Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 26
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»ஒயின், ஜாம் தயாரிப்புக்காக கொள்முதல்: கிருஷ்ணகிரியில் செர்ரி பழம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
    வணிகம்

    ஒயின், ஜாம் தயாரிப்புக்காக கொள்முதல்: கிருஷ்ணகிரியில் செர்ரி பழம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

    adminBy adminJuly 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஒயின், ஜாம் தயாரிப்புக்காக கொள்முதல்: கிருஷ்ணகிரியில் செர்ரி பழம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒயின் மற்றும் ஜாம் தயாரிப்பு நிறுவனங்கள் கொள்முதல் செய்வதால், தேன்கனிக்கோட்டை பகுதியில் ஜெர்ரி பழம் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இச்சாகுபடி தொழில்நுட்பம் குறித்து தோட்டக்கலைத் துறையினர் உரிய ஆலோசனை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள நல்ல மண்வளம் மற்றும் ஆண்டு முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதால், மலர் மற்றும் காய்கறி சாகுபடி விவசாயிகளுக்குக் கைகொடுத்து வருகிறது. அதேபோல மலைப்பிரதேசங்களில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்களும் இங்கு சாகுபடி செய்யப்படுகின்றன.

    இந்நிலையில், தேன்கனிக்கோட்டை, பாலூர், உரிகம், தளி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஜெர்ரி பழம் சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்பகுதிகளில் அறுவடை செய்யப்படும் ஜெர்ரி பழங்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒயின் மற்றும் ஜாம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இப்பழத்துக்கு வர்த்தக வரவேற்பு உள்ளதால், இப்பகுதியில் கூடுதல் பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி செய்ய உரிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக விவசாயிகள் கூறியதாவது: நன்கு வடிகால் வசதியுள்ள நிலங்களில் ஜெர்ரி பழம் சாகுபடியில் ஈடுபட்டோம். நல்ல மகசூல் கிடைத்தது. மேலும், சந்தை வாய்ப்பும் அதிகம் உள்ளது. இதனால், தேன்னிக்கோட்டை, தளி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பரவலாக விவசாயிகள் ஜெர்ரி கன்றுகளை நடுவு செய்து வருகின்றனர். ஜெர்ரி பழத்தில் 10 ரகங்கள் உள்ளன. ஊட்டியில் விளையும் ஜெர்ரி ரக பழத்தை ஓசூர் பகுதியில் நடவு செய்துள்ளோம்.

    நன்கு பராமரித்து வந்தால் ஒன்றரை ஆண்டு முதல் அறுவடைக்குப் பழம் கிடைக்கும். ஒரு மரத்தில் 5 முதல் 8 கிலோ வரை, ஆண்டுக்கு 2 முறை மகசூல் கிடைக்கும். இப்பழங்களை 3 தரமாகப் பிரித்துப் பதப்படுத்தி முதல் தரம் பழங்கள் ஒரு கிலோ ரூ.250 முதல் ரூ.350 வரை விற்பனை செய்கிறோம். இப்பழத்தில் பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள், ஒயின் தயாரிக்க வியாபாரிகள் கொள்முதல் செய்து கர்நாடக மாநிலத்துக்கு அனுப்பு வருகின்றனர்.

    2-ம் தரம் பழங்கள் ஜாம் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் உள்ள பேக்கரிகளுக்கு அனுப்பி வருகிறோம். நல்ல மகசூல், சந்தை வாய்ப்புள்ளதால், இச்சாகுபடி தொழில்நுட்பம் குறித்து தோட்டக்கலைத் துறையினர் விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை மற்றும் வழிகாட்டல் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    தொடர்ந்து 3-வது நாளாக குறைந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

    July 26, 2025
    வணிகம்

    ஆபாச காட்சிகளை ஒளிபரப்பும் 25 ஓடிடி தளங்களுக்கு தடை

    July 26, 2025
    வணிகம்

    இங்கிலாந்து உடனான வர்த்தக ஒப்பந்தத்தால் தமிழகத்துக்கு பலன் என்ன?

    July 25, 2025
    வணிகம்

    1 பில்லியன் டாலரை கடந்த சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு!

    July 25, 2025
    வணிகம்

    முதல் காலாண்டு நிதிநிலை அறிக்கை: இந்தியன் வங்கியின் நிகர லாபம் ரூ.2,973 கோடியாக உயர்வு

    July 25, 2025
    வணிகம்

    இந்தியாவின் நேரடி வரி வருவாயில் 4-வது பெரிய பங்களிப்பாளராக திகழும் தமிழகம்: வருமான வரி தலைமை ஆணையர் பெருமிதம்

    July 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சாதிவாரி கணக்கெடுப்பில் ராகுலை போல் ஸ்டாலினும் வரலாற்றுத் தவறை உணர்வாரா? – அன்புமணி
    • சிறுநீரக சேதம் விளக்கப்பட்டுள்ளது: நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற நிலைமைகள் உங்கள் சிறுநீரகங்களுக்கு என்ன செய்கின்றன | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ராஜஸ்தானில் அரசு பள்ளி கட்டிடம் இடிந்து 8 மாணவர்கள் உயிரிழப்பு; 30 பேர் காயம்
    • தமிழக மக்கள் உரிமை மீட்பு என்ற தலைப்பில் நடைபயணத்தை தொடங்கினார் அன்புமணி
    • கோல்ட் பிளே ஸ்டாரின் முன்னாள் க்வினெத் பேல்ட்ரோ வானியலாளரின் “செய்தித் தொடர்பாளர்” ஆகிறது: சமூக ஊடகங்கள் வெடிக்கும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.