Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, January 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»‘இந்தியா – இங்கிலாந்து இடையே ஆயத்த ஆடை ஏற்றுமதி 10% ஆக உயரும்’
    வணிகம்

    ‘இந்தியா – இங்கிலாந்து இடையே ஆயத்த ஆடை ஏற்றுமதி 10% ஆக உயரும்’

    adminBy adminMay 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘இந்தியா – இங்கிலாந்து இடையே ஆயத்த ஆடை ஏற்றுமதி 10% ஆக உயரும்’
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கோவை: இந்தியா – இங்கிலாந்து இடையே மேற்கொள்ளப்பட்ட வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தால் ஆண்டுதோறும் அந்நாட்டுக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி 10 சதவீதமாக அதிகரிக்கும் என தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இந்தியாவின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில் தமிழகம் 40 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. இங்கிலாந்தில் ஆண்டுதோறும் ஆயத்த ஆடை இறக்குமதியில் இந்தியாவின் பங்களிப்பு 5 சதவீதம் மட்டுமே. மத்திய அரசு மேற்கொண்ட தொடர் முயற்சியால் தற்போது இந்தியா – இங்கிலாந்து இடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து இங்கிலாந்திற்கு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து இந்திய ஜவுளி தொழில்முனைவோர் கூட்டமைப்பின் (ஐடிஎப்) கன்வீனர் பிரபு தாமோதரன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியது: “இந்தியா -இங்கிலாந்து இடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கடந்த சில ஆண்டுகளாகவே பேசப்பட்டு வந்தது. கடந்த மூன்று மாதங்களாக மத்திய அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டதன் பலனாக தற்போது ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மத்திய அரசின் நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது.

    இதனால் தொழிலாளர்களை நம்பி செயல்படும் ஜவுளி தொழில்துறைக்கு மிகவும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து ஆண்டுதோறும் 19 பில்லியன் டாலர் மதிப்பில் ஆயத்த ஆடைகளை பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. இதில் 21 சதவீதம் சீனா, 18 சதவீதம் வங்கதேசம் பங்களிப்பை கொண்டுள்ளது. இந்தியாவின் பங்களிப்பு 5 சதவீதமாக உள்ளது.

    இதுவரை வங்கதேசத்திற்கு இறக்குமதி வரியில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்தியாவிற்கு 12 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. தற்போது இந்தியாவிற்கும் இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளதால் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் இங்கிலாந்தின் ஆயத்த ஆடை இறக்குமதியில் இந்தியாவின் பங்களிப்பு 10 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுதோறும் 1.2 பில்லியன் டாலரில் இருந்து 2.4 பில்லியன் டாலராக வர்த்தகம் உயரும்.

    தமிழ்நாட்டில் திருப்பூர், கோவை மாவட்டங்களில் செயல்படும் ஆயத்த ஆடை நிறுவனங்கள் நீண்ட கால அனுபவம் கொண்டு செயல்படுகின்றன. எனவே, வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் இவ்விரு மாவட்டங்களை சேர்ந்த தொழில் நிறுவனங்களுக்கு மிகுந்த பயன் தரும். ஆயத்த ஆடை துறையில் முதலீடுகள் அதிகரிக்கும். இதனால் உற்பத்தியும் கணிசமாக அதிகரிக்கும். பதப்படுத்துதல் துறைக்கும் இந்த ஒப்பந்தம் பயனளிக்கும். மொத்தத்தில் ஜவுளி உற்பத்தித்துறைக்கு சாதகமாக இருக்கும் என நம்புகிறோம்.

    அடுத்து வர உள்ள ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தத்திற்கான அடிப்படையாக இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது. உலகின் பல நாடுகள் சீனாவிடம் இருந்து கொள்முதலை குறைத்து பிற நாடுகளுக்கு வாய்ப்பு வழங்க ஆர்வம் காட்டுகின்றன. இங்கிலாந்திலும் அதே நிலை காணப்படுகிறது. இது இந்தியாவிற்கு பெரிதும் உதவும்,” என்று அவர் தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    பிஎஃப் விதிகள் மாற்றமும், விமர்சனமும்: ஒரு விரைவுப் பார்வை

    December 3, 2025
    வணிகம்

    தங்கம் ஒரு பவுன் ரூ.97,000 தாண்டியது

    December 3, 2025
    வணிகம்

    பவுனுக்கு ரூ.2000 குறைந்த தங்கம் விலை; வெள்ளியும் குறைந்தது: பண்டிகை கால ஆறுதல்!

    December 3, 2025
    வணிகம்

    ஜிஎஸ்டி குறைப்பின் பலன் நுகர்வோரை சென்றடைந்துள்ளது: நிர்மலா சீதாராமன்

    December 3, 2025
    வணிகம்

    இந்திய பொருட்களுக்கான வரியை அமெரிக்கா எப்போது குறைக்கும்? – பியூஷ் கோயல் பதில்

    December 3, 2025
    வணிகம்

    உலக சந்தையை புரட்டி போடும் 2 என்எம் சிப்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கருத்து

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஒவ்வொரு நாளும் 10 நிமிடங்களில் ஜப்பானிய வீடுகள் எவ்வாறு மீட்டமைக்கப்படுகின்றன: மைக்ரோ-ரீசெட்டின் மந்திரத்தைப் புரிந்துகொள்வது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இமாச்சல பிரதேசம்: ஜனவரி 14 முதல் சிம்லாவை குலு மற்றும் கின்னூருடன் இணைக்க தினசரி ஹெலிகாப்டர் சேவைகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • புளூட்டோ சூரியனைச் சுற்றி வர 248 ஆண்டுகள் ஆகும், அது 2178 இல் தனது சுற்றுப்பாதையை நிறைவு செய்யும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்த அரிய இமாலய மலர் அதிர்ஷ்டத்தைத் தருவதாகக் கூறப்படுகிறது – வீட்டில் புனிதமான பிரம்ம கமலத்தை வளர்ப்பது எப்படி? – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வரலாற்றில் ஜனவரி 12 அன்று நடந்தது: ஆண்டுகளில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.