Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, December 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»இந்தியாவின் நேரடி வரி வருவாயில் 4-வது பெரிய பங்களிப்பாளராக திகழும் தமிழகம்: வருமான வரி தலைமை ஆணையர் பெருமிதம்
    வணிகம்

    இந்தியாவின் நேரடி வரி வருவாயில் 4-வது பெரிய பங்களிப்பாளராக திகழும் தமிழகம்: வருமான வரி தலைமை ஆணையர் பெருமிதம்

    adminBy adminJuly 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்தியாவின் நேரடி வரி வருவாயில் 4-வது பெரிய பங்களிப்பாளராக திகழும் தமிழகம்: வருமான வரி தலைமை ஆணையர் பெருமிதம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: இந்தியாவின் நேரடி வரி வருவாயில் 4-வது பெரிய பங்களிப்பாளராக தமிழகம் திகழ்வதாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் பிரீத்தி கர்க் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை சார்பில் 166-வது வருமான வரி தின விழா கொண்டாட்டம் சென்னை டிடிகே சாலையில் உள்ள மியூசிக் அகாடமியில் நேற்று நடைபெற்றது. எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் சவுமியா சுவாமிநாதன் தலைமை வகித்து 2024-25 நிதியாண்டில் சிறப்பாக செயல்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரி வருமான வரி அதிகாரிகளுக்கு விருதுகளை வழங்கினார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை யின் முதன்மை தலைமை ஆணையர் பிரீத்தி கர்க் முன் விலை வகித்தார்.

    அப்போது அவர் பேசுகையில், “வருமான வரித்துறை வெளிப்படை தன்மையுடன் சிறப்பாக செயல்படும் வகையிலும், வரி செலுத்துவோர் எளிதாக வரி செலுத்துவதற்கு ஏற்ற வகையிலும் நாடாளுமன்றத்தில் புதிய வருமான வரி மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் ஜிடிபி விகிதத்துக்கு வரி வருவாய் என்பது மிகவும் முக்கியமானது. இதற்கு நேரடி வரி வருவாயும், ஜிஎஸ்டியும் பெருமளவு பங்களிக்கின்றன. உலகளவில் சில நாடுகள் தங்களது ஜிடிபியில் 30 சதவீதம் வரி வருவாயை கொண்டுள்ளன. நாம் 11 முதல் 12 சதவீதத்தை கொண்டுள்ளோம். நாம் இன்னும் வளர்ச்சியடைய வேண்டும்.” என்று தெரிவித்தார்.

    முன்னதாக பிரீத்தி கர்க் பேசுகையில்,“நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் மொத்த வருவாயாக ரூ.65 லட்சம் கோடி மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ரூ.43 லட்சம் கோடி அதாவது 60 சதவீதம் வரி வருவாயில் இருந்து கிடைத்திருக்கிறது. அதில் குறிப்பிடும் வகையாக நேரடி வரி வருவாயில் இருந்து ரூ.25 லட்சம் கோடி கிடைத்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி மத்திய அரசின் மொத்த வருவாயில் 39 சதவீதம் நேரடி வரி வருவாயால் பங்களிப்படுகிறது.

    அதேபோல் தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டலமானது தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு, இந்தியளவில் நேரடி வரி வருவாயில் 4-வது பெரிய பங்களிப்பாளராக இருந்து வருகிறது. அந்தவகையில் நடப்பு நிதியாண்டில் நிகர வசூல் இலக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரூ.1.29 லட்சம் கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டை விட 4 சதவீதம் அதிகமாகும்.” என்று பேசினார்.

    இந்நிகழ்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை தலைமை ஆணையர்கள் சுதாகர் ராவ், எஸ்.பத்மஜா, வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு பொது இயக்குநர் பிரதாப் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    பாரத் பே நிறுவன மனிதவள அதிகாரியாக ஹர்ஷிதா நியமனம்

    December 1, 2025
    வணிகம்

    ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்க பழநி விவசாயிகள் ஆர்வம்!

    December 1, 2025
    வணிகம்

    சென்னை மெட்ரோ ரயிலில் அக்டோபரில் 93.27 லட்சம் பேர் பயணம்

    December 1, 2025
    வணிகம்

    அக்டோபரில் இந்திய பங்குச் சந்தையில் அன்னிய முதலீட்டாளர்கள் ரூ.14,610 கோடி முதலீடு

    December 1, 2025
    வணிகம்

    சிறுமிகளின் காகித பை ஸ்டார்ட் அப் நிறு​வனம்

    December 1, 2025
    வணிகம்

    அனில் அம்பானியின் ரூ.3000 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

    December 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • முனைவர் ஆனார் அமைச்சர் அன்பில் மகேஸ்
    • பாரத் பே நிறுவன மனிதவள அதிகாரியாக ஹர்ஷிதா நியமனம்
    • இருட்டில் எழுந்திருப்பது உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது: விஞ்ஞானிகள் தூக்கம் மற்றும் ஹார்மோன் சீர்குலைவு பற்றி எச்சரிக்கின்றனர் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிஹாரில் குடும்பம், ஆர்ஜேடி கட்சியில் இருந்து லாலு மகள் வெளியேறியதற்கு காரணமான ரமேஸ், சஞ்சய்
    • தமிழக அரசுப் பள்ளிகளில் திறன் இயக்க செயல்பாடுகள் மூலம் 2 மாதத்தில் 40% மாணவர்கள் தேர்ச்சி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.