு கப்பல்கள் குஜராத் வந்தன

    August 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியா மீது கூடுதல் வரி: ட்ரம்ப் அறிவிப்பு
    • சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் காத்திருப்போர் அறையில் கழிப்பறைகள் மூடல்: பயணிகள் கடும் அவதி
    • இந்தியாவில் அரிய வன ஆந்தையை எங்கே பார்க்க வேண்டும்: பறவைக் கண்காணிப்பாளர்களுக்கான 7 சிறந்த இடங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • விநாயகர் சதுர்த்தி: ராமநாதபுரத்தில் 600-க்கும் அதிகமான இடங்களில் சிலை வைத்து வழிபட ஏற்பாடு
    • 5 சிறந்த தந்திரங்கள் ஒரு இனிமையான தர்பூசணியைத் தேர்ந்தெடுத்து தட்டுவதைத் தவிர்க்க | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.