Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 20
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»300 ஆண்டு பழமையான 40 கோடி ஆவணங்கள் பராமரிப்பு: அமைச்சர் கோவி. செழியன் தகவல்
    மாநிலம்

    300 ஆண்டு பழமையான 40 கோடி ஆவணங்கள் பராமரிப்பு: அமைச்சர் கோவி. செழியன் தகவல்

    adminBy adminSeptember 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    300 ஆண்டு பழமையான 40 கோடி ஆவணங்கள் பராமரிப்பு: அமைச்சர் கோவி. செழியன் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழ்​நாடு ஆவணக் காப்​பகத்​தால் 300 ஆண்​டு​கள் பழமை​யான 40 கோடிக்​கும் அதி​க​மான ஆவணங்​கள் பாதுகாப்பாக பராமரிக்​கப்​பட்டு வரு​வ​தாக அமைச்​சர் கோவி. செழியன் தெரி​வித்​துள்​ளார். தேசிய ஆவணக் காப்​பகம், தமிழ்​நாடு ஆவணக் காப்​பகம் மற்​றும் வரலாற்று ஆராய்ச்சி மன்​றம் சார்​பில் 50-வது தேசிய ஆவணக் காப்​பாளர்​கள் குழுக் கூட்​டம் (பொன்​விழா) சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் தமிழக உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி. செழியன் சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்றார்.

    ‘ஆங்​கிலேய ஆட்​சிக்கு எதி​ராக 1857-ம் ஆண்​டுக்கு முன்பு தமிழ்​நாட்​டில் நடை​பெற்ற போராட்​டங்​கள், தியாகங்​கள்’, ‘மைசூர் போர்​களும், தமிழ்​நாடு கைப்​பற்​றப்​பட்ட முறை​களும்’ ஆகிய 2 ஆங்கில நூல்​களை அவர் வெளி​யிட்​டார். மக்​கள் வசதிக்​காக பழமை​யான ஆவணங்​கள் கணினிம​யம் ஆக்​கப்​பட்​டுள்​ளன. அதற்​காக புதி​தாக உரு​வாக்​கப்​பட்ட www.digitamilnaduarchives.tn.gov.in என்ற இணை​யதளத்​தை​யும் தொடங்கி வைத்​தார்.

    விழா​வில் அமைச்சர் பேசி​ய​தாவது: நாம் வாழ்ந்த வரலாற்றை நினைத்து செயல்​படும் நாடு​தான் உலகத்​தில் உயர்ந்த நிலையை அடைய முடி​யும். புதி​ய​வற்றை மட்​டுமே பின்​பற்றி செல்​லும் நாடு வரலாற்றை இழக்​கும். இந்​தி​யா​வின் உண்மை வரலாற்றை ஆராய, ஆவணங்​களை தேடி வரும் அறிஞர்​களுக்​கு, ஆதா​ரங்​களை வழங்​கும் ஆவணக் காப்​பாளர் பணி முக்​கிய​மானது. நாட்​டில் பல்​வேறு துறை​கள் இருந்​தா​லும், அவற்​றின் கோப்​பு​களைப் பாது​காத்​து, ஆவணக் காப்​பகத் துறை​தான் அவற்றை அடுத்த தலை​முறைக்கு எடுத்து செல்​கிறது.

    அரசு நிர்​வாகத்​தின் முது​கெலும்​பு​களாக ஆவணங்​கள் உள்​ளன. கடந்த 1805-ம் ஆண்டு முதல் செயல்​பட்டு வரும் தமிழ்​நாடு ஆவணக் காப்​பகம் மிக​வும் பழமை​யானது. இங்கு அனைத்து துறை​களின் ஆவணங்​களும் அட்​ட​வணை​கள் தயாரிக்​கப்​பட்டு முறை​யாக பராமரிக்​கப்​படு​கின்​றன. தமிழ்​நாடு ஆவணக் காப்​பகத்​தால் 300 ஆண்​டு​கள் பழமை​யான 40 கோடிக்​கும் அதி​க​மான ஆவணங்​கள் பாது​காப்​பாக பராமரிக்​கப்​படு​கின்​றன.

    ஜப்​பான் திசு முறையைப் பயன்​படுத்தி பழமை​யான ஆவணங்​களை செப்​பனிடும் பணி ரூ.10 கோடி​யில் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. இவ்​வாறு அவர் பேசி​னார். இந்த கூட்​டத்​தில், தேசிய ஆவணக் காப்பக தலைமை இயக்​குநர் சஞ்​சய் ரஸ்​தோகி, தமிழக உயர்​கல்​வித் துறை செயலர் பொ.சங்​கர், தமிழ்​நாடு ஆவணக் காப்பக ஆணை​யர்​ ஹர்​சஹாய்​ மீனா உள்​ளிட்டோர் பங்கேற்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள் வராதீர்கள் என விஜய் தெரிவிக்கலாமே? – நீதிபதி அறிவுறுத்தல்

    September 19, 2025
    மாநிலம்

    ‘பிங்க்’ பஸ் கண்டிஷனில் தான் திமுக இருக்கிறது: உதயநிதிக்கு இபிஎஸ் பதிலடி

    September 19, 2025
    மாநிலம்

    “போலி செய்திகளை மக்களிடம் சேர்க்க முயற்சி” – ராகுல் காந்தி மீது வானதி சீனிவாசன் விமர்சனம்

    September 19, 2025
    மாநிலம்

    சாராயம் விற்ற பணத்தில் திமுக முப்பெரும் விழா: அண்ணாமலை விமர்சனம்

    September 19, 2025
    மாநிலம்

    ஊருக்கெல்லாம் பஞ்சாயத்து செய்கிறார் அமைச்சர் நேரு… உள்ளூர் பஞ்சாயத்தை தீர்க்க ஆளில்லை!

    September 19, 2025
    மாநிலம்

    சொன்னதை கேட்கலையே அண்ணன்… வேட்பாளரை மாற்றாததால் திமுகவில் இணைந்த நாதக தம்பிகள்

    September 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சூப்பர் சிங்கர் – குக் வித் கோமாளி மெகா சங்கமம்!
    • பெருங்குடல் புற்றுநோய் அறிகுறிகள் பெரும்பாலும் வலி இல்லாமல் தோன்றும்
    • தோசை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டியவர்கள்: உங்களுக்கு பிடித்த தென்னிந்திய விருந்துக்கு பின்னால் மறைக்கப்பட்ட உடல்நல அபாயங்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள் வராதீர்கள் என விஜய் தெரிவிக்கலாமே? – நீதிபதி அறிவுறுத்தல்
    • ‘ஜிஎஸ்டி வரி எப்போது ஒரே விகிதமாக மாறும்?’ – நிர்மலா சீதாராமன் விவரிப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.