Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 8
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»அமெரிக்கா விதித்த 50% வரியால் இந்தியாவில் எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு?
    வணிகம்

    அமெரிக்கா விதித்த 50% வரியால் இந்தியாவில் எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு?

    adminBy adminAugust 7, 2025No Comments4 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அமெரிக்கா விதித்த 50% வரியால் இந்தியாவில் எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், அதை 50 சதவீதமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதனால், இந்திய தொழில் துறையில் எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு என்பதைப் பார்ப்போம். குறிப்பாக, தமிழகத் தொழில் துறையில் ஏற்படக்கூடிய பின்னடைவு பற்றியும் பார்ப்போம்.

    அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, இந்தியா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்துவதாக அறிவித்ததுடன் 10 சதவீத அடிப்படை கட்டணத்தையும் ட்ரம்ப் விதித்தார். இந்தியா மீது 25 சதவீத வரி விதிப்பு ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டது. இந்த அறிவிப்பின்போதே ‘ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்தாவிட்டால், கூடுதல் அபராதம் விதிக்கப்படும்’ என்று எச்சரித்தார்.

    ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா தொடர்ந்து கொள்முதல் செய்து வரும் நிலையில், இந்தியா மீது மேலும் 25 சதவீதம் கூடுதல் வரிகளை விதிக்கும் உத்தரவில் ட்ரம்ப் இப்போது கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம், அமெரிக்க சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கான மொத்த வரி விதிப்பு 50 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    ‘அமெரிக்காவின் நடவடிக்கை ஏற்கக்கூடியதல்ல. இது நியாயமற்றது. தேச நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளும். நாட்டு மக்களின் எரிசக்தி தேவையை உறுதி செய்வதே அரசின் முக்கிய நோக்கம்’ என்று மத்திய அரசு எதிர்வினையாற்றியுள்ளது.

    பிரதமர் மோடியும் அமெரிக்காவுக்கு பதில் தரும் வகையில் பேசியுள்ளார். “எங்களைப் பொறுத்தவரை, விவசாயிகளின் நலனே எங்களுக்கு முதன்மையான முன்னுரிமை. விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் உற்பத்தி விவசாயிகளின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது. அதற்காக நாம் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பது எனக்குத் தெரியும். நான் அதற்குத் தயாராக இருக்கிறேன். இந்தியா அதற்குத் தயாராக உள்ளது” என்றார்.

    இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே பிரதமர் மோடியின் இந்தப் பேச்சு அமைந்துள்ளது. முன்னதாக, அமெரிக்​கா​வின் மரபணு மாற்​றம் செய்​யப்​பட்ட உணவு தானி​யங்​களை இறக்​குமதி செய்ய மறுத்துவிட்ட இந்திய அரசு, விவ​சா​யம், பால் பொருள் சந்​தைகளைத் திறக்கவும் திட்டவட்டமாக மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    தற்போதைய 50% வரி என்பது வரும் 27-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்தக் காலக்கெடுவுக்குள் இந்தியா தன் சொல் பேச்சை கேட்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நினைத்திருந்தார். ஆனால், அதுபோல் அடிபணியப் போவதில்லை என்பதையே இந்தியாவின் எதிர்வினையும், பிரதமர் மோடியின் பேச்சும் அமைந்துள்ளது. தற்போதைய நிலையில், சீனா மற்றும் பாகிஸ்தானைக் காட்டிலும் இந்தியாவுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்துள்ளதை கவனிக்க வேண்டும்.

    இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களில் 20 சதவீத அளவில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆகிறது. இது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதம் ஆகும். அமெரிக்கா​வுக்கு ஓராண்​டில் ரூ.8,650 கோடி அளவுக்கு இந்தியா ஏற்​றுமதி செய்​கிறது. “ட்ரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் ரத்தினக் கற்கள், நகைகள், ஆடைகள், ஜவுளி மற்றும் ரசாயனங்கள் முதலான தொழில் பிரிவுகளில் ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது” என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

    இந்தியப் பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில், பெரிய அளவில் பாதிப்பு இருக்காவிட்டாலும், ஓரளவு பின்னடைவு ஏற்படலாம் என வர்த்தகர்கள் கருதுகின்றனர். அதேவேளையில், இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்படும் தாக்கம் என்பது பங்குச்சந்தையில் எதிரொலிக்க வாய்ப்பு அதிகம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அதற்கான அறிகுறிகள் இப்போதே மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் தெரிய ஆரம்பித்துவிட்டது.

    தற்போது இந்திய பொருட்கள் மீதுதான் அமெரிக்கா வரி விதித்துள்ளது என்பதால், ஐடி சேவை சார்ந்த முதலீடுகளில் பாதிப்பு ஏதும் இருக்க வாய்ப்பு இல்லை என்று நம்பப்படுகிறது. ஸ்டீல் மற்றும் அலுமினியம் உள்ளிட்ட உலோகப் பொருட்களின் ஏற்றுமதிக்கு பிரத்யேக உத்தரவின் மூலம் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதனால், அந்தத் துறை சார்ந்த வணிக ஏற்றுமதியில் பாதிப்பு இருக்காது.

    இதேபோல பரஸ்பர வரி விதிப்பில் இருந்து செமிகண்டக்டர் மற்றும் மின்னணு பொருட்களுக்கு விலக்கு உள்ளது. இதனால் இந்தியாவில் பெரிய அளவில் உற்பத்தி பணியில் ஈடுபட்டுள்ள ஆப்பிள் நிறுவன ஏற்றுமதியில் இந்த வரி விதிப்பு காரணமாக பெரிய பாதிப்பு இருக்காது எனத் தெரிகிறது.

    தமிழ்நாட்டின் தொழில் நகரமான திருப்பூர் ‘டாலர் சிட்டி’ என்றழைக்கப்படுகிறது. திருப்பூரில் பின்னலாடைத் தொழில் கடந்த பல ஆண்டு காலமாக கோலோச்சி வரும் நிலையில், அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் பின்னலாடைத் துறை உட்பட இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் பாதிக்கப்படும் என தொழில் துறையினர் கருதுகின்றனர்.

    திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் 30 சதவீத ஏற்றுமதி அமெரிக்க சந்தையை நம்பி இருப்பதால், இந்த வரி விதிப்பு அவர்களது தொழிலை வெகுவாக குறைக்கும். குறிப்பாக, தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    இந்தியா, அமெரிக்காவுக்கு 11 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஜவுளி மற்றும் ஆடைகளை ஏற்றுமதி செய்கிறது. இது நாட்டின் மொத்த ஆடை ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 30 சதவீதமாகும். இனி, அமெரிக்காவுக்கான ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியும் வெகுவாக பாதிக்கும் அபாயம் உண்டு என்கின்றனர் தொழில் துறையினர். நாமக்கல்லில் இருந்து அமெரிக்காவுக்கு முட்டை ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. இதுவும் தமிழகத்துக்கு மிக முக்கியப் பின்னடைவாக கருதப்படுகிறது.

    எனினும், அமெரிக்க வரி விதிப்புகளில் இருந்து ஏற்​றும​தி​யாளர்​களை பாது​காக்க, இந்​தியா சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த தயாராகி வருகிறது. புதிய விரி​வான உத்திகளு​டன் கூடிய இந்த ஏற்​றுமதி திட்​டங்கள் இன்னும் சில வாரங்​களில் செயல்​படுத்​தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய ஏற்​றுமதி ஊக்​கு​விப்பு திட்​டம், கடன் அணுகலை எளி​தாக்​கு​வதை​யும், சர்​வ​தேச சந்​தைகளில் வரி அல்​லாத தடைகளை நிவர்த்தி செய்​வதை​யும் மைய​மாகக் கொண்​டிருக்​கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    வர்த்​தகம் மற்​றும் தொழில்​துறை அமைச்​சகம், குறு, சிறு மற்​றும் நடுத்தர நிறு​வனங்​கள் மற்​றும் நிதி அமைச்​சகங்​களுக்கு இடையே​யான கூட்டு முயற்​சி​யில் ‘பிராண்ட் இந்தியா’ என்ற பெயரில், ரூ.20,000 கோடி மதிப்பிலான இந்த திட்​டம் உரு​வாக்​கப்​படு​வ​தாக தகவல்கள் வெளியாகியிருப்பது, இந்திய தொழில் துறையினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    உலகில் அதிகம் கையாளும் 2-வது துறைமுகம்!

    August 7, 2025
    வணிகம்

    முதல் முறை வேலைக்கு செல்வோருக்கு ரூ.15,000 வரை ஊக்கத் தொகை – மத்திய தொழிலாளர் ஆணையர் விளக்கம்

    August 7, 2025
    வணிகம்

    ட்ரம்ப்பின் 50% வரி விதிப்பும், இந்தியா மீதான பொருளாதார தாக்கமும்!

    August 7, 2025
    வணிகம்

    புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை: பவுன் ரூ.75,200-க்கு விற்பனை!

    August 7, 2025
    வணிகம்

    வணிக செயல்பாடுகளை எளிமைப்படுத்தி செலவுகளை குறைக்க சிறு, நடுத்தர வணிக உரிமையாளர்களுக்கு சாட்ஜிபிடி பயிற்சி 

    August 7, 2025
    வணிகம்

    வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

    August 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • காரைக்குடி மாநகராட்சி மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
    • உங்கள் தலைமுடியை இந்த வழியில் கழுவ வேண்டாம்: இந்த 7 ஷாம்பு தவறுகள் வேர்களை சேதப்படுத்தி வளர்ச்சியைத் தடுக்கின்றன | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • எப்எல்- 2 மனமகிழ் மன்றங்களில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றால் நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு
    • கோல்ட் பிளே ‘கிஸ் கேம்’ ஊழல்: வானியலாளர் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி பைரன் மற்றும் கிறிஸ்டின் கபோட் நேரலையில் பிடிபட்டனர் கலிபோர்னியா விவாகரத்துச் சட்டத்தின் கீழ் அவருக்கு ஒரு பைசா கூட செலவாகாது; இங்கே ஏன் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பள்ளிக்கல்வித் துறைக்கான மாநில கல்விக் கொள்கையை முதல்வர் இன்று வெளியிடுகிறார்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.