Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»12-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: தனியார் நிறுவனம் பணப்பலன் வழங்குவது உறுதி செய்யப்படும் – சென்னை மாநகராட்சி
    மாநிலம்

    12-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: தனியார் நிறுவனம் பணப்பலன் வழங்குவது உறுதி செய்யப்படும் – சென்னை மாநகராட்சி

    adminBy adminAugust 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    12-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: தனியார் நிறுவனம் பணப்பலன் வழங்குவது உறுதி செய்யப்படும் – சென்னை மாநகராட்சி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தனி​யார் நிறு​வனம் வழங்​கும் பணப்​பலன் உறு​தி​செய்​யப்​படும். எனவே தூய்​மைப் பணி​யாளர்​கள் உடனடி​யாக பணிக்​குத் திரும்​ப வேண்டும் என்று சென்னை மாநக​ராட்சி வேண்​டு​கோள் விடுத்​துள்​ளது. சென்னை மாநக​ராட்சி மண்​டலம் 5, 6 பகு​தி​களுக்​கான தூய்​மைப் பணி தனி​யார் நிறு​வனத்​துக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது.

    இதை எதிர்த்​தும், பணி நிரந்​தரம் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி​யும் இரண்டு மண்டல தூய்​மைப்பணி​யாளர்​களில் என்​யூஎல்​எம் பிரிவைச் சேர்ந்​தவர்​கள் கடந்த 12 நாட்​களாக ரிப்​பன் மாளிகை அருகே போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர். தூய்​மைப் பணி​யாளர்​களு​டன் 12-க்​கும் மேற்​பட்ட சுற்​றுகளில் நடை​பெற்ற பேச்​சு​வார்த்​தை​யும் தோல்​வி​யில் முடிந்த நிலை​யில், தொடர்ந்து வேலைநிறுத்​தம் நடை​பெற்று வரு​கிறது.

    இந்​நிலை​யில், அவர்​கள் பணிக்​குத் திரும்ப வேண்​டு​கோள் விடுத்து மாநக​ராட்சி வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:கடந்த ஆண்​டு​களில் 11 மண்​டலங்​களில் தூய்​மைப் பணி முறை மாற்​றப்​பட்​ட​போது செயல்​படுத்​தப்​பட்ட அதே நடவடிக்​கைகள் தற்​போதும் பின்​பற்​றப்​பட்​டன. ஆனால் இந்த இரண்டு மண்​டலங்​களில், சுயஉதவிக்​குழு அமைப்​பின் கீழ் பணி​யாற்றி வந்த தற்​காலிக தூய்​மைப் பணி​யாளர்​கள் இதை ஏற்​காமல், காத்​திருப்​புப் போராட்​டத்தை நடத்தி வரு​கின்​றனர்.

    இதனால் பல்​வேறு சேவை​களைப் பெறு​வதற்​காக சென்னை மாநக​ராட்​சிக்கு வரும் ஆயிரக்​கணக்​கான பொது​மக்​களும் பாதிக்​கப்​படு​கின்​றனர். போராட்​டம் தொடர்​வ​தால் சம்​பந்​தப்​பட்ட மண்​டலங்​களில் தூய்​மைப் பணி​களில் தொய்வு ஏற்​பட்டு குப்​பைகள் தேங்கி மக்​களுக்கு பெரும் சுகா​தா​ரப் பாதிப்பு ஏற்​படும் சூழ்​நிலை உள்​ளது. எந்​தவொரு தற்​காலிக தூய்​மைப் பணி​யாள​ரும் நீக்​கப்​பட​வோ, பணி மறுப்பு செய்​யப்​படவோ இல்​லை.

    இது​வரை சுயஉதவிக் குழுக்​கள் மூல​மாகவே பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்ட தற்​காலிக தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு பிஎஃப், இஎஸ்ஐ, போனஸ், பண்​டிகை​கால சிறப்பு உதவி​கள், திருமண உதவித் தொகை ரூ.20 ஆயிரம், கல்வி உதவித் தொகை ரூ.12 ஆயிரம், மரண நிகழ்​வுக்​கான உதவி, தற்​செயல், ஈட்​டிய விடுப்​பு​கள், இலவச சீருடை, பாது​காப்பு உபகரணங்​கள் என பல்​வேறு சலுகை​யும், பணி பாது​காப்​பும் கிடைக்​கும். இத்​துடன் தமிழக அரசின் தூய்​மைப் பணி​யாளர் நலவாரி​யம் மூல​மாக பல்​வேறு உதவி​கள் மற்​றும் சலுகைகளும் வழங்​கப்​படும்.

    தற்​காலிக தூய்​மைப் பணி​யாளர்​கள் அனை​வரை​யும், தனி​யார் நிறு​வனம் பணி​யில் சேர்ப்​ப​தை​யும் அவர்​களுக்கு உரிய பணி பாது​காப்பு மற்​றும் பணப் பலன்​கள் வழங்​கு​வதை​யும் சென்னை மாநக​ராட்சி 100 சதவீதம் உறுதி செய்​யும். எனவே, போ​ராட்​டத்​தில் ஈடு​படும் அனை​வரும் பொதுநலன் கரு​தி​யும், தங்​களது பணி​ பாது​காப்பு குறித்த உண்மை நிலை​யைப் புரிந்து கொண்​டும், உயர் நீதி​மன்ற வழக்​கு​களின் தீர்ப்பு மற்​றும் தொழில் தீர்ப்​பா​யத்​தின் முடிவு​களை எதிர்​நோக்​கி​யும், உடனடி​யாக வேலை நிறுத்​தத்தை கைவிட்டு பணிக்​குத் திரும்ப வேண்​டும். இவ்​வாறு அறிக்​கை​யில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மகளை தன்னுடன் அனுப்பி வைக்க கோரி தந்தை வழக்கு: உயர் நீதிமன்ற வளாகத்தில் 15 வயது சிறுமி தற்கொலை முயற்சி

    August 14, 2025
    மாநிலம்

    நீதிமன்ற உத்தரவுப்படி பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்ற கோரிக்கை: நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் பேரணி

    August 14, 2025
    மாநிலம்

    மலேசியாவில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானம்: தரையிறங்கியபோது புகை வந்ததால் பரபரப்பு

    August 14, 2025
    மாநிலம்

    சுதந்திர தின ஏற்பாடுகள் தீவிரம்: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீஸார்

    August 14, 2025
    மாநிலம்

    ஆவடி​ மாநகராட்சியைக் கண்டித்து ஆக.28-ம் தேதி ஆர்ப்பாட்டம்: இபிஎஸ் அறிவிப்பு

    August 14, 2025
    மாநிலம்

    சென்னையில் 13 நாட்களாக போராடி வந்த தூய்மை பணியாளர்கள் கைது: காவல் துறை நடவடிக்கை

    August 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மகளை தன்னுடன் அனுப்பி வைக்க கோரி தந்தை வழக்கு: உயர் நீதிமன்ற வளாகத்தில் 15 வயது சிறுமி தற்கொலை முயற்சி
    • எல்லா நேரத்திலும் புகார்? இது ஏன் மூளைக்கு மோசமானது, அதை எவ்வாறு சரிசெய்வது என்பதை நரம்பியல் விஞ்ஞானி விளக்குகிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நீதிமன்ற உத்தரவுப்படி பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்ற கோரிக்கை: நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் பேரணி
    • மலேசியாவில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானம்: தரையிறங்கியபோது புகை வந்ததால் பரபரப்பு
    • ஆரோக்கியமான சமையல் அரிசி: ஸ்டார்ச் குறைக்கவும் அதிகபட்ச ஊட்டச்சத்தை தக்கவைக்கவும் அரிசியை சமைப்பதற்கான சரியான வழி என்ன?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.