Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»613 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றனர்: சேர்க்கை ஆணைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
    மாநிலம்

    613 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றனர்: சேர்க்கை ஆணைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

    adminBy adminJuly 31, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    613 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றனர்: சேர்க்கை ஆணைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்​கான கலந்​தாய்​வில் 7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்​டில் 613 அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்​லூரி​களில் சேரு​வதற்​கான ஆணை​களை சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் வழங்​கி​னார். தமிழகத்​தில் அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களில் அரசு ஒதுக்​கீட்​டுக்கு 6,600 எம்​பிபிஎஸ் இடங்​கள், 1,583 பிடிஎஸ் இடங்கள் உள்​ளன.

    இதில் 7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்​டில் அரசு பள்ளி மாணவர்​களுக்கு 494 எம்​பிபிஎஸ் இடங்​கள், 119 பிடிஎஸ் இடங்​கள் வழங்​கப்படுகின்​றன. இந்​நிலை​யில், சிறப்பு பிரிவு (மாற்​றுத்​திற​னாளி, முன்​னாள் ராணுவ வீரர்​களின் வாரிசு, விளை​யாட்டு வீரர்) சிறப்பு பிரிவு கலந்​தாய்வு மற்​றும் 7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்டு இடங்​களுக்கு அரசு பள்ளி மாணவர்​களுக்​கான கலந்​தாய்வு நேரடி​யாக நேற்று சென்னை அண்ணா சாலை​யில் உள்ள அரசு பன்​னோக்கு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை வளாகத்​தில் நடந்​தது.

    இதில் தேர்​வான மாணவ, மாணவி​களுக்கு கல்​லூரி​களில் சேரு​வதற்​கான ஆணை​களை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் வழங்கினார். இதன்​படி 7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்​டின் கீழ் விவ​சா​யி, கூலி தொழிலாளி உட்பட ஏழை குடும்​பத்தை சேர்ந்த 613 அரசு பள்ளி மாணவர்​கள் மருத்​துவ படிப்​பில் சேர்ந்​துள்​ளனர்.

    மருத்துவம் படிக்க தேர்வான தாய் அமுதவல்லி.

    உடன் மகள் சம்யுக்தா. படம்: எல்.சீனிவாசன்

    இந்​நிகழ்​வில் சுகா​தா​ரத்​துறை செயலர் ப.செந்​தில்​கு​மார், மருத்​து​வக்​கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​குநர் (பொ) தேரணி​ராஜன், தமிழ்​நாடு அரசு பன்​னோக்கு உயர்​சிறப்பு மருத்​து​வ​மனை இயக்​குநர் மணி உள்​ளிட்​டோர் உடன் இருந்​தனர். இதே​போல் முதல் சுற்று பொது கலந்​தாய்வு என்ற சுகா​தா​ரத்​துறை இணை​யதளத்​தில் நேற்று காலை காலை 10 மணிக்கு தொடங்​கியது.

    ஆக.5-ம் தேதி தரவரிசை பட்​டியல் அடிப்​படை​யில் கல்​லூரி​களில் இடங்​கள் ஒதுக்​கீடு செய்​யப்​பட​வுள்​ளது. இடஒதுக்​கீடு விவரங்​கள் ஆக.6-ம் தேதி வெளி​யாகும். ஆக.11-ம் தேதி மாலை 5 மணிக்​குள் இடஒதுக்​கீடு பெற்​ற கல்​லூரி​களில்​ சேர வேண்​டும்​.

    மருத்துவராகும் 49 வயது பெண்: தென்​காசி மாவட்​டத்தை சேர்ந்த பிசி​யோதெரபிஸ்ட் அமுதவல்லி (49). இவரது மகள் சம்​யுக்தா கிரு​பாலனி. நீட் தேர்​வுக்கு சம்​யுக்தா தயா​ராகி வந்த நிலை​யில், மகளின் வழி​காட்​டு​தலின்​படி, மாற்​றுத் திற​னாளி தாயா​ரான அமுதவல்​லி​யும் நீட் தேர்​வு எழுதி 147 மதிப்​பெண் பெற்றார். மகள் 450 மதிப்​பெண்​களும் பெற்​றார்.

    இரு​வரும் எம்​பிபிஎஸ் படிப்​புக்கு ஆன்​லைனில் விண்​ணப்​பித்​தனர். அமுதவல்லி மாற்​றுத்​திற​னாளி என்​ப​தால், சிறப்பு பிரிவு கலந்​தாய்​வில் அவருக்கு விருதுநகர் அரசு மருத்​து​வக் கல்​லூரி​யில் எம்​பிபிஎஸ் இடம் கிடைத்​துள்​ளது. மகள் சம்​யுக்தா ஆன்​லைனில் நடை​பெறும் பொது பிரிவு கலந்​தாய்​வில் பங்​கேற்​கிறார். அவருக்​கும் இடம் கிடைக்க வாய்ப்​புள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “நீதிபதிக்கு எதிராக புகார் அளித்ததால் என் உயிருக்கு ஆபத்து…” – வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

    August 1, 2025
    மாநிலம்

    கடலாடி ஓலையிருப்பு கண்மாய் பகுதியில் போக்குவரத்து கழக பணிமனை கட்ட உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

    July 31, 2025
    மாநிலம்

    “சுர்ஜித்தின் தாயையும் கைது செய்வதில் போலீஸாருக்கு என்ன தயக்கம்?” – திருமாவளவன்

    July 31, 2025
    மாநிலம்

    “அதிமுக சாதி, மதம் இல்லாத கட்சி” – எடப்பாடி பழனிசாமி

    July 31, 2025
    மாநிலம்

    சென்னையில் நோய் பரப்பும் கூடாரங்களாக மாறிய 36 சமூக நீதி விடுதிகள்: நயினார் நாகேந்திரன் சாடல்

    July 31, 2025
    மாநிலம்

    முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது ஏன்? – பிரேமலதா விஜயகாந்த் விவரிப்பு

    July 31, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஷேக்ஸ்பேரின் காலத்தில் வாழ்க்கை எப்படி இருந்தது: இங்கே 10 உண்மைகள் உள்ளன
    • “நீதிபதிக்கு எதிராக புகார் அளித்ததால் என் உயிருக்கு ஆபத்து…” – வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
    • பொதுவான கவலைக் கோளாறு அறிகுறிகள்: இது கவலையா அல்லது பொதுவான கவலைக் கோளாறு? முன்னணி உளவியலாளர் புறக்கணிக்கக் கூடாத 6 அறிகுறிகளை பட்டியலிடுகிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கடலாடி ஓலையிருப்பு கண்மாய் பகுதியில் போக்குவரத்து கழக பணிமனை கட்ட உயர் நீதிமன்றம் இடைக்கால தடை
    • நீண்ட காலம் வாழ்வதற்கான உங்கள் ரகசியமாக ஸ்பெர்மிடின் இருக்கக்கூடும்: இது உங்கள் மூளை, தோல் மற்றும் நீண்ட ஆயுளை எவ்வாறு புதுப்பிக்கிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.