Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»அமெரிக்க வரி விதிப்பை சமாளிக்க அவசர கால கடனுதவி தேவை:‘சைமா’ கோரிக்கை
    வணிகம்

    அமெரிக்க வரி விதிப்பை சமாளிக்க அவசர கால கடனுதவி தேவை:‘சைமா’ கோரிக்கை

    adminBy adminAugust 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அமெரிக்க வரி விதிப்பை சமாளிக்க அவசர கால கடனுதவி தேவை:‘சைமா’ கோரிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கோவை: அமெரிக்க வரி விதிப்பின் தாக்கத்தை சமாளிக்க அவசர கால கடன் உத்தரவாதத் திட்டத்தின் (இசிஎல்ஜிஎஸ்) கீழ் 30 சதவீத பிணையமில்லாத கடன் மற்றும் 5 சதவீத வட்டி மானியத்துடன் நிவாரணத் தொகுப்பு வழங்குவது தொடர்பாக பிரதமரிடம் தமிழக முதல்வர் பரிந்துரைக்க வேண்டும் என தென்னிந்திய மில்கள் சங்கம்(சைமா) கோரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து ‘சைமா’ தலைவர் டாக்டர் எஸ் கே.சுந்தரராமன் கூறியதாவது: நாட்டின் ஒட்டு மொத்த ஜவுளி உற்பத்தித்திறனில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ள தமிழ்நாடு ஜவுளித் தொழில், நாட்டின் மொத்த ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியில் 28 சதவீத பங்கைக் கொண்டுள்ளது.

    உலகளாவிய போட்டித் தன்மையை மேம்படுத்தவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் தமிழக அரசு தொடர் நடவடிக்கைகள் மற்றும் கொள்கைத் தலையீடுகளை மேற்கொண்டு வருகிறது. நூற்பு நவீனமய படுத்துவதற்காக 6 சதவீத வட்டி மானியம், ஆடை, வீட்டு ஜவுளித் துறைக்கு 50 சதவீதம் மூலதன மானியம் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிக்கான ஆலோசகரை ஈடுபடுத்துவதற்கு 50 சதவீத மானியம் போன்ற சமீபத்திய கொள்கைத் தலையீடுகள் ஜவுளி தொழிலுக்கு உத்வேகமாக உள்ளன.

    இந்நிலையில், அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு அறிவிப்பு நாட்டின் மிகப்பெரிய ஜவுளி ஏற்றுமதி மாநிலமான தமிழ்நாட்டுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ஜவுளித் தொழிலில் குறிப்பாக தமிழக ஜவுளித் தொழிலில் அமெரிக்க வரி விதிப்பைக் குறைக்க மாநில மற்றும் மத்திய அரசுகளின் உடனடித் தேவை குறித்து தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா முன்னிலையில், பல்வேறு தொழில்துறைகளை உள்ளடக்கிய குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக முதல்வரை சந்தித்தது. ஜவுளித்தொழில் சார்பில் குறிப்பாணை சமர்பிக்கப்பட்டது.

    அமெரிக்கக் கட்டணத் தாக்கத்தால் ஈடு செய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தக்கூடிய கடுமையான நெருக்கடியில் இருந்து (உற்பத்தி நிறுத்தம், மாற்றுச் சந்தைகளைக் கண்டறிதல், தற்போதுள்ள வாடிக்கையாளர்களைத் தக்கவைத்தல்) மற்றும் ஜவுளித் தொழிலை பாதுகாக்க உடனடி கொள்கைத் தலையீடுகளை பரிந்துரைத்து பிரமதருக்கு கடிதம் மூலம் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டது.

    அசல் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கு இரண்டு ஆண்டு கால அவகாசத்தை நீட்டிக்கவும், அவசர கால கடன் உத்தரவாதத் திட்டத்தின் (இசிஎல்ஜிஎஸ்) கீழ் 30 சதவீத பிணையமில்லாத கடன் மற்றும் 5 சதவீத வட்டி மானியத்துடன் வழங்கவும், பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை நீக்கவும், சர்வதேச வலையில் மூலப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் பிரமதருக்கு கடிதம் மூலம் தமிழக முதல்வர் பரிந்துரைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

    மேலும் தற்போது உள்ள நெருக்கடியான சூழலை எதிர்கொள்ள தமிழக அரசு ஒற்றைச் சாளர வழிமுறையின் மூலம் விரைவான ஏற்றுமதி பணத்தைத் திரும்பப் பெறவும், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வரி கட்டமைப்புக்கான மாநில ஜிஎஸ்டி ரீபண்ட் கோரிக்கைகளை விரைவுபடுத்தவும், பணி மூலதனத் தடையைத் தடுக்கவும், அது தொடர்பான நிதி அழுத்தத்தைக் குறைக்கவும் நடவடிக்க எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது” என்று சுந்தரராமன் கூறியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    யுரேனியம் எடுக்க, இறக்குமதிக்கு தனியாரை அனுமதிக்க அரசு திட்டம்!

    August 17, 2025
    வணிகம்

    12% வரம்பில் உள்ள பொருட்களின் ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறைகிறது

    August 17, 2025
    வணிகம்

    வேலைவாய்ப்பா, வேலை உத்தரவாதமா?

    August 16, 2025
    வணிகம்

    ஓஎன்ஜிசியின் எண்ணெய் உற்பத்தி குறைந்துள்ளது: செயல் இயக்குநர் உதய் பாஸ்வான் தகவல்

    August 16, 2025
    வணிகம்

    அமெரிக்க வரி விதிப்பால் கரூர் ஜவுளி தொழிலுக்கு பாதிப்பு எத்தகையது?

    August 14, 2025
    வணிகம்

    கோவையில் 20,000 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் – ஜிஎஸ்டி ‘நடவடிக்கை’க்கு தொழில் துறையினர் எதிர்ப்பு

    August 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சென்னை அம்பத்தூரில் திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளம்: வாகனங்கள் விழுந்தன
    • ஆப்டிகல் மாயை: 23 களின் கடல் ஒரு ’22’ ஐ மறைக்கிறது, அதை எவ்வளவு வேகமாக கண்டுபிடிக்க முடியும்? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக பாஜக அறிவிப்பு – குடும்பத்தினர் நெகிழ்ச்சி 
    • அல்கலைன் நீர் புற்றுநோயைத் தடுக்க அல்லது குணப்படுத்த முடியுமா:? சிறந்த புற்றுநோயியல் நிபுணர் விளக்குகிறார் – இந்தியாவின் நேரங்கள்
    • குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக கூட்டணி வேட்பாளராக அறிவிப்பு: 21-ம் தேதி வேட்புமனு தாக்கல் 

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.