Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 27
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»ஏற்ற இறக்கம் இருந்தாலும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பாதுகாப்பானது: பொருளாதார நிபுணர் பத்மநாபன் தகவல்
    வணிகம்

    ஏற்ற இறக்கம் இருந்தாலும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பாதுகாப்பானது: பொருளாதார நிபுணர் பத்மநாபன் தகவல்

    adminBy adminJuly 27, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஏற்ற இறக்கம் இருந்தாலும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பாதுகாப்பானது: பொருளாதார நிபுணர் பத்மநாபன் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பாதுகாப்பானது என்று இந்து தமிழ் திசை நாளிதழ் மற்றும் பிரே அசட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து சென்னையில் நேற்று நடத்திய நிகழ்ச்சியில் பொருளாதார நிபுணர் பா.பத்மநாபன் தெரிவித்துள்ளார்.

    ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மற்றும் ‘மிரே அசட் மியூச்சுவல் ஃபண்ட்’ நிறுவனம் இணைந்து முதலீடும் முன்னேற்றமும்’ என்ற கருப்பொருளுடன் மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை சென்னையில் நேற்று நடத்தியது. இதில் பொருளாதார நிபுணர் பா.பத்மநாபன் பங்கேற்று, ‘மியூச்சுவல் ஃபண்ட் குறிக்கோ ளுடன் கூடிய முதலீடு’ என்ற தலைப்பில் பேசியதாவது:

    நாம்நமதுவாழ்க்கையில் கல்வி,திருமணம், கனவு இல்லம், ஓய்வு காலம் போன்றவற்றுக் காக சேமித்து வருகிறோம். இன்று திருமணத் துக்கு சராசரியாக ரூ.20 லட்சம் செலவிடப்படு கிறது. இதுவே 20 ஆண்டுகள் கழித்து அது ரூ.77 லட்சமாக உயரும். இதற்கு காரணம் பண வீக்கம்.

    தங்கள் குழந்தைகளின் உயர் கல்விக்காக, மருத்துவ படிப்பாக இருந்தால் ரூ.1.50 கோடி செலவாகும். மருத்துவம் அல்லாத உயர் கல்வி படிப்புக்கு ரூ.25 லட்சம் சராசரியாக செலவாகும். இது 17 ஆண்டுகள் கழித்து அது ரூ.92.50 லட்சமாக உயரும். இந்த செலவுகளைச் சமாளிக்க திருமண செல வுக்கு மாதம் ரூ.6,750, உயர் கல்விக்கு மாதம் ரூ.12,500 வீதம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். ஓய்வு காலப் பலன்களுக்காக மாதம் ரூ.10,000 வீதம் ஆண்டுதோறும் 10 சதவீதம் உயர்த்தி முதலீடு செய்யலாம்.

    நமது முதலீடு பண வீக்கத்தைவிட அதிக மான லாபம் தரக்கூடியதாக இருக்க வேண்டும். அது மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வ தன் மூலம் முடியும். மியூச்சுவல் ஃபண்டில் பெரிய அளவில் ரிஸ்க் இல்லை. ஆனால் ஏற்ற இறக்கம் நிச்சயம் இருக்கும். மியூச்சுவல் ஃபண்டில் ஆண்டுக்கு சராசரியாக 12% லாபம் ஈட்ட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

    முதுநிலை மேலாளர் எஸ்.கோபிநாத்

    மிரே அசட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவன முதுநிலை மேலாளர் எஸ்.கோபிநாத் பேசியதாவது: ஒரு பொருளின் இன்றையவிலை, 20 ஆண்டுகள் கழித்து மேலும் உயர்ந்திருக்கும். இதைத் தான் பண வீக்கம் என்கிறோம். இன்று நாம் பணமாக சேர்த்து வைத்திருந்தால் வரும் காலங்களில் அது மதிப்பிழக்கும். ஒவ் வொரு ஆண்டும் பணவீக்கம் இருந்து கொண்டே இருக்கும். எனவே பணத்தை முதலீடு செய்ய வேண்டும். அதற்கு சிறந்த தேர்வு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, அந்த சேவையை மிரே மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் வழங்குகிறது.

    இந்நிறுவனம் ரூ.2.10 லட்சம் கோடி முதலீட்டை கையாள்கிறது. நாடு முழுவதும் 25 கிளைகளைக் கொண்டுள்ளது. மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்தால்தான் எதிர்காலத்தில் செலவுகளை சமாளிக்க முடியும். மியூச்சுவல் ஃபண்டில் வெளிப்படைத் தன்மை உள்ளது. இதில் நீண்டகால முதலீடு செய்தால்தான் I பலன் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிகர லாபம் ரூ.305 கோடி

    July 27, 2025
    வணிகம்

    மாற்றம் தரும் இங்கிலாந்துடனான ஒப்பந்தம்: வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

    July 27, 2025
    வணிகம்

    தொடர்ந்து 3-வது நாளாக குறைந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

    July 26, 2025
    வணிகம்

    ஆபாச காட்சிகளை ஒளிபரப்பும் 25 ஓடிடி தளங்களுக்கு தடை

    July 26, 2025
    வணிகம்

    இங்கிலாந்து உடனான வர்த்தக ஒப்பந்தத்தால் தமிழகத்துக்கு பலன் என்ன?

    July 25, 2025
    வணிகம்

    ஒயின், ஜாம் தயாரிப்புக்காக கொள்முதல்: கிருஷ்ணகிரியில் செர்ரி பழம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

    July 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான ஒப்புதலை விரைந்து வழங்க பிரதமரிடம் தமிழக அரசு அழுத்தம்
    • இந்த 10 வைட்டமின் கே நிறைந்த உணவுகளுடன் வெறும் 30 நாட்களில் இயற்கையாகவே வலுவான எலும்புகளைப் பெறுங்கள்
    • ‘ஞான பாரத இயக்கம்’ திட்டத்துக்கு வித்திட்ட தஞ்சை மணிமாறன்: பிரதமர் மோடி புகழாரம்
    • இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை மெய்மறந்து ரசித்த பிரதமர் மோடி | கங்கைகொண்ட சோழபுரம் முப்பெரும் விழா
    • ஆஸ்ட்ரோவின் சா யூன் வூ தனது ஜூலை 28 இராணுவப் பட்டியலுக்கு முன்னதாக ஆர்டன் சோவுடன் KPOP அரக்கன் ஹண்டர்ஸ் பாடல் இலவச கவர்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.