மும்பையின் பாலி ஹில்லில் உள்ள அனில் அம்பானியின் வீடு, டெல்லி மகாராஜா ரஞ்சித் சிங் மார்க்கில் உள்ள ரிலையன்ஸ் மையத்துக்குச் சொந்தமான நிலம், டெல்லியில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பிற சொத்துக்கள், நொய்டா, காசியாபாத், மும்பை, புனே, தானே, ஹைதராபாத், சென்னை, கிழக்கு கோதாவரி ஆகிய இடங்களில் உள்ள சொத்துக்கள் ஆகியவற்றை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.3,084 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிட்., ரிலையன்ஸ் கமர்சியல் ஃபைனான்ஸ் லிட். ஆகிய நிறுவனங்கள் மூலம் திரட்டப்பட்ட பொது நிதி, வேறு பயன்பாடுகளுக்கு திருப்பப்பட்டதாகவும் இதன்மூலம் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2017-19 ஆண்டுகளில் யெஸ் வங்கி, ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிட். நிறுவனத்தில் ரூ.2,965 கோடியும், ரிலையன்ஸ் கமர்சியல் ஃபைனான்ஸ் லிட். நிறுவனத்தில் ரூ.2,045 கோடியும் முதலீடு செய்துள்ளது.

