Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, June 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»ஈரான் தாக்குதல் எதிரொலி: கச்சா எண்ணெய் விலை 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு!
    வணிகம்

    ஈரான் தாக்குதல் எதிரொலி: கச்சா எண்ணெய் விலை 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு!

    adminBy adminJune 23, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஈரான் தாக்குதல் எதிரொலி: கச்சா எண்ணெய் விலை 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ஈரானின் அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கியதை தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு இன்று (ஜூன் 23) உயர்ந்துள்ளது.

    இன்றைய நிலவரப்படி பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.92 டாலர் அல்லது 2.49% உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 78.93 டாலராக இருந்தது. அதேபோல அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 1.89 டாலர் அல்லது 2.56% உயர்ந்து 75.73 டாலராக இருந்தது.

    இது கடந்த ஜனவரி மாதத்துக்கு பிந்தைய உச்சபட்சமான விலை உயர்வு ஆகும். ஜூன் 13 அன்று இஸ்ரேல் ஈரான் போர் தொடங்கியதிலிருந்து, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 13% உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் இடைநிலை கச்சா எண்ணெய் விலை தோராயமாக 10% அதிகரிப்பைக் கண்டுள்ளது.

    ஈரானின் முக்கிய அணுசக்தி தளங்களின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களின் விளைவாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. ஈரான் ஒபெக்-ன் (OPEC) மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளர் நாடு ஆகும்.

    அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்த நிலையில், வரும் நாட்களில் விலை ஏற்றம் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கின்றனர். எனவே இப்போது கச்சா எண்ணெய் விலை ஐந்து மடங்கு உயர்ந்துள்ளது.

    இதுகுறித்து பேசிய ஸ்பார்டா கமாடிட்டிஸின் மூத்த ஆய்வாளர் ஜூன் கோ, ‘ கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு முக்கியமான நீர்வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தி ஒரு மாதத்திற்கு மூடப்பட்டால், பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 110 டாலராக உயரக்கூடும்’ என்று கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    தங்கம் விலையில் தொடரும் வீழ்ச்சி – இன்று பவுனுக்கு ரூ.440 குறைந்தது!

    June 28, 2025
    வணிகம்

    தங்கம் விலை தொடர்ந்து சரிவு – 4 நாட்களில் ரூ.2 ஆயிரம் குறைந்தது

    June 28, 2025
    வணிகம்

    கொடைக்கானலில் காய்த்து குலுங்கும் ஆப்பிள்கள்!

    June 27, 2025
    வணிகம்

    தங்கம் விலை ஒரு கிராம் ரூ.9000-க்கு கீழ் குறைந்தது

    June 27, 2025
    வணிகம்

    கால்நடைகளை எளிதாக விற்பனை செய்ய புதிய இணையதளம்

    June 27, 2025
    வணிகம்

    வரும் நாட்களில் தங்கம் விலை உயர வாய்ப்பு: புதிய உச்சத்தைத் தொடும் என வியாபாரிகள் கருத்து

    June 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உபரி நீர் திறப்பு அதிகரிப்பு: காவிரி கரையோர 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
    • உலகின் 10 பழமையான நகரங்கள் மற்றும் அவை ஏன் பார்வையிடத்தக்கவை
    • தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் இடஒதுக்கீடு – மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் விவரம் சேகரிப்பு
    • பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல் – 16 ராணுவ வீரர்கள் பலி
    • புதுவை மாநில பாஜக தலைவர் பதவிக்கு நாளை வேட்புமனு தாக்கல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.