Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஜிஎஸ்டி குறைப்புக்கு ஒப்புதல்: நிர்மலா சீதாராமன் தகவல்
    வணிகம்

    எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஜிஎஸ்டி குறைப்புக்கு ஒப்புதல்: நிர்மலா சீதாராமன் தகவல்

    adminBy adminSeptember 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஜிஎஸ்டி குறைப்புக்கு ஒப்புதல்: நிர்மலா சீதாராமன் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் உட்பட அனைத்து மாநிலங்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் ஜிஎஸ்டி குறைப்பு நடைபெற்றுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    ஜிஎஸ்டி விகித மாற்றம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: ஜிஎஸ்டி அமல்படுத்திய 8 ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி குறைப்பு ஒருமித்த கருத்தின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டுள்ளது. சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி அறிவித்தபடி இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

    இதற்கு மேற்கு வங்கம், கேரளா, பஞ்சாப் உட்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களும் ஒப்புதல் அளித்தன. இதில் எந்த எதிர்ப்பும் எழவில்லை. பிரதமர் மோடியின் எண்ணம் மிகவும் எளிமையானது. நடுத்தர குடும்பங்களுக்கு மிகப் பெரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றுதான் அவர் விரும்புகிறார்.

    அதேநேரத்தில் கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்த, வருவாய் இழப்பு குறித்த மாநிலங்களின் கவலைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். ஆனால், ஜிஎஸ்டி வசூல் என்பது மத்திய, மாநில அரசுகளை சார்ந்தது. இதில் மாநில அரசு பாதிக்கப்படுகிறது என்றால், மத்திய அரசும் பாதிக்கப்படுகிறது என்பது உண்மை. ஆனால், சாதாரண மக்கள் பயன்பட வேண்டும், அவர்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நோக்கம். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

    நுகர்வோருக்கு பலன் சேர வேண்டும்: ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பயன்​கள் ஒவ்​வொரு நுகர்​வோரை​யும் சென்​றடை​யும் வகை​யில் தொழில்​துறை​யினர் நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழிற்​துறை அமைச்​சர் பியூஷ் கோயல் வலி​யுறுத்தி உள்​ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகை​யில், “தொழில்​துறை​யினர் பிரதமர் மோடிக்கு இரண்டு உறு​தி​மொழிகளை அளிக்க வேண்​டும்.

    முதலா​வ​தாக, ஜிஎஸ்டி குறைப்​பிலிருந்து சேமிக்​கப்​படும் ஒவ்​வொரு ரூபாயை​யும் நுகர்​வோருக்கு வழங்​கு​வதற்கு தொழில்​துறை​யினர் உறு​தி​யேற்க வேண்​டும். இரண்​டாவது, நாட்டு மக்​களிடம் இந்​திய தயாரிப்​பு​களை தீவிர​மாக கொண்டு சேர்த்து அவற்​றின் விற்​பனையை ஊக்​குவிக்க உதவ வேண்​டும். இவை இரண்​டை​யும் நிறைவேற்ற பிரதமருக்கு தொழில்​துறை நிறு​வனங்​கள் உறு​தி​யளிக்க வேண்​டும்” என்​றார்​.

    மீன் வியாபாரத்தில் போட்டியை ஏற்படுத்தும்: ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து மீன்​வளத்​துறை அமைச்​சகம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: மீன் உற்​பத்​தி​யில் இந்​தியா உலகள​வில் இரண்​டாவது பெரிய நாடாக உள்​ளது. இங்கு ஆண்டுக்கு 95 லட்​சம் டன்கள் மீன் பிடிக்​கப்​படு​கிறது. கடல் உணவு ஏற்​றுமதி கடந்த நிதி​யாண்​டில் ரூ.60,000 கோடியை கடந்​தது. மீன்​வளத்​துறை தற்​போது 3 கோடிக்​கும் மேற்​பட்ட மக்​களின் வாழ்​வா​தா​ரத்​துக்கு உதவு​கிறது.

    மீன் எண்​ணெய், பதப்​படுத்​தப்​பட்ட மீன் வகைகளுக்​கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்​திலிருந்து 5 சதவீத​மாக குறைக்​கப்​பட்​டுள்​ளது. டீசல் இயந்​திரங்​கள், பம்​பு​கள், வலைகள் மற்​றும் மீன் பிடித் தொழில் மற்​றும் மீன் வளர்ப்பு பொருட்​களுக்​கான ஜிஎஸ்டி வரி​யும் 5 சதவீத​மாக குறைந்​துள்​ள​தால், மீனவர்​கள் மீன் பிடிப்​ப​தற்​கான செலவு குறை​யும். இதனால் போட்டி ஏற்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    GIS: சொத்து மதிப்பீட்டுக்கு உதவும் புவியியல் தகவல் முறைமை தொழில்நுட்பம்!

    September 5, 2025
    வணிகம்

    இந்திய ஜவுளித் துறை இனி..? – ஜிஎஸ்டி 2.0 தாக்கம் பகிரும் திருப்பூர் தொழில் துறையினர்

    September 5, 2025
    வணிகம்

    மீன் உணவு பொருட்கள், உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு வேண்டும்: மீனவ தொழிலாளர் சங்கம் கோரிக்கை

    September 5, 2025
    வணிகம்

    ஜிஎஸ்டி வரி குறைப்பால் அரசுக்கு ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்: எஸ்பிஐ

    September 5, 2025
    வணிகம்

    தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு: பவுனுக்கு ரூ.560 அதிகரிப்பு!

    September 5, 2025
    வணிகம்

    ஜிஎஸ்டி 5%, 0 ஆக குறையும் பொருட்கள்; 40% ஆக உயரும் பொருட்கள் – ஒரு பட்டியல்

    September 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • முன்னாள் பெண் அமைச்சரை தொந்தரவு செய்தோர் மீது நடவடிக்கை: புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர்
    • GIS: சொத்து மதிப்பீட்டுக்கு உதவும் புவியியல் தகவல் முறைமை தொழில்நுட்பம்!
    • பால்கனி தோட்டத்தில் f enugreek (மெதி) வளர்ப்பது எப்படி
    • ரஷ்ய எண்ணெய் இறக்குமதியால் பிராமணர்களே பயனடைகிறார்கள் என்ற நவரோவின் வாதம் தவறானது: இந்தியா
    • செங்கோட்டையன் திமுகவில் இணைந்தால் வரவேற்பீர்களா? – அப்பாவு பதில்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.