Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, August 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»6 தளங்கள், 400 படுக்கை வசதிகள்: தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை முதல்வர் திறந்து வைத்தார்
    மாநிலம்

    6 தளங்கள், 400 படுக்கை வசதிகள்: தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை முதல்வர் திறந்து வைத்தார்

    adminBy adminAugust 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    6 தளங்கள், 400 படுக்கை வசதிகள்: தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை முதல்வர் திறந்து வைத்தார்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தாம்பரம்: தாம்பரத்தில் ரூ.110 கோடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் தாலுகா அரசு மருத்துவமனையை செங்கல்பட்டு மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்து மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தி 2021-ம் ஆண்டு அனுமதி வழங்கியதோடு, ரூபாய் 110 கோடி இதற்காக ஒதுக்கப்பட்டது.

    மேலும் தாம்பரம் சானடோரியம் ஜிஎஸ்டி சாலையில் தேசிய சித்த மருத்துவமனை வளாகம் அருகே உள்ள அரசு காசநோய் மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத் துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு நிலம் சுத்தம் செய்யப்பட்டு மருத்துவமனை கட்டிடப் பணிகள் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது.

    6 தளங்கள் கொண்ட 400 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டு வந்த இந்த மருத்துவமனை கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில் மருத்துவமனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்த வைக்கும் நிகழ்ச்சி இன்று ( ஆக.9) நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ரூபாய் 115 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனை புதிய கட்டிடம், ரூ. 7.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை – புறநகர் பிரிவு, ரூ. 1.90 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வக கட்டடம் மற்றும் 3 நகர்ப்புற துணை சுகாதார நிலையங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில்‌ அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், எம்.பி, டி.ஆர்.பாலு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, செங்கல்பட்டு ஆட்சியர் தி. சினேகா மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

    புதிய மாவட்ட மருத்துவமனை 6 மாடி கொண்டது. இக்கட்டடத்தில், 4 அறுவை சிகிச்சை அரங்கம், 3 அவசர அறுவை சிகிச்சை அரங்கம், 111 தீவிர சிகிச்சை படுக்கை, 289 படுக்கை கொண்ட பொதுப் பிரிவு என, 400 படுக்கை வசதிகள் உள்ளன.

    இந்த மருத்துவமனையில் தரைத்தளத்தில் அவசர சிகிச்சை பிரிவு, எக்ஸ்ரே, சிடி, எம்ஆர்ஐ ஸ்கேன், மருந்தகம், புற நோயாளி பிரிவு. முதல் தளத்தில் அவசர அறுவை சிகிச்சை அரங்கம், நம்பிக்கை மையம், குடும்ப நலப் பிரிவு, கர்ப்பிணிகளுக்கான புறநோயாளிகள் பிரிவு, கால் போஸ் கோபி உள்ளிட்டவையும். 2வது தளத்தில் மகப்பேறு அறுவை சிகிச்சை பிரிவு, பிரசவ அறை, மகப்பேறு உயர் தீவிர சிகிச்சை பிரிவு, மகப்பேறு அறுவை அரங்கம், பிரசவ முன் கவனிப்பு அறை, அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு பிரிவு.

    3-வது தளத்தில் பிறந்த குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, நீரிழிவு பிரிவு, ரத்த வங்கி, பிரசவ பின் கவனிப்பு பிரிவு, குடும்ப நல அறுவை சிகிச்சை பிரிவு. 4வது தளத்தில் ஆண்களுக்கான அறுவை சிகிச்சை வார்டு, பெண்களுக்கான அறுவை சிகிச்சை வார்டு, தீக்காயப்பிரிவு ஆய்வகம்.

    5வது தளத்தில் அவசர அறுவை சிகிச்சை அரங்கம், தீவிர சிகிச்சை பிரிவு, உயர் சார்பு அலகு பிரிவு, பொது சிகிச்சை பிரிவு. 6வது தளத்தில் குழந்தைகள் பொது பிரிவு, ஆண்கள் பொது பிரிவு, பெண்கள் பொது பிரிவு என மொத்தம் ஆறு தளத்தில் மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பாக தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    புதிதாக திறக்கப்படும் இந்த மருத்துவமனையால் தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட புறநகர் பகுதி மக்கள் பயனடையும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சாலையில் ஏற்படும் விபத்துகளில் சிக்குபவர்கள் மேல் சிகிச்சைக்கு சென்னைக்கு கொண்டு செல்லும் வழியில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில் தற்போது அதிநவீன கருவிகளுடன் அனைத்து சிகிச்சைகளும் புதிய மருத்துவமனையில் வழங்கப்பட உள்ளதால் விபத்து உயிரிழப்புகள் பெருமளவு குறையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ராட்வீலர் உள்ளிட்ட ஆக்ரோஷமான நாய்களை முறைப்படுத்த கோரிய வழக்கு: தலைமை கால்நடை அதிகாரி ஆஜராக உத்தரவு

    August 9, 2025
    மாநிலம்

    மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: எல்.முருகன் குற்றச்சாட்டு

    August 9, 2025
    மாநிலம்

    எம்ஜிஆர், ஜெயலலிதா சாதி எல்லைகளைக் கடந்தவர்கள்: திருமாவளவன் திடீர் புகழாரம்

    August 9, 2025
    மாநிலம்

    திண்டிவனம், செஞ்சியில் கொற்றவை, மூத்ததேவி சிற்பங்கள் கண்டெடுப்பு: பல்லவர் காலத்தை சேர்ந்தது என தகவல்

    August 9, 2025
    மாநிலம்

    சென்னை | மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை: பிஹார் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

    August 9, 2025
    மாநிலம்

    கம்யூனிஸ்ட்டுகள் மீது பாயும் எடப்பாடி பழனிசாமி – காரணம் என்ன?

    August 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ராட்வீலர் உள்ளிட்ட ஆக்ரோஷமான நாய்களை முறைப்படுத்த கோரிய வழக்கு: தலைமை கால்நடை அதிகாரி ஆஜராக உத்தரவு
    • ரோஸ்மேரி நீர் முதல் மெல்லும் கம் வரை: மூளையை கூர்மைப்படுத்துவதற்கும் நினைவகத்தை அதிகரிப்பதற்கும் 5 ஆச்சரியமான வழிகள்
    • அமெரிக்காவில் கம்பராமாயண இசை கச்சேரி!
    • மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: எல்.முருகன் குற்றச்சாட்டு
    • கல்லீரலை ஹைட்ரேட் செய்யும் 5 பழங்கள் மற்றும் அவற்றை உட்கொள்ள சரியான வழி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.