Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 20
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»இந்திய ரஃபேல் போர் விமானங்களின் துல்லிய தாக்குதல்களால் தஸ்ஸோ பங்குகள் 66 சதவீதம் உயர்வு
    வணிகம்

    இந்திய ரஃபேல் போர் விமானங்களின் துல்லிய தாக்குதல்களால் தஸ்ஸோ பங்குகள் 66 சதவீதம் உயர்வு

    adminBy adminMay 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்திய ரஃபேல் போர் விமானங்களின் துல்லிய தாக்குதல்களால் தஸ்ஸோ பங்குகள் 66 சதவீதம் உயர்வு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    இந்திய விமானப் படையின் ரஃபேல் போர் விமானங்கள், பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள், விமானப்படைத் தளங்கள் மீது நடத்திய துல்லிய தாக்குதல்களால் பிரான்ஸின் தஸ்ஸோ நிறுவனத்தின் பங்குகள் 66 சதவீதம் உயர்ந்துள்ளது.

    பிரான்ஸின் தஸ்ஸோ நிறுவனத்திடம் இருந்து ரூ.59,000 கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்கி உள்ளது. இவை இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டு ஹரியானாவின் அம்பாலா, மேற்குவங்கத்தின் ஹசிமாரா விமானப்படைத் தளங்களில் நிறுத்தப்பட்டு உள்ளன.

    கடந்த 7-ம் தேதி பாகிஸ்தானில் செயல்பட்ட 9 தீவிரவாத முகாம்களை, இந்திய போர் விமானங்கள் ஏவுகணைகளை வீசி அழித்தன. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயரிடப்பட்ட இந்த ராணுவ நடவடிக்கையில் இந்திய விமானப் படையின் ரஃபேல் போர் விமானங்கள் முக்கிய பங்கு வகித்தன. அந்த போர் விமானத்தில் சீறிப் பாய்ந்த ஸ்கால்ப்-இஜி ஏவுகணைகள் தீவிரவாத முகாம்களை மிகத் துல்லியமாக தாக்கி தரைமட்டமாக்கின.

    பாகிஸ்தான் எல்லைக்குள் நுழையாமல் இந்திய எல்லையில் இருந்தே சுமார் 100 கி.மீ. தொலைவில் இருந்த தீவிரவாத முகாம்களை ரஃபேல் போர் விமானங்கள் அழித்தது சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு கடந்த 7, 8, 9, 10 ஆகிய தேதிகளில் இந்தியா, பாகிஸ்தான் இடையே மிகக் கடுமையான சண்டை நடைபெற்றது. இந்த சண்டையிலும் ரஃபேல் போர் விமானங்கள், பாகிஸ்தான் விமானப் படையை திணறடித்தன.

    குறிப்பாக பாகிஸ்தான் ராணுவ தலைமையகமான ராவல் பிண்டியில் உள்ள நூர்கான் விமான படைத் தளம், அந்த நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள சுக்குர் விமான படைத்தளம், போலாரி விமான படைத் தளம், ஜோகோபாபாத் விமான படைத் தளம், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஷோர்கோட் விமான படைத் தளம், முரித் விமான படைத் தளம், சியால்காட் விமான படைத் தளம், பஸ்ரூர் விமான படைத் தளம், சுனியன் விமான படைத் தளம், சர்கோதா விமான படைத் தளம் ஆகியவற்றின் மீது ரஃபேல், சுகோய், மிராஜ் ரக போர் விமானங்கள் சக்திவாய்ந்த ஏவுகணைகளை வீசி தொடர் தாக்குதல்களை நடத்தின.

    இந்திய விமானப் படையின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அமெரிக்காவின் உதவியை பாகிஸ்தான் அரசு நாடியது. அமெரிக்காவின் அறிவுறுத்தலின்படி பாகிஸ்தான் ராணுவ மூத்த அதிகாரி, இந்திய ராணுவ அதிகாரியை ஹாட்லைனில் தொடர்பு கொண்டு நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பிறகு இரு நாடுகளுக்கு இடையே நேற்று முன்தினம் சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்திய ராணுவம், விமானப் படையை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் ராணுவம் பணிந்திருக்கிறது என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    இந்த சூழலில் ரஃபேல் போர் விமானங்களை தயாரிக்கும் தஸ்ஸோ நிறுவனத்தின் பங்குகள் ஐரோப்பிய பங்கு சந்தையில் 66.7 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. மேலும் ரஃபேல் போர் விமானங்களை வாங்கள் பல்வேறு நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன.

    இந்திய கடற்படைக்காக ரூ.63,000 கோடியில் 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்க அண்மையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த போர் விமானங்கள் அடுத்த 37 மாதங்கள் முதல் 65 மாதங்களில் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. இவை ஐஎன்எஸ் விக்ராந்த், ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ஆகிய போர்க்கப்பல்களில் நிலைநிறுத்தப்பட உள்ளன. இதன்பிறகு இந்திய கடற்படையின் பலம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    சென்னையில் மேலும் 2 இடங்களில் டெலிவரி ஊழியர் ஓய்வு கூடங்கள்!

    July 20, 2025
    வணிகம்

    தங்கம் விலை மீண்டும் ரூ.73,000-ஐ தாண்டியது!

    July 20, 2025
    வணிகம்

    நாட்டுக்கு பயன் அளித்தால் மட்டுமே வர்த்தக ஒப்பந்தம்: அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி

    July 20, 2025
    வணிகம்

    பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க 17 நாடுகள் விருப்பம்

    July 20, 2025
    வணிகம்

    காசியாபாத்தில் சைவ உணவு மட்டும் தற்காலிகமாக தயாரித்து வழங்கும் கேஎஃப்சி: காரணம் என்ன?

    July 20, 2025
    வணிகம்

    மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 11 ஆண்டுகளில் 8 மடங்கு அதிகரிப்பு – அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்

    July 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீஸார் விசாரணை – பாஜக கண்டனம்
    • மக்கனா நீங்கள் நினைப்பது போல் “ஆரோக்கியமானதாக” இருக்கக்கூடாது; ஊட்டச்சத்து நிபுணர் 3 பக்க விளைவுகளை வெளிப்படுத்துகிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 3 முக்கிய விஷயங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் பதிலளிக்க வேண்டும்: காங்கிரஸ்
    • ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை – அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் மக்கள் அதிர்ச்சி
    • பாலிவுட்டை மலைக்க வைத்த ‘சயாரா’ வசூல்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.