Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»இந்தியா – ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் முடிவடைவதால் தமிழகம் – ஜெர்மனி இடையிலான வர்த்தகம் அதிகரிக்கும்: தூதரக அதிகாரி உறுதி
    வணிகம்

    இந்தியா – ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் முடிவடைவதால் தமிழகம் – ஜெர்மனி இடையிலான வர்த்தகம் அதிகரிக்கும்: தூதரக அதிகாரி உறுதி

    adminBy adminMay 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்தியா – ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் முடிவடைவதால் தமிழகம் – ஜெர்மனி இடையிலான வர்த்தகம் அதிகரிக்கும்: தூதரக அதிகாரி உறுதி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் நிலையில், தமிழகம் – ஜெர்மனி இடையிலான வர்த்தகம் கணிசமாக அதிகரிக்கும் என்று சென்னையில் நடந்த கருத்தரங்கில் ஜெர்மனியின் தூதரக அதிகாரி கேத்ரின் மிசெரா லாங் தெரிவித்தார்.

    தென்னிந்திய வர்த்தக தொழில் சபை, தமிழக அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனம் (கைடன்ஸ் தமிழ்நாடு), ஜெர்மனியின் பிவிஎம்டபிள்யூ சங்கம் சார்பில் இந்தியா – ஜெர்மனி இடையிலான குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) குறித்த கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது. தமிழக குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை செயலர் அதுல் ஆனந்த் தலைமை தாங்கி, இந்தோ – ஜெர்மன் எம்எஸ்எம்இ உறவுகள் குறித்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டார்.

    பின்னர், அவர் பேசியதாவது: தமிழக பொருளாதாரத்தை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தும் நோக்கில் பல்வேறு தொழில் திட்டங்களை அரசு முன்னெடுத்து வருகிறது. அதன்படி, எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கும் ஒற்றை சாளர அனுமதி (சிங்கிள் விண்டோ கிளியரன்ஸ்) வழங்கப்பட்டு வருகிறது. இங்கு தொழில் மேற்கொள்ளும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இது எளிதாக இருக்கிறது.

    நாட்டிலேயே மிகவும் தொழில்மயம் ஆக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. தேசிய அளவில் 16 சதவீத தொழிற்சாலைகள் தமிழகத்தில்தான் உள்ளன. இங்கு 33 லட்சத்துக்கும் மேற்பட்ட எம்எஸ்எம்இ நிறுவனங்கள் உள்ளன. நாட்டிலேயே அரிசி ஏற்றுமதியில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    ஜெர்மனி தூதரக அதிகாரி கேத்ரின் மிசெரா லாங் பேசும்போது, ‘‘தமிழகத்தில் 200 நிறுவனங்கள் உட்பட நாடு முழுவதும் ஜெர்மனியை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்எஸ்எம்இ நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களுக்கு இந்தியா நல்ல ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் நிலையில், தமிழகம் – ஜெர்மனி இடையிலான வர்த்தகம் கணிசமாக அதிகரிக்கும்” என்றார்.

    இந்த நிகழ்வில் தென்னிந்திய வர்த்தக தொழில் சபையின் துணை தலைவர் வி.என்.சிவசங்கர், உறுப்பினர் ராமன் ரகு, பி.எம்.டபிள்யூ (இந்தியா) நிர்வாக இயக்குநர் தாமஸ் டோஸ், பிவிஎம்டபிள்யூ சங்கத்தின் (இந்தியா) இயக்குநர் டேனியல் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    கோ​யம்​பேடு சந்​தை​யில் தக்​காளி விலை ரூ.30 ஆக உயர்வு

    July 28, 2025
    வணிகம்

    அடுத்த ஆண்டு முதல்  வெளி சந்தைகளில் இருந்து 1,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்: மின் வாரிய அதிகாரிகள் தகவல்

    July 28, 2025
    வணிகம்

    தூத்துக்குடி மாவட்டத்தில் மினி உலக முதலீட்டாளர் மாநாடு: அமைச்சர் டிஆர்பி.ராஜா தகவல்

    July 28, 2025
    வணிகம்

    பிரபல டிசிஎஸ் நிறுவனம் 2% ஊழியரை குறைக்க முடிவு: 12,000 பேருக்கு வேலை பறிபோகும் அபாயம்

    July 28, 2025
    வணிகம்

    திருச்சி விமான நிலையத்தில் அதிநவீன சொகுசு பயணிகள் ஓய்வறை!

    July 27, 2025
    வணிகம்

    இந்தியா – இங்கிலாந்து வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஒரு முக்கிய மைல்கல்: ஜவுளித் தொழில்துறையினர் நம்பிக்கை

    July 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மையப்புள்ளியாக ‘பிளாக்மெயில்’! – இயக்குநர் மு.மாறன் நேர்காணல்
    • தமிழகத்​தின் வளர்ச்​சி திட்​டங்​கள் அடங்​கிய மனுவை பிரதமரிடம் தங்கம் தென்னரசு வழங்குவார்: முதல்வர் ஸ்டாலின் தகவல்
    • சீசன் மாறும்போது ஒரு ஈரப்பதமூட்டி உங்கள் உடல்நலம், தூக்கம் மற்றும் வீட்டுச் சூழலை எவ்வாறு மேம்படுத்தலாம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்ததாக ஏன் நினைக்கிறீர்கள்?” – ப.சிதம்பரம் கேள்வியால் சர்ச்சை
    • போலீஸ் அதிகாரியாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன்  

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.