Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»“இந்திய சாலைகள் இன்னும் 2 ஆண்டுகளில் அமெரிக்காவை போல இருக்கும்” – நிதின் கட்கரி
    வணிகம்

    “இந்திய சாலைகள் இன்னும் 2 ஆண்டுகளில் அமெரிக்காவை போல இருக்கும்” – நிதின் கட்கரி

    adminBy adminJune 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “இந்திய சாலைகள் இன்னும் 2 ஆண்டுகளில் அமெரிக்காவை போல இருக்கும்” – நிதின் கட்கரி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான செலவினங்களை மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது என்று தெரிவித்த நிதின் கட்கரி, இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்திய சாலை உள்கட்டமைப்பு அமெரிக்காவுடன் ஒப்பிடத்தக்கதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

    ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, “இந்திய சாலை உள்கட்டமைப்பு ஏற்கெனவே மாறிவிட்டது. எனினும், நீங்கள் இப்போது பார்ப்பது வெறும் ட்ரெய்லர்தான். படம் இன்னும் தொடங்கப்படவில்லை. இன்னும் இரண்டு ஆண்டுகளில், இந்திய சாலை உள்கட்டமைப்பு, அமெரிக்காவைப் போலவே இருக்கும். இதை நீங்கள் காண்பீர்கள். அமெரிக்காவைச் சேர்ந்த சிலர் என்னிடம் பேசும்போது, இந்திய சாலை உள்கட்டமைப்பு வசதிகள் அமெரிக்காவை விட சிறப்பாக இருப்பதாகக் கூறினார்கள்.

    மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள நல்ல சாலைகளால் இந்தியாவில் தளவாடச் செலவுகள் குறைத்துள்ளன. அது ஏற்றுமதிக்கான போட்டித்தன்மையை மேலும் மேம்படுத்தும். நாம் நமது ஏற்றுமதியை உயர்த்தினால், அது நமது விவசாயத் துறை, உற்பத்தித் துறை, சேவைத் துறை உட்பட அனைத்து துறைகளையும் மேம்படுத்தும். இந்தியாவில் தளவாடச் செலவு 16 சதவீதமாக இருந்தது. இது சீனாவில் 8 சதவீதமாகவும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 12 சதவீதமாகவும் உள்ளது. மேம்பட்ட சாலைகள் மூலம், பாஜக தலைமையிலான அரசாங்கம் தளவாடச் செலவுகளை 9 சதவீதமாகக் குறைத்ததாகக் குறைத்துள்ளது.

    இந்தியாவில் தற்போது, 25 பசுமை வழி விரைவுச் சாலைகள், 3,000 கி.மீ துறைமுக இணைப்பு நெடுஞ்சாலைகள், ஆன்மிக சுற்றுலாத் தலங்களை இணைக்கும் சாலைகள் ஆகியவை ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன. புத்த மத சுற்றுலாத் தலங்களை இணைக்கும் சாலைகள், சார் தாம் கோயில்களை இணைக்கும் சாலைகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை,

    ஜம்மு மற்றும் ஸ்ரீநகருக்கு இடையே 36 சுரங்கப்பாதைகளை நாங்கள் உருவாக்கி வருகிறோம். இவற்றில் 23 சுரங்கப்பாதைகள் நிறைவடைந்துள்ளன. மேலும் 5 சுரங்கப் பாதைகளுக்கான பணிகள் நடந்து வருகின்றன. மேலும் 35 மல்டி-மாடல் லாஜிஸ்டிக்ஸ் பூங்காக்களையும் நாங்கள் உருவாக்கி வருகிறோம்.

    பொது உள்கட்டமைப்பு என்பது பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பாகும். வர்த்தகம் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை இது மேம்படுத்துகிறது. உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமான இந்தியா, கடந்த பத்தாண்டுகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

    இந்தியா உலகின் இரண்டாவது பெரிய சாலை வலையமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் அதன் தேசிய நெடுஞ்சாலைகள் மொத்தம் சுமார் 1,46,000 கி.மீ நீளம் கொண்டவை. பிப்ரவரி 2025ல் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை (NH) வலையமைப்பு 2004 இல் 65,569 கி.மீ. ஆக இருந்தது. 2014-இல் அது 91,287 கி.மீ. ஆகவும், 2024 இல் 1,46,145 கி.மீ. ஆகவும் விரிவடைந்தது” என தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    இந்தியாவின் ஆகஸ்ட் மாத ஏற்றுமதி 9% அதிகரிப்பு, இறக்குமதி 7% சரிவு

    September 15, 2025
    வணிகம்

    வருமான வரி கணக்கு தாக்கலுக்கு அவகாசம் நீட்டிப்பு இல்லை: மத்திய அரசு விளக்கம்

    September 15, 2025
    வணிகம்

    நாட்டின் மொத்த விலை பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 0.52% ஆக உயர்வு

    September 15, 2025
    வணிகம்

    ஏ.சி., எல்இடி பல்பு தயாரிப்பாளர்களுக்கு பிஎல்ஐ ஊக்கத் தொகை திட்டத்துக்கு விண்ணப்ப பதிவு மீண்டும் தொடக்கம்

    September 15, 2025
    வணிகம்

    வருமான வரி கணக்கு 6 கோடி பேர் தாக்கல்

    September 15, 2025
    வணிகம்

    ஜிஎஸ்டி 13% வரை குறைக்கப்படுவதால் 140 கோடி மக்களுக்கும் பலன் கிடைக்கும்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 

    September 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஆந்திராவில் பள்ளிச் சுவர் இடிந்து விழுந்து 5 வயது மாணவர் உயிரிழப்பு; 10 பேர் காயம்
    • மாநிலத்துக்குள் மின்சார வர்த்தகம் மேற்கொள்ள ​பசுமை எரிசக்தி கழகத்துக்கு உரிமம் வழங்கல்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்
    • இந்தியாவின் ஆகஸ்ட் மாத ஏற்றுமதி 9% அதிகரிப்பு, இறக்குமதி 7% சரிவு
    • விப்ரியோ சதை உண்ணும் பாக்டீரியா தொற்று: ஒரு சிறிய காயம் ஒரு அம்மா தனது வாழ்க்கையை கிட்டத்தட்ட இழக்க வழிவகுத்தது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கேரளாவில் அமீபா தொற்றுக்கு இதுவரை 18 பேர் உயிரிழப்பு; பாதிப்பு 67 ஆக அதிகரிப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.