Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 26
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் பாக்கு மரக்கன்று நடுவதில் விவசாயிகள் ஆர்வம்!
    வணிகம்

    அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் பாக்கு மரக்கன்று நடுவதில் விவசாயிகள் ஆர்வம்!

    adminBy adminSeptember 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் பாக்கு மரக்கன்று நடுவதில் விவசாயிகள் ஆர்வம்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் பாக்கு மரக்கன்றுகள் நடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நடப்பாண்டில் புதிதாக சுமார் 1 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

    தருமபுரி மாவட்டத்தில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களே பிரதானமாக உள்ளது. மாவட்டத்தில் உள்ள மொத்த பரப்பளவான 4 லட்சத்து 50 ஆயிரம் ஹெக்டேரில் 1 லட்சத்து 95 ஆயிரத்து 740 ஹெக்டேர் சாகுபடி பரப்பாக உள்ளது. குறிப்பாக அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதி ஓரளவு நீர்வளம் மற்றும் மண்வளம் மிக்கதாக இப்பகுதி மக்கள் விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள மொரப்பூர், இட்லப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் வாணியாறு அணை மற்றும் அதன் கால்வாய்கள் செல்லும் பகுதிகளான மோளையானூர், பாப்பிரெட்டிப்பட்டி, பூனையானூர், மஞ்சவாடி, பாப்பம்பாடி, புதுப்பட்டி, வள்ளி மதுரை அணைக்கட்டு அமைந்துள்ள கீரைப்பட்டி, அச்சல் வாடி, தாதரவலசை, வாச்சாத்தி, வீரப்பநாய்க்கன் பட்டி, தாதம்பட்டி, தென்கரைக்கோட்டை, ராமியம் பட்டி, தீர்த்தமலை உள்ளிட்ட பகுதிகளில் பாக்கு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    கடந்த 4 ஆண்டுகளாக நல்ல மழை பெய்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து நீர் பற்றாக்குறை நீ்ங்கியுள்ளது. ஆனால், விவசாயப் பணிக்கான கூலி ஆட்கள் பற்றாக்குறை, போதிய வருவாய் இல்லாமை உள்ளிட்டவற்றால் பாக்கு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதுகுறித்து பாக்கு விவசாயிகள் கூறும்போது, பராமரிப்பு குறைவு, குத்தகைக்கு விடுவதால் லாபகரமான நிரந்தர வருவாய் ஆகியவற்றின் காரணமாக பாக்குமரக்கன்று நடுவதில் விவசாயிகள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 5 முதல் 6 ஆண்டுகளில் பயன் தரக்கூடிய பாக்கு மரங்களால் ஏக்கருக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.3 முதல் ரூ.5 லட்சம் வரை வருவாய் கிடைக்கும் வாய்ப்புள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 3 லட்சத்திற்கும் மேலான பாக்கு கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. தற்போது இளங்கன்றுகளை வெயிலில் இருந்து காக்க வாழை கன்று பக்க கன்றாக வளர்த்து, ஓராண்டு காலத்திற்கு பாதுகாத்து பின்னர் கன்றுகளை பராமாித்து வருகின்றனர், என்றனர்.

    இதுகுறித்து தோட்டக்கலை அதிகாரிகள் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் பாக்கு நடவு அதிகரித்துள்ளது. அதிலும் கடந்த ஜீன் மாதத்திற்கு பிறகு சுமார் 125 ஏக்கரில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இளங்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இவை இன்னும் 3 முதல் 5 ஆண்டுகளில் பலன் தரும் நிலையில் பாக்கு உற்பத்தியும் அதிகரிக்க கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் மலையடி வாரங்களை ஒட்டி அமைந்துள்ள கிராமங்களில் நீர் தட்டுப்பாடு குறைவு என்பதால் அப்பகுதிகளில் தற்போது விவசாயிகள் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றனர், என்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    ஜிஎஸ்டி வரி விகித மாற்றத்தால் மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பு: கேரள முதல்வர் பினராயி விஜயன்

    September 26, 2025
    வணிகம்

    புதிய உச்சம் எட்டிய வெள்ளி விலை: தங்கம் பவுனுக்கு ரூ.320 உயர்வு

    September 26, 2025
    வணிகம்

    அமெரிக்காவின் 50% வரி விதிப்பு எதிரொலி: சீனாவுக்கான இறால் ஏற்றுமதி அதிகரிப்பு

    September 26, 2025
    வணிகம்

    ரூ.62,370 கோடிக்கு 97 தேஜஸ் விமானம் வாங்க எச்ஏஎல் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

    September 26, 2025
    வணிகம்

    உளுந்து கிலோ ரூ.78, பச்சைப் பயறு கிலோ ரூ.87.68 – தமிழக அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிப்பு

    September 25, 2025
    வணிகம்

    தங்கம் விலை சற்றே குறைந்தது: இன்றைய நிலவரம் என்ன?

    September 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “தமிழக மக்கள் விரும்புவது ஆட்சி மாற்றத்தையே!” – ஜி.கே.வாசன் கருத்து
    • புற்றுநோய் முன்னேற்றம்: கணையத்தில் கட்டி வளர்ச்சியை நிறுத்தக்கூடிய புரதத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பார்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘திருமணம் ஆகாதோருக்கு அனுமதி இல்லை’ – ஓசூர் பூங்கா பேனரால் மக்கள் அதிருப்தி
    • முகத்தின் இந்த பகுதியில் ஒரு பரு போப்பது உங்களை முடக்குகிறது, டாக் எச்சரிக்கிறார் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உக்ரைன் போரில் ரஷ்ய முடிவை புதினிடம் கேட்டாரா மோடி? – நேட்டோ தலைவர் தகவலுக்கு இந்தியா திட்டவட்ட மறுப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.