Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»ஏஐ வரவால் கடின உழைப்பாளிகளுக்கான தேவை இனி இருக்காது: சந்தை நிபுணர் சவுரப் முகர்ஜி கருத்து
    வணிகம்

    ஏஐ வரவால் கடின உழைப்பாளிகளுக்கான தேவை இனி இருக்காது: சந்தை நிபுணர் சவுரப் முகர்ஜி கருத்து

    adminBy adminApril 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஏஐ வரவால் கடின உழைப்பாளிகளுக்கான தேவை இனி இருக்காது: சந்தை நிபுணர் சவுரப் முகர்ஜி கருத்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வரவால் கடின உழைப்பாளிகளுக்கான தேவை எதிர்காலத்தில் இருப்பதற்கான வாய்ப்பில்லை என்று போர்ட்போலியோ-மேலாண்மை சேவை நிறுவனமான மார்செல்லஸ் இன்வெஸ்ட்மெண்ட் மேனேஜர்ஸ் நிறுவனரும், சந்தை நிபுணருமான சவுரப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: இந்த தசாப்தத்தில் இந்தியா ஒரு புதிய பொருளாதார கட்டத்தில் நுழைந்துள்ளது. அங்கு சம்பளம் பெறும் நடுத்தர வர்க்கத்தினருக்கான வேலைவாய்ப்பு படிப்படியாக அழிவை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எங்களின் பெற்றோர்கள் ஒரு நிறுவனத்தில் 30 ஆண்டுகள் பணியாற்றிய பழைய மாடல் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தை கட்டியெழுப்பிய வேலை கட்டுமானம் இனி நிலையானதாக இருக்காது.

    கடின உழைப்பாளிகளின் வர்க்கத்துக்கு மாற்றாக இனி ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களின் பயன்பாடு பரவலாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒயிட் காலர் பணியாளர்கள் செய்ய வேண்டியவற்றில் பெரும்பாலானவை இப்போது ஏஐ தொழில்நுட்பத்தால் செய்து முடிக்கப்படுகிறது. கூகுள் அதன் கோடிங் பணியில் மூன்றில் ஒரு பகுதியை ஏற்கெனவே ஏஐ-யால் செய்து வருவதாக கூறியுள்ளது. இதேநிலைதான் இந்திய தொழில்நுட்பம், ஊடகம் மற்றும் நிதி ஆகியவற்றுக்கும்.

    தொழில்நுட்பத்தின் விரைவான முன்னேற்றம் காரணமாக நடுத்தர அளவிலான தொழில்வாய்ப்புகள் தற்போது தனது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கான நெருக்கடிகளை அதிக அளவில் சந்தித்து வருகின்றன.

    சம்பளம் வாங்கும் நடுத்தர வர்த்தகத்தினரின் இடையே இருள், அழிவு நிலை சூழ்ந்துள்ளபோதிலும், அரசு குறிப்பிட்ட சில சாதனைகளை சப்தமில்லாமல் செய்து முடித்துள்ளது. அதன்படி, ஜன்தன், ஆதார், மொபைல் ஆகியவற்றை ஒன்றாக இணைத்துள்ளது. இது வரவிருக்கும் தொழில்முனைவோர் அலைக்கு சிறப்பான களத்தை அமைத்து கொடுக்கும்.

    கார்ப்பரேட் தொழில்களுக்கு காட்டிய புத்திசாலித்தனம் மற்றும் மன உறுதியை தொழில்முனைவோராக நாம் பயன்படுத்தினால் செழிப்பின் புதிய எந்திரமாக மாற முடியும். ஸ்திரத்தன்மை மற்றும் சம்பளத்துடன் தொடர்புடைய தத்துவங்ளை இந்திய சமூகம் மாற்றிக்கொள்ள வேண்டும். இவ்வாறு சவுரப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பொருளாதார நிபுணர் சோம வள்ளியப்பன் கூறுகையில், “ ஓய்வு பெறும் வரை ஒரே நிறுவனத்தில் பணி செய்வது என்கிற நிலை மாறி பல ஆண்டுகள் ஆகின்றன. அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தவிர 60, 70 விழுக்காடு நிறுவனங்களில் இந்த நடைமுறை இல்லை.

    செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி மனிதர்களால் செய்யப்படும் பல்வேறு வேலைகளை மிகக் குறைந்த நேரத்தில், குறைந்த செலவில் சிறப்பாக செய்ய முடியும். முன்பு கம்ப்யூட்டர் வந்தபோதும் வங்கிகள் ரயில்வேகளில் ஊழியர்களின் எண்ணிக்கை குறைவாகிவிடும் என்றார்கள். மக்கள் தொகை பெருக்கம் பொருளாதார வளர்ச்சி ஆகிய இரண்டும் இருக்கும் வரை புதிய புதிய வேலைவாய்ப்புகள் உருவாகிக் கொண்டேதான் இருக்கும்” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    சிபில் ஸ்கோர் கேட்பது ஏன்? – மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரி விளக்கம்

    June 28, 2025
    வணிகம்

    தங்கம் விலையில் தொடரும் வீழ்ச்சி – இன்று பவுனுக்கு ரூ.440 குறைந்தது!

    June 28, 2025
    வணிகம்

    தங்கம் விலை தொடர்ந்து சரிவு – 4 நாட்களில் ரூ.2 ஆயிரம் குறைந்தது

    June 28, 2025
    வணிகம்

    கொடைக்கானலில் காய்த்து குலுங்கும் ஆப்பிள்கள்!

    June 27, 2025
    வணிகம்

    தங்கம் விலை ஒரு கிராம் ரூ.9000-க்கு கீழ் குறைந்தது

    June 27, 2025
    வணிகம்

    கால்நடைகளை எளிதாக விற்பனை செய்ய புதிய இணையதளம்

    June 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
    • அமித் ஷா கருத்தால் அதிமுக – பாஜகவில் சலசலப்பு: கூட்டணியில் பங்கா, ஆட்சியில் பங்கா என தொடரும் குழப்பம்
    • பிராடாவின் சர்ச்சைக்குரிய கோலபுரி சாப்பல்: கலாச்சார ஒதுக்கீடு அல்லது உத்வேகம்? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நா.முத்துக்குமாரின் கவிதையை திரைப்படமாக்கும் வெற்றிமாறன்!
    • காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர், சூளைமேடு அஞ்சுகம் பள்ளிகளில் ரூ.14 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.