Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»அதிபர் ட்ரம்ப் – மஸ்க் மோதல் காரணமாக டெஸ்லா பங்கு விலை வீழ்ச்சி: முதலீட்டாளர்களுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு
    வணிகம்

    அதிபர் ட்ரம்ப் – மஸ்க் மோதல் காரணமாக டெஸ்லா பங்கு விலை வீழ்ச்சி: முதலீட்டாளர்களுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு

    adminBy adminJune 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அதிபர் ட்ரம்ப் – மஸ்க் மோதல் காரணமாக டெஸ்லா பங்கு விலை வீழ்ச்சி: முதலீட்டாளர்களுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 14 சதவீதம் வீழ்ச்சியடைந்தன. இதனால் முதலீட்டாளர்களுக்கு ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட்டதில் இருந்தே அவரது தீவிர ஆதரவாளராக இருந்தவர் தொழிலதிபர் எலான் மஸ்க். ட்ரம்ப் மீண்டும் அதிபர் ஆனதும், அமெரிக்க அரசின் செலவினங்களை குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட துறையை எலான் மஸ்க் கவனித்தார்.

    இந்நிலையில் அமெரிக்க அரசின் பட்ஜெட் தயாரானது. இதில் எலான் மஸ்க் தலைமையிலான குழு பரிந்துரைந்த விஷயங்கள் இடம் பெறவில்லை. ஏராளமான வரிச்சலுகைகள், அமெரிக்க ராணுவ செலவினங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு , மின்சார வாகனங்களுக்கான 7,500 டாலர் மானியம் ரத்து போன்ற அம்சங்களால், எலான் மஸ்க் ஏமாற்றம் அடைந்தார். இதனால் அவர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகும் அறிவிப்பை வெளியிட்டார். அதிபர் ட்ரம்பின் பட்ஜெட் குறித்தும் விமர்சித்தார்.

    இதற்கு சமூக ஊடகத்தில் பதில் அளித்த அதிபர் ட்ரம்ப், ‘‘மின்சார வாகனங்களுக்கான மானியம் பட்ஜெட்டில் ரத்து செய்வதால், எலான் மஸ்க் கோபம் அடைந்துள்ளார். பட்ஜெட்டில் பல லட்சம் பணத்தை சேமிப்பதற்கான ஒரே வழி எலான் மஸ்க் நிறுவனங்களுக்கு வழங்கும் மானியங்களையும், அமெரிக்க அரசு செய்துள்ள ஒப்பந்தங்களையும் நிறுத்துவதுதான்’’ என எலான் மஸ்க்குக்கு மிரட்டல் விடுத்தார். இந்த வார்த்தை மோதல் நீண்டு கொண்டே செல்கிறது.

    வெள்ளை மாளிகையில் சுதந்திரமாக திரிந்த தொழிலதிபர் எலான் மஸ்க்குக்கு, அதிபர் ட்ரம்ப்புடன் இந்தளவு கருத்து வேறுபாடு ஏற்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இருவர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 150 மடங்கு லாபத்தில் விற்ற, எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 14 சதவீதம் வீழ்ந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்து 621 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. டெஸ்லா கார் நிறுவனத்தின் ஆண்டு லாபம் 1.2 பில்லியன் டாலர் அளவுக்கு குறையலாம் என கூறப்படுகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    புதிய பரஸ்பர நிதி திட்டம்: கோடக் மஹிந்திரா அறிமுகம்

    July 29, 2025
    வணிகம்

    கோ​யம்​பேடு சந்​தை​யில் தக்​காளி விலை ரூ.30 ஆக உயர்வு

    July 28, 2025
    வணிகம்

    அடுத்த ஆண்டு முதல்  வெளி சந்தைகளில் இருந்து 1,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்: மின் வாரிய அதிகாரிகள் தகவல்

    July 28, 2025
    வணிகம்

    தூத்துக்குடி மாவட்டத்தில் மினி உலக முதலீட்டாளர் மாநாடு: அமைச்சர் டிஆர்பி.ராஜா தகவல்

    July 28, 2025
    வணிகம்

    பிரபல டிசிஎஸ் நிறுவனம் 2% ஊழியரை குறைக்க முடிவு: 12,000 பேருக்கு வேலை பறிபோகும் அபாயம்

    July 28, 2025
    வணிகம்

    திருச்சி விமான நிலையத்தில் அதிநவீன சொகுசு பயணிகள் ஓய்வறை!

    July 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உயர்கல்வியை சீரமைக்க உடனடி நடவடிக்கை தேவை: முதல்வருக்கு பாலகுருசாமி வேண்டுகோள்
    • வாசனை மெழுகுவர்த்திகள் ஒவ்வாமை மற்றும் தலைவலியைத் தூண்ட முடியுமா? இங்கே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சூரிய கிரகணம் 2025: தேதி, நேரம், பார்க்கும் இடங்கள் மற்றும் செப்டம்பர் அரிய நிகழ்வைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “பாகிஸ்தானுக்கு காங்கிரஸ் நற்சான்றிதழ் வழங்குகிறது” – அமித் ஷா குற்றச்சாட்டு
    • திருவள்ளூரில் கூடுதல் ரயில்களை நிறுத்தகோரி ரயில்வேக்கு 150-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் அனுப்பிய பயணிகள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.