Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»2 ஆண்டுகள் ஆகியும் திறக்காமல் கிடக்கும் தென்காசி ஆட்சியர் அலுவலகம்! – ஆண்ட கட்சியும் ஆளும் கட்சியும் மாறி மாறி குற்றச்சாட்டு
    மாநிலம்

    2 ஆண்டுகள் ஆகியும் திறக்காமல் கிடக்கும் தென்காசி ஆட்சியர் அலுவலகம்! – ஆண்ட கட்சியும் ஆளும் கட்சியும் மாறி மாறி குற்றச்சாட்டு

    adminBy adminAugust 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    2 ஆண்டுகள் ஆகியும் திறக்காமல் கிடக்கும் தென்காசி ஆட்சியர் அலுவலகம்! – ஆண்ட கட்சியும் ஆளும் கட்சியும் மாறி மாறி குற்றச்சாட்டு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    “அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டிமுடிக்கப்பட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை கத்தரிக்கோலால் ரிப்பன் வெட்டி திறந்து வைக்க ஸ்டாலினுக்கு கை வலிக்கிறதா?” – அண்மையில் தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் இப்படியொரு கேள்வியை எழுப்பினார்.

    நெல்லை மாவட்​டத்​தி​லிருந்து 2019-ல் தென்​காசி மாவட்​டம் தனி​யாக பிரிக்​கப்​பட்​டது. இதையடுத்து தென்​காசி​யில் புதி​தாக கட்​டி​முடிக் கப்​பட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் 2 ஆண்​டு​களாக திறக்​க​முடி​யாமல் கிடப்​ப​தைத்​தான் இப்​படி காட்​ட​மாக சுட்​டிக்​காட்​டி​னார் பழனி​சாமி. ஆனால் தென்​காசி மக்​களைக் கேட்​டால், இது கதையே வேறல்​ல… என்று விரிக்​கி​றார்​கள்.

    தென்​காசி மாவட்​டம் உதய​மாகி ஓராண்டு கழித்து தென்​காசி புதிய பேருந்து நிலை​யம் அருகே 11.11 ஏக்​கர் நில​மானது ஆட்​சி​யர் அலு​வல​கம் கட்ட தேர்​வுசெய்​யப்​பட்​டது. இந்த இடத்​தில் ரூ.119 கோடி மதிப்​பீட்​டில் ஆட்​சி​யர் அலு​வல​கம் கட்ட 10.12.2020-ல் அப்​போதைய முதல்​வர் இபிஎஸ் காணொலி வழியே அடிக்​கல் நாட்​டி​னார்.

    இதையடுத்து கட்​டிடப் பணி​கள் தொடங்​கப்​பட்டு 2 ஆண்​டு​களுக்கு முன்​ன​தாக கட்​டு​மானப் பணி​கள் முடிவுக்கு வந்​தன. இருந்த போதும், நீதி​மன்​றத்​தில் வழக்கு நிலு​வை​யில் இருப்​ப​தால் புதிய கட்​டிடத்தை பயன்​பாட்​டுக்கு திறக்​க​முடி​யாமல் இருக்​கிறது மாவட்ட நிர்​வாகம். இதனால், தென்​காசி மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கத்​தின் முக்​கிய பிரி​வு​கள் பல்​வேறு இடங்​களில் தற்​காலிக கட்​டிடங்​களில் செயல்​பட்டு வரு​கின்​றன.

    இந்த நிலை​யில் தான், தனது சுற்​றுப்​பயணத்​தின் போது, “இது அதி​முக ஆட்​சி​யில் அடிக்​கல் நாட்டி பணி​கள் தொடங்​கப்​பட்ட கட்​டிடம் என்​ப​தால் அவர்​கள் திறக்​க​மாட்​டார்​கள். அதி​முக ஆட்​சிக்கு வந்​ததும் ஆட்​சி​யர் அலு​வலக கட்​டிடம் திறக்​கப்​பட்​டும்” என பொத்​தாம் பொது​வில் அள்​ளித் தெளித்​தார் இபிஎஸ்.

    இதுகுறித்து நம்​மிடம் பேசிய முன்​னாள் தென்​காசி தெற்கு மாவட்ட திமுக செய​லா​ளர் சிவபத்​ம​நாதன், “அதி​முக ஆட்​சி​யில் ஆட்​சி​யர் அலு​வல​கம் கட்​டு​வதற்கு முதலில் 3 குளங்​களுக்கு மத்​தி​யில் ஓர் இடத்​தைத் தேர்வு செய்​தனர். போக்​கு​வரத்து வசதி இல்​லாத அந்த இடத்​துக்கு பொது​மக்​கள் வந்து போவது சிரமம் என்​ப​தா​லும் குளங்​களால் சூழப்​பட்ட அந்​தப் பகு​தி​யில் கட்​டிடம் கட்​டி​னால் உறு​தி​யாக இருக்​காது என்​ப​தா​லும் திமுக கூட்​டணி கட்​சிகள் சார்​பில் போராட்​டங்​களை நடத்​தினோம். நான் நீதி​மன்​றத்​தில் வழக்​கும் தாக்​கல் செய்​தேன்.

    இத்​தனைக்​கும் பிறகு​தான் புதிய பேருந்து நிலை​யம் பகு​தி​யில் மாற்று இடத்தை தேர்வு செய்​தார்​கள். ஆனால், அந்த இடத்​தில் கட்​டிடம் கட்​டு​வதற்கு மாசுக்​கட்​டுப்​பாடு வாரி​யம், சுற்​றுச்​சூழல் துறை உள்​ளிட்ட துறை​களில் முறை​யாக அனு​மதி பெறாமலே அடிக்​கல் நாட்டி கட்​டிடப் பணி​களை துவக்​கி​விட்​டார்​கள். இது தொடர்​பாக நீதி​மன்​றத்​தில் வழக்​கும் தாக்​கலான​தால் கட்​டிடத்தை கட்​டி​முடித்​தும் திறக்​க​முடி​யாமல் இருக்​கிறது. உண்மை இவ்​வாறு இருக்க, எடப்​பாடி பழனி​சாமி தனது இஷ்டத்​துக்கு பேசி திமுக மீது பழி சுமத்​தி​யதை நாங்​கள் வன்​மை​யாகக் கண்​டிக்​கி​றோம்” என்​றார்.


    சிவபத்மநாதன், செல்வமோகன் தாஸ் பாண்டியன்

    தென்​காசி தெற்கு மாவட்ட அதி​முக செய​லா​ள​ரான செல்​வ​மோகன் தாஸ் பாண்​டிய​னோ, “ஆட்​சி​யர் அலு​வலக கட்​டு​மான பணி​கள் எங்​கள் ஆட்​சி​யிலேயே 75 சதவீதம் முடிந்​து​விட்​டது. இன்​னும் சில மாதங்​கள் எங்​கள் ஆட்சி நீடித்​திருந்​தால் நாங்​களே கட்​டிடத்தை திறந்​திருப்​போம். ஆனால் திமுக ஆட்​சி​யில், தேவை​யில்​லாமல் கட்​டு​மானப் பணி​களை ஓராண்டு காலம் இழுத்​தடித்​தனர்.

    அரசு கட்​டிடங்​களுக்கு கட்​டிட வேலை​களை ஆரம்​பித்த பிறகு தேவை​யான அனு​ம​தி​களை பெறு​வது வழக்​க​மான நடை​முறை​தான். சுற்​றுச்​சூழல் துறை அனு​மதி பெறா​விட்​டால் சம்​பந்​தப்​பட்ட துறை அதி​காரி​கள் சரி​யாக வேலை செய்​ய​வில்லை என்​று​தான் அர்த்​தம். அதி​காரி​களை சரி​யான முறை​யில் வேலை வாங்​காதது ஆட்​சி​யாளர்​களின் தவறு தானே?

    பணி​களை முடித்து 2 ஆண்​டு​களாக அனு​மதி பெறாமலும், நீதி​மன்​றத்​தில் வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்​காமல் இருப்​பதும் ஆளுங்​கட்​சி​யின் இயலாமை தானே? அதைத்​தான் எடப்​பாடி​யார் சுட்​டிக்​காட்​டி​னார்” என்​றார்.

    “உன்​னால் தான் நின்னு போச்சு என ஒரு​வரை மாற்றி ஒரு​வர் இனி​யும் குற்​றம் சொல்​லிக்​கொண்​டிருக்​காமல், கட்​டி​முடிச்ச ஆட்​சி​யர் அலு​வல​கத்தை கூடிய சீக்​கிரம் திறக்​கப் பாருங்​கப்பா என்​கி​றார்​கள் தென்​காசி மாவட்ட மக்​கள்​!





    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திருவாரூர்: ஆற்றில் சிக்கி தத்தளித்த 2 சிறுவர்களை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய பெண்!

    September 12, 2025
    மாநிலம்

    மருத்துவமனை இடமாற்றத்துக்கு சீமான் எதிர்ப்பு

    September 12, 2025
    மாநிலம்

    பட்டியலின ஊழியரை காலில் விழவைத்ததாக வெடித்த சர்ச்சை! – ஆளும் கட்சியினர் என்பதால் அடக்கிவாசிக்கிறதா போலீஸ்?

    September 12, 2025
    மாநிலம்

    மகாகவி பாரதியார் நினைவு தினம்: ஆளுநர், அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை

    September 12, 2025
    மாநிலம்

    சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்து உறுப்பு தானம் செய்தோர் பெயர்​ பதியப்பட்ட மதிப்புச்சுவர் செப்​.30-ல் திறப்பு

    September 12, 2025
    மாநிலம்

    கனிமவள துறை அமைச்சரின் மாவட்டத்திலேயே கனிமம் கொள்ளை: பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திருவாரூர்: ஆற்றில் சிக்கி தத்தளித்த 2 சிறுவர்களை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய பெண்!
    • உலகின் முதல் 10 அதிக மதிப்புள்ள நாணயங்கள் மற்றும் ஸ்மார்ட் பயணிப்பது எப்படி
    • சூரிய கிரகணம் 2025: பகுதி மற்றும் பாதுகாப்பான பார்வை உதவிக்குறிப்புகளுடன் பகுதி ‘சூர்யா கிரஹானைக் காண நாடுகளின் பட்டியல் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்திய மூல மனிதர் நம்மில் தலை துண்டிக்கப்பட்டார்: ஒரு சலவை இயந்திரம் எப்படி கொடூரமான கொலை செய்ய வழிவகுத்தது; கொலையாளி துண்டிக்கப்பட்ட தலையை உதைப்பதைக் கண்டார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கேரளாவில் அமீபா தொற்று: உயிரிழப்பு 6 ஆக உயர்வு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.