Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»உள்நாட்டு பொருட்களை மட்டுமே விற்க வேண்டும்: வியாபாரிகளிடம் பிரதமர் மோடி வேண்டுகோள்
    வணிகம்

    உள்நாட்டு பொருட்களை மட்டுமே விற்க வேண்டும்: வியாபாரிகளிடம் பிரதமர் மோடி வேண்டுகோள்

    adminBy adminAugust 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    உள்நாட்டு பொருட்களை மட்டுமே விற்க வேண்டும்: வியாபாரிகளிடம் பிரதமர் மோடி வேண்டுகோள்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: டெல்​லி​யில் ரூ.11,000 கோடி மதிப்​பிலான நெடுஞ்​சாலை திட்​டங்​களை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்​கி வைத்​தார். அப்​போது பேசிய அவர், உள்​நாட்டு பொருட்​களை மட்​டுமே வியா​பாரி​கள் விற்​பனை செய்ய வேண்​டும் என்று அழைப்பு விடுத்​தார். தலைநகர் டெல்​லி​யின் சிவ​மூர்த்தி பகு​தி​யில் இருந்து ஹரி​யா​னா​வின் குரு​கி​ராம் வரை 29 கி.மீ. தொலை​வுக்கு புதிய நெடுஞ்​சாலை அமைக்​கப்​பட்​டது.

    இதில் ஹரி​யா​னா​வுக்கு உட்​பட்ட 19 கி.மீ. தொலைவு சாலை கடந்த ஆண்டு மார்ச் மாதம் திறக்​கப்​பட்​டது. இதைத் தொடர்ந்து டெல்லி எல்​லைக்கு உட்​பட்ட 10 கி.மீ. தொலைவு சாலை பணி ரூ.5,360 கோடி​யில் மேற்​கொள்​ளப்​பட்​டது. துவாரகா நெடுஞ்​சாலை என்​றழைக்​கப்​படும் இந்த சாலையை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று திறந்​து​வைத்​தார்.

    இதே​போல டெல்​லி​யின் அலிப்​பூர் முதல் டிச்​சான் கலான் பகுதி வரை ரூ.5,580 கோடி​யில் நகர்ப்​புற விரி​வாக்க சாலை அமைக்கப்பட்டு உள்​ளது. டெல்​லி​யின் 3-வது ரிங் சாலை என்​றழைக்​கப்​படும் இந்த சாலையை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று திறந்து வைத்​தார். டெல்லி ரோஹினி பகு​தி​யில் நடந்த விழா​வில் அவர் பேசி​ய​தாவது: டெல்​லி​யின் போக்​கு​வரத்து கட்டமைப்புகளை மேம்​படுத்த மத்​திய அரசு முன்​னுரிமை அளித்து வரு​கிறது.

    புதி​தாக திறக்​கப்​பட்​டிருக்​கும் இரு நெடுஞ்​சாலைகளால் வியா​பாரி​கள், விவ​சா​யிகள், பொது​மக்​கள் பெரிதும் பயன் அடைவார்கள். டெல்லி மக்​களின் அனைத்து பிரச்​சினை​களுக்​கும் தீர்வு காணப்​பட்டு வரு​கிறது. குறிப்​பாக யமுனை நதி தூய் மைப்​படுத்​தப்​படு​கிறது. காற்று மாசுவை கட்​டுப்​படுத்த பல்​வேறு திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. டெல்​லி​யில் தற்​போது 650 மின்​சார பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன. இந்த எண்​ணிக்கை 2,000 ஆக உயர்த்​தப்​படும்.

    கடந்த காங்​கிரஸ் ஆட்​சிக் காலத்​தில் மிக முக்​கிய கோப்​பு​கள் மிக நீண்ட கால​மாக தேங்கி கிடந்​தன. பாஜக ஆட்​சிக் காலத்​தில் கோப்​பு​கள் விரை​வாக நகர்​கின்​றன. வளர்ச்​சித் திட்​டங்​கள் வேகம் பெற்​றுள்​ளன. கடந்த 11 ஆண்​டு​களில் சாலை, ரயில், விமான போக்​கு​வரத்து கட்​டமைப்​பு​கள் கணிச​மாக மேம்​படுத்​தப்​பட்டு உள்​ளன.

    விரை​வில் ஜிஎஸ்டி வரி குறைக்​கப்பட உள்​ளது. எனவே வரும் தீபாவளி பண்​டிகை பொது​மக்​களுக்கு இரட்டை தீபாவளி​யாக அமை​யும். அனைத்து தரப்பு மக்​களுக்​கும் இரட்டை போனஸ் கிடைக்​கும். கடந்த காலத்​தில் காதித் துறை நலிவடைந்த நிலை​யில் இருந்​தது. பாஜக ஆட்​சிப் பொறுப்​பேற்ற பிறகு காதித் துறை தொடர்ந்து வலு​வடைந்து வரு​கிறது. காதி விற்​பனை 7 மடங்கு வரை அதி​கரித்து உள்​ளது.

    ஒரு காலத்​தில் வெளி​நாடு​களில் இருந்து மொபைல் போன்​களை இறக்​குமதி செய்து வந்​தோம். இப்​போது ஓராண்​டில் சுமார் 35 கோடி மொபைல்​போன்​கள் இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​படு​கின்​றன. இவை வெளி​நாடு​களுக்​கும் ஏற்​றுமதி செய்​யப்​படு​கின்றன. இந்த நேரத்​தில் இந்​திய வியா​பாரி​களிடம் ஒரு வேண்​டு​கோளை முன்​வைக்​கிறேன்.

    இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​பட்ட பொருட்​களை மட்​டுமே நீங்​கள் விற்​பனை செய்ய வேண்​டும். வெளி​நாட்டு பொருட்​களை விற்பனை செய்​வதை தவிர்க்க வேண்​டும். இதே​போல நாட்டு மக்​கள் அனை​வரும் உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட பொருட்​களை மட்டுமே வாங்க வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    பெங்களூருவில் தோசை சுடும் ரோபோவை கண்டுபிடித்த பொறியாளர்!

    August 18, 2025
    வணிகம்

    அமெரிக்க வரி விதிப்பை சமாளிக்க அவசர கால கடனுதவி தேவை:‘சைமா’ கோரிக்கை

    August 17, 2025
    வணிகம்

    யுரேனியம் எடுக்க, இறக்குமதிக்கு தனியாரை அனுமதிக்க அரசு திட்டம்!

    August 17, 2025
    வணிகம்

    12% வரம்பில் உள்ள பொருட்களின் ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறைகிறது

    August 17, 2025
    வணிகம்

    வேலைவாய்ப்பா, வேலை உத்தரவாதமா?

    August 16, 2025
    வணிகம்

    ஓஎன்ஜிசியின் எண்ணெய் உற்பத்தி குறைந்துள்ளது: செயல் இயக்குநர் உதய் பாஸ்வான் தகவல்

    August 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இந்து அடையாளத்துடன் 12 பெண்களை மணம் முடித்து மதம் மாற கட்டாயப்படுத்தியவர் கைது
    • சென்ட்ரல் நிலையத்தில் ரயில்களில் அபாயச் சங்கிலியை இழுத்து நிறுத்திய 96 பேர் மீது வழக்குப்பதிவு
    • எந்த நாட்டில் மிகவும் விஷ பாம்புகள் உள்ளன? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஒடிசாவின் நான்கு முக்கிய மாவட்டங்களில் தங்க வயல்: 20 டன் அளவுக்கு தங்கம் இருக்கலாம் என மதிப்பீடு
    • சென்னை திருவல்லிக்கேணியில் சாரணர் இயக்கத்துக்கு நவீன வசதியுடன் தலைமை அலுவலகம்: பள்ளிக்கல்வித் துறை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.