சென்னை: தமிழக பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சுப முகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் என்பதால், அந்நாட்களில் மக்களின் கோரிக்கையை ஏற்று கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்படுகிறது.
எனவே, ஆவணி மாத சுபமுகூர்த்த தினங்களான வரும் 28, 29-ம் தேதிகளில் மக்கள் கோரிக்கையை ஏற்று, ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 முன்பதிவு டோக்கன்கள், 2 சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதில் 300 முன்பதிவு டோக்கன்கள், அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 சாதாரண டோக்கன்களுடன், கூடுதலாக 4 தட்கல் டோக்கன்களும் மக்கள் பயன்பாட்டுக்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.