Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 24
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»ஆன்லைன் வர்த்தகத்தால் வணிகர்களுக்கு கடும் பாதிப்பு: விக்​கிரம​ராஜா கருத்து
    வணிகம்

    ஆன்லைன் வர்த்தகத்தால் வணிகர்களுக்கு கடும் பாதிப்பு: விக்​கிரம​ராஜா கருத்து

    adminBy adminJune 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆன்லைன் வர்த்தகத்தால் வணிகர்களுக்கு கடும் பாதிப்பு: விக்​கிரம​ராஜா கருத்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஈரோடு: ஆன்லைன் வர்த்தகத்தால், தமிழகத்தில் உள்ள வணிகர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர், என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தார்.

    ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த விக்கிரமராஜா, செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஈரோடு காய்கறி, பழ மார்க்கெட்டில் நிரந்தர கடை வைத்திருக்கும் வியாபாரிகளிடம், அரசாணையை மீறி சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    கடையடைப்பு போராட்டம்: இவ்வாறு வசூலிக்கப்படும் சுங்க கட்டணத்துக்கு ரசீது வழங்கப்படுவதில்லை. இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணாவிட்டால், ஈரோடு மாவட்டம் முழுவதும் 2 நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்.

    ஆன்லைன் வர்த்தகத்தால், தமிழகத்தில் உள்ள வணிகர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளைச் சேர்ந்த கூட்டாண்மை நிறுவனங்கள் தமிழகத்தில் கால் பதிக்க முயற்சிக்கின்றன. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து முறையிட உள்ளோம்.

    தமிழ்நாடு வணிகர் சங்க மாநில செயற்குழு கூட்டம் ஜூலை மாதம் 22-ம் தேதி நடக்கவுள்ளது. அதற்கு முன்பாக தமிழகம், கேரளா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி, லட்சத்தீவு உள்பட 7 மாநில வணிக அமைப்புகள் பங்கு பெறும் தென் மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் வணிகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    தங்கம் விலை புதிய உச்சம்: முதல்முறையாக ரூ.75 ஆயிரத்தை தாண்டியது

    July 24, 2025
    வணிகம்

    பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் நகரங்களுக்கான ‘மாஸ்டர் பிளான்’ தயாரிப்பு பணிகள் தீவிரம்!

    July 23, 2025
    வணிகம்

    பவுன் ரூ.75,000-ஐ தாண்டி தங்கம் விலை புதிய உச்சம்: வெள்ளி விலையும் உயர்வு

    July 23, 2025
    வணிகம்

    ஐரோப்பாவின் பொருளாதார தடையை சமாளிக்க உரிய நடவடிக்கை: வெளியுறவு செயலாளர் தகவல்

    July 23, 2025
    வணிகம்

    60+ வயது கைத்தறி நெசவாளர்களுக்கு மாதம் ரூ.8,000 நிதியுதவி: மத்திய அரசு தகவல்

    July 22, 2025
    வணிகம்

    ரூ.1,000-ல் தெர்மகோல் கட்டுமரம்: ராமேசுவரம் மீனவர்களின் அசத்தல் உத்தி!

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • விரைவில் சூப்பர் சிங்கர் சீனியர் 11!
    • மேட்டூர் அணைக்கு 20,450 கனஅடி நீர்வரத்து
    • 10 உயர் மதிப்பு, வலுவான பெண்களின் டேட்டிங் ரகசியங்கள்
    • ஜோஷ் இங்லிஷ் அதிரடியில் ஆஸி. வெற்றி
    • பட்டியலின மக்களுக்கு துணையாக இருப்பேன்: துரை வைகோ உறுதி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.