Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»3 ஆண்டுகளுக்கும் மேலான நிலுவை வழக்குகள்: சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!
    மாநிலம்

    3 ஆண்டுகளுக்கும் மேலான நிலுவை வழக்குகள்: சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!

    adminBy adminAugust 18, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    3 ஆண்டுகளுக்கும் மேலான நிலுவை வழக்குகள்: சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள, மூன்று ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கக் கூடிய வழக்குகளை அடையாளம் கண்டு, முடித்து வைக்க ஏதுவாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளது.

    மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள, மூன்று ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கக் கூடிய வழக்குகளை அடையாளம் கண்டு, விரைந்து முடிக்க, உச்ச நீதிமன்ற குழு, விதிமுறைகளை வகுத்துள்ளது. இதன் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை அமர்வு, தாமாக முன் வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளன. சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா உத்தரவின்படி, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள மூன்று ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கக் கூடிய வழக்குகள் குறித்த விவரங்களை வழங்கும்படி, வழக்கறிஞர்கள், காவல் துறையினர், வழக்கு தொடுத்தவர்களுக்கு அறிவுறுத்திய நீதிபதி, வழக்கு தொடர்பாக பதிலளிக்கும் படி தமிழக அரசுக்கும், புதுச்சேரி அரசுக்கும் உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்துள்ளார்.

    மேலும், சமரசம் செய்யத்தக்க வழக்குகளை அடையாளம் கண்டு, சமரசம் மூலமாகவோ, மாற்று முறை தீர்வு மூலமாகவோ வழக்கை முடித்து வைக்கலாம் எனவும், சமரசம் செய்து கொள்ள முடியாத வழக்குகளுக்கும் தீர்வு காணலாம் எனவும் தெரிவித்த நீதிபதி, தகுதியான வழக்குகளை திரும்பப் பெறுவது குறித்து காவல் துறைக்கு ஆலோசனைகள் வழங்கப்படும் எனவும், செக் மோசடி வழக்குகளிலும் சமரசம் செய்வது குறித்து முயற்சிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

    இதேபோல சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்ட இந்த வழக்கு, நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன் விசாரணைக்கு பட்டியலிட தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, பதிவுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    புதுவை மாநில அந்தஸ்துக்காக வழக்கு தொடர முடிவு: தமிழக முதல்வரை சந்திக்க காரைக்கால் திமுக திட்டம்

    August 18, 2025
    மாநிலம்

    மதுரை தவெக மாநாடுக்கு இருசக்கர வாகனங்களில் வருவதை தவிர்க்க வேண்டும்: காவல் துறை

    August 18, 2025
    மாநிலம்

    தீபாவளி முன்பதிவு: தென் மாவட்ட முக்கிய ரயில்களில் மூன்றரை நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்

    August 18, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் ஆகஸ்ட் 19-ம் தேதி முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

    August 18, 2025
    மாநிலம்

    இல.கணேசனுக்கு புகழஞ்சலி: முதல்வர் உள்பட அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பாஜக நேரில் அழைப்பு

    August 18, 2025
    மாநிலம்

    சொத்து வரி முறைகேடு விவகாரத்தில் அதிமுக அடக்கி வாசிக்கிறதா? – சந்தேகம் வலுப்பதன் பின்னணி

    August 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கொழுப்பு கல்லீரல்: இந்த ஒரு உணவை வெறும் 9 நாட்களுக்கு நீக்குவது கொழுப்பு கல்லீரல் மற்றும் தலைகீழ் சேதத்தை குறைக்கும், அமெரிக்க ஆராய்ச்சி முடிவுகளின் படி | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘கூலி’ லாபமா, நஷ்டமா? – 4 நாளில் ரூ.400 கோடியை கடந்த வசூல்!
    • புதுவை மாநில அந்தஸ்துக்காக வழக்கு தொடர முடிவு: தமிழக முதல்வரை சந்திக்க காரைக்கால் திமுக திட்டம்
    • மையத்தில் வாடாஸுக்கு ஏன் ஒரு துளை உள்ளது: தென்னிந்திய சிற்றுண்டி ரகசியங்கள் வெளிப்படுத்தப்பட்டன | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் உடன் பிரதமர் மோடி சந்திப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.