Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘20 ஆண்டாக பதவி உயர்வு இல்லை’ – புதுச்சேரி அரசுக் கல்லூரி உதவி பேராசிரியர்கள் பேரணி
    மாநிலம்

    ‘20 ஆண்டாக பதவி உயர்வு இல்லை’ – புதுச்சேரி அரசுக் கல்லூரி உதவி பேராசிரியர்கள் பேரணி

    adminBy adminSeptember 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘20 ஆண்டாக பதவி உயர்வு இல்லை’ – புதுச்சேரி அரசுக் கல்லூரி உதவி பேராசிரியர்கள் பேரணி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுச்சேரி: 20 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாததால், புதுவை, காரைக்கால் அரசு கல்லூரி உதவி பேராசிரியர்கள் பேரணியாக சென்று ஆளுநர் மாளிகையில் மனு அளித்தனர்.

    புதுவை அரசு கல்லூரி பேராசிரியர்கள் கூட்டுப் போராட்டக் குழு சார்பில் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி அருகே புறப்பட்ட பேரணிக்கு குழுவின் தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். செயலர் சங்கரய்யா முன்னிலை வகித்தார். பேரணி அஜந்தா சிக்னல், மிஷன் வீதி, நேரு வீதி வழியாக ராஜ்நிவாஸை அடைந்தது. அங்கு கோரிக்கை மனு அளித்தனர்.

    இந்தப் பேரணியில் புதுவை, காரைக்காலைச் சேர்ந்த பல்வேறு அரசு கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர். இதேபோல் ஏனாமில் உள்ள அரசு கல்லூரி பேராசிரியர்கள் அங்கு வாயில் முழக்க போராட்டம் நடத்தினர்.

    நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் சூழலில் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி புதுச்சேரியில் பேரணி நடத்தியதாக பேராசிரியர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் கூறியது: “புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் அரசு கல்லூரிகளுக்கு உரிய உதவி பேராசிரியர்களை, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) விளம்பரம் செய்து, நேர்காணல் செய்து, தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து அனுப்புகிறது.

    இவ்வாறு யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனால் கடந்த 2002 முதல் 2018 வரை தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டுள்ள உதவி பேராசிரியர்களுக்கு, கடந்த 20 ஆண்டுகளாக புதுவை அரசால் பதவி உயர்வு, ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.

    ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டும் இதுதொடர்பாக பல ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றமும் இல்லை. 6-வது ஊதியக்குழுவின் ஊதியமே இன்னும் உயர்கல்வித்துறையில் அமல்படுத்தப்படவில்லை. மேலும் யுபிஎஸ்சி 2018-ல் வெளியிட்ட அறிக்கையினையும் இன்னும் புதுவை அரசு வெளியிடவில்லை.

    கோரிக்கை பரிசீலிக்கப்படாததால் உதவி பேராசிரியர்களாக பணியில் இணைந்தவர்களில் சிலர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி உதவி பேராசிரியர்களாகவே ஓய்வுபெற்று வருகின்றனர். உதவி பேராசிரியர் என்ற நிலையில் பணியில் இருப்பவர்களின் ஊதியங்கள், குறிப்பிட்ட ஆண்டுகளில் படிப்படியாக உயர்த்தப்பட்டு, இணைப்பேராசிரியர்களாக பணி உயர்த்தப்பட வேண்டும் என்பது பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) விதியாகும்.

    கல்லூரி பேராசிரியர்களுக்கு உரிய ஊதியத்தை, பல்கலைக்கழக மானிய குழுவிலிருந்து (யூஜிசி) புதுவை அரசு பெற்றுக்கொண்டு, அதனை உரிய காலத்தில் உதவி பேராசிரியர்களுக்கு வழங்காமல், அந்தப் பணத்தை வேறு திட்டங்களுக்குத் திருப்பி விடுகின்றனர்.

    எங்களுக்கு சேர வேண்டிய ஊதியம் கிடைக்காமல் பல ஆண்டுகளாக பணியாற்றுவதால், சில உதவி பேராசிரியர்கள் நீதிமன்றத்தை அணுகி, ஊதிய சிக்கலுக்குத் தீர்வு காண முனைந்துள்ளனர். நீதிமன்ற உத்தரவுகளையும், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளையும் புதுவை அரசின் உயர்கல்வித் துறை கண்டுகொள்வதில்லை. இதையடுத்து இப்போராட்டத்தை நடத்தினோம்” என்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “இபிஎஸ் முதுகில் குத்தியதாக நான் சொல்லவே இல்லை” – பிரேமலதா விளக்கம்

    September 4, 2025
    மாநிலம்

    ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் உதவி கேட்போரை அடித்து விரட்டுவதா? – பாஜக கண்டனம்

    September 4, 2025
    மாநிலம்

    ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களால் மன உளைச்சல்: வருவாய் துறையினர் குமுறல்

    September 4, 2025
    மாநிலம்

    “பாமகவினர் எதிர்பார்க்கும் கூட்டணியை விரைவில் அறிவிப்பேன்” – அன்புமணி ராமதாஸ்

    September 4, 2025
    மாநிலம்

    வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள்: ஜிஎஸ்டி 2.0-க்கு பழனிசாமி வரவேற்பு

    September 4, 2025
    மாநிலம்

    ஜிஎஸ்டி 2.0: தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்கும், வலியுறுத்தும் அம்சங்கள்

    September 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “இபிஎஸ் முதுகில் குத்தியதாக நான் சொல்லவே இல்லை” – பிரேமலதா விளக்கம்
    • தூசி கட்டமைப்பை நிறுத்தி, உங்கள் வீட்டை புதியதாக வைத்திருக்க 8 எளிய தந்திரங்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் உதவி கேட்போரை அடித்து விரட்டுவதா? – பாஜக கண்டனம்
    • ஏழை, நடுத்தர மக்களுக்கு ஆடைகள் விலை குறையும்: ஜிஎஸ்டி 2.0-க்கு ஜவுளி துறையினர் வரவேற்பு
    • 10 அறிகுறிகள் உங்கள் வைட்டமின் டி குறைவாக உள்ளது, அது உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.