Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»3 முக்கிய தீவிரவாதிகள் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் கைது: மாறுவேடத்தில் இருந்தபோது பிடிபட்டதாக டிஜிபி விளக்கம்
    மாநிலம்

    3 முக்கிய தீவிரவாதிகள் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் கைது: மாறுவேடத்தில் இருந்தபோது பிடிபட்டதாக டிஜிபி விளக்கம்

    adminBy adminJuly 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    3 முக்கிய தீவிரவாதிகள் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் கைது: மாறுவேடத்தில் இருந்தபோது பிடிபட்டதாக டிஜிபி விளக்கம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: கோவை குண்​டு​வெடிப்பு உட்பட பல்​வேறு வழக்​கு​களில் தேடப்​பட்டு வந்த 3 தீவிரவா​தி​கள் 30 ஆண்​டு​களுக்​குப் பிறகு அடுத்​தடுத்து கைது செய்​யப்​பட்​டனர்.

    இதுதொடர்​பாக நேற்று செய்​தி​யாளர்​களிடம் டிஜிபி சங்​கர் ஜிவால் கூறிய​தாவது: தமிழகத்​தில் ஆடிட்​டர் ரமேஷ் கொலை உள்ளிட்ட பல்​வேறு வழக்​கு​களில் தொடர்​புடைய போலீஸ் பக்​ருதீன், கூட்​டாளி​களான பன்னா இஸ்​மா​யில், பிலால் மாலிக் ஆகியோர் சிக்​கினர்.

    இவர்​களு​டன் தொடர்​புடைய தீவிரவாதி நாகூரைச் சேர்ந்த அபுபக்​கர் சித்​திக்கை காவல்​துறை​யினர் தேடி வந்​தனர். முன்​ன​தாக இவர், 2012-ல் வேலூர் மருத்​து​வர் அரவிந்த்​ரெட்டி கொலை வழக்கு மற்​றும் 2013-ல் பெங்​களூரு பாஜக அலு​வல​கம் அருகே குண்டு வெடித்த வழக்கு உட்பட மேலும் பல வழக்​கு​களில் முக்​கியப் பங்​காற்​றி​னார்.

    அவர் மீது தமிழகத்​தில் 5 வழக்​கு​களும், கேரளா​வில் 2 வழக்​கு​களும், கர்​நாட​கா, ஆந்​தி​ரா​வில் தலா ஒரு வழக்​கு​களும் உள்​ளன. இதனால், அபுபக்​கர் சித்​திக்கை அம்​மாநில போலீ​ஸாரும், மத்​திய புல​னாய்வு அமைப்​பு​களும் 30 ஆண்​டு​களாகத் தேடி வந்​தன. இவர் உட்பட மேலும் சிலரை கைது செய்ய ‘ஆபரேஷன் அறம்’ என்ற சிறப்பு நடவடிக்கை மூலம் தேட தொடங்கினோம்.

    தீவிரவாதி அபுபக்​கர் சித்​திக்​கின் பழைய புகைப்​படங்​களை ஏ.ஐ. தொழில்​நுட்​பம் மற்​றும் தொழில் நுட்ப நிபுணர்​களின் ஒத்​துழைப்​புடன் தேடு​தல் பணி முடுக்கி விடப்​பட்​டது. இந்​நிலை​யில், ஆந்​திர மாநில போலீ​ஸார் உதவி​யுடன் கடப்பா அருகே அவரை அண்​மை​யில் கைது செய்​தோம்.

    அப்​போது, அவரது வீட்​டிலிருந்து வெடிபொருட்​கள், ஏராள​மான மின்​னணு பொருட்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. இதே​போல், பல்வேறு வழக்​கு​களில் தலைமறை​வாக இருந்த மற்​றொரு தீவிரவா​தி​யான முகமது அலியை​யும் ஆந்​தி​ரா​வில் கைது செய்​தோம். கடந்த 1998-ம் ஆண்டு கோவை​யில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்​கில் அல்​-உம்மா தீவிரவாத இயக்​கத்​தைச் சேர்ந்த பாஷா உட்பட 160-க்​கும் மேற்​பட்​டோர் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

    இவ்​வழக்​கில் கோவை உக்​கடம் பிலால் காலனியைச் சேர்ந்த சாதிக் என்ற ராஜா என்ற டெய்​லர் ராஜா 1996 முதல் தலைமறை​வாக இருந்து வந்​தார். இவரை ‘ஆபரேஷன் அகழி’ என்ற சிறப்பு நடவடிக்கை மூலம் தேடினோம். ஏ.ஐ. தொழில் நுட்​பம் மற்​றும் நுண்​ணறிவு உளவு தகவல்​களை அடிப்​படை​யில் கர்​நாடக போலீஸாரின் உதவி​யுடன் விஜய் ​பு​ரா​வில் கடந்த 9-ம் தேதி அவரை கைது செய்​தோம்.

    இவர்​கள் மளி​கை, தையல், துணிக்​கடை, ரியல் எஸ்​டேட் உள்ளிட்ட தொழில்​கள் செய்து வந்​துள்​ளனர். அவர்​களது உண்மை​யான பெயர், முகவரியை வெளிப்​படுத்​தாமல் வேறு பெயர்​களை மாற்றி அடை​யாள அட்​டைகளை​யும் வைத்​துள்​ளனர். டெய்​லர் ராஜா மட்​டும் அல் உம்மா தீவிரவாத அமைப்​புடன் தொடர்​பில் இருந்​துள்​ளார்.

    3 பேரை​யும் காவலில் எடுத்து விசா​ரிக்க உள்​ளோம். தமிழக போலீ​ஸாரின் சிறப்​பான செயல்​பாடு​களால், வரும் காலங்​களில் தமிழகத்​தில் தீவிரவாத செயல்​பாடு​கள் மற்​றும் கடுமையான குற்​றங்​கள் நடக்​காது என்ற நிலை உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. இவ்வாறு கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மகனுக்குப் பதில் மகளுக்கு மகுடம்! – மருத்துவர் அய்யா போடும் மனக் கணக்கு

    July 12, 2025
    மாநிலம்

    மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவர்களால் மண்டையடி!- கூண்டோடு ராஜினாமா வைத்தியம் கொடுத்த திமுக தலைமை

    July 12, 2025
    மாநிலம்

    ‘திருமலா பால்’ மேலாளர் மர்ம மரண விவகாரம்: மாதவரம் காவல் ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

    July 12, 2025
    மாநிலம்

    பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடாவிட்டால் நாதக விரைவில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும்: சீமான்

    July 12, 2025
    மாநிலம்

    கலப்பட உரம், போலி விதையை தடுக்க கடும் சட்டங்கள்: மத்திய ஜவுளி, வேளாண் துறை அமைச்சர்கள் உறுதி

    July 12, 2025
    மாநிலம்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30,250 கனஅடியாக குறைந்தது

    July 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இமாச்சலில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 9 பேர் உடல்கள் 150 கி.மீ. தூரத்தில் மீட்பு
    • ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’, ‘அவதார்’ போல… – கனவுப் படம் ‘வேள்பாரி’ குறித்து ஷங்கர் பேசியது என்ன?
    • மகனுக்குப் பதில் மகளுக்கு மகுடம்! – மருத்துவர் அய்யா போடும் மனக் கணக்கு
    • அத்தை மகனை திருமணம் செய்ததால் ஒடிசாவில் காதல் ஜோடிக்கு நூதன தண்டனை
    • T20 WC 2026: முதல் முறையாக தகுதி பெற்றது இத்தாலி!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.