Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 24
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»9 கி.மீ தார் சாலை வசதிக்கு ‘ஏங்கும்’ மலைவாழ் மக்கள் – தேன்கனிக்கோட்டை அருகே வேதனை
    மாநிலம்

    9 கி.மீ தார் சாலை வசதிக்கு ‘ஏங்கும்’ மலைவாழ் மக்கள் – தேன்கனிக்கோட்டை அருகே வேதனை

    adminBy adminJuly 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    9 கி.மீ தார் சாலை வசதிக்கு ‘ஏங்கும்’ மலைவாழ் மக்கள் – தேன்கனிக்கோட்டை அருகே வேதனை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தேன்கனிக்கோட்டை அருகே 9 கிமீ தூரம் தார் சாலை வசதியில்லாததால் மலைக் கிராம மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தேர்தல் வாக்குறுதியில் மட்டும் சாலை திட்டம் இடம்பெறுவதாக மலைவாழ் மக்கள் வேதனை தெரிவித்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே பெட்டமுகிலாளம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களான மேலூரிலிருந்து தொழுவபெட்டா வழியாக டி.பழையூர், குல்லட்டி, கவுனூர், தொட்டதேவனஅள்ளி உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்ல வேண்டும். இந்த மலைக் கிராமங்களில் சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக மேலூரிலிருந்து தொழுவபெட்டாவுக்கு 9 கி.மீ தூரம் வனப் பகுதிக்கு இடையே மண் சாலை மட்டுமே உள்ளது. இந்த மண் சாலையைத் தார் சாலையாக மாற்ற பல ஆண்டுகளாக இக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்தும், வனத்துறை அனுமதி கிடைக்காததால், சாலை வசதி இக்கிராம மக்களுக்குக் கனவாக இருந்து வருகிறது.

    மேலும், இம்மலைக் கிராம மாணவ, மாணவிகள் உயர் கல்வி பயில 10 கிமீ தூரத்தில் உள்ள உனிசெட்டி மற்றும் 24 கிமீ தொலைவில் உள்ள தேன்கனிக்கோட்டைக்கு செல்ல வேண்டும். இங்கு செல்ல மேலூர் வரை 9 கிமீ தூரம் உள்ள மண் சாலையை இருசக்கர வாகனம் மற்றும் சரக்கு வாகனங்களில் கடந்து சென்று வருகின்றனர். மாலை மற்றும் இரவு நேரங்களில் மண் சாலையில் வன விலங்குகள் நடமாட்டமும் இருக்கும் நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலை உள்ளதாக மலைவாழ் மக்கள் வேதனை தெரிவித்தனர்.

    இது தொடர்பாக மலைக் கிராம மக்கள் கூறியதாவது: தொழுவபெட்டாவைச் சுற்றிலும் உள்ள குக்கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. தேன்கனிக்கோட்டையில் இருந்து மேலூர் வரைக்கும் அரசுப் பேருந்து இயக்கப்படுகின்றன. அதன் பின்னர் மேலூரில் இருந்து தொழுவபெட்டாவுக்கு 9 கிமீ வனப்பகுதியில் உள்ள மண் சாலையில் சென்று வருகிறோம். இச்சிரமத்தால் எங்கள் குழந்தைகள் மேல்நிலைக் கல்வியைத் தொடர முடியாத நிலையுள்ளது. தேர்தலுக்கு, தேர்தல் மேலூர் – தொழுவபெட்டாவுக்கு சாலை அமைப்பதாக அரசியல் கட்சிகளின் வாக்குறுதியில் மட்டும் இடம்பெறுகிறது. தேர்தலுக்குப் பின்னர் நாங்கள் புறக்கணிக்கப்படுவது தொடர்ந்து வருகிறது.

    கடந்த மக்களவைத் தேர்தலை நாங்கள் புறக்கணிப்பதாக அறிவித்தோம். அதைத் தொடர்ந்து, அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் எங்களை சமாதானம் செய்தனர். மேலும், குண்டும், குழியுமாக இருந்த சாலையில் அவசர அவசரமாக மண் கொட்டி நிரப்பினர். தேர்தலுக்குப் பின்னர் சாலை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, மழை பெய்தால், மண் சாலை சேறும், சகதியுமாக மாறி இருசக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் சேற்றில் சிக்கிப் பயணிக்க முடியாத நிலையுள்ளது.

    எனவே, எங்கள் கிராமங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, அடிப்படை தேவையான தார் சாலை வசதியை ஏற்படுத்திக் கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் எங்களின் பொருளாதாரம் மற்றும் கல்வி வளர்ச்சி அடைய வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ஆகாஷ் பாஸ்கரனுக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத் துறைக்கு ஐகோர்ட் கண்டனம்

    July 23, 2025
    மாநிலம்

    திமுக கூட்டணியில் விசிக வீழ்ச்சி அடையவில்லை: பழனிசாமிக்கு திருமாவளவன் பதில்

    July 23, 2025
    மாநிலம்

    பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி வழியாக தேர் செல்ல உயர் நீதிமன்றம் உத்தரவு

    July 23, 2025
    மாநிலம்

    மதுரை ஆதீனத்தின் முன்ஜாமீனை ரத்து செய்ய கோரி காவல் துறை மனு!

    July 23, 2025
    மாநிலம்

    “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிக்கிறது அமமுக” – தினகரன் உறுதி

    July 23, 2025
    மாநிலம்

    பேரூர் பட்டீசுவரர் கோயிலில் ஆகம விதிகளை மீறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை: இந்து முன்னணி

    July 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஆகாஷ் பாஸ்கரனுக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத் துறைக்கு ஐகோர்ட் கண்டனம்
    • உங்கள் வீடு மற்றும் குடும்பத்தை பாதுகாப்பாக வைத்திருக்க மிகவும் பாதுகாப்பு நாய் இனங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • திமுக கூட்டணியில் விசிக வீழ்ச்சி அடையவில்லை: பழனிசாமிக்கு திருமாவளவன் பதில்
    • 10 அன்றாட உணவுகள் மற்ற நாடுகளில் தடைசெய்யப்பட்ட நீங்கள் இன்னும் சாப்பிடலாம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டெஸ்ட்டில் முதல் அரை சதம் பதிவு செய்த சாய் சுதர்ஷன்; காயத்தால் வெளியேறிய பந்த் – ENG vs IND

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.