Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு கோரிய வழக்கு: டிஜிபி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
    மாநிலம்

    108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு கோரிய வழக்கு: டிஜிபி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

    adminBy adminSeptember 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு கோரிய வழக்கு: டிஜிபி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு கேட்டு தாக்கலான மனுவுக்கு டிஜிபி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மதுரையைச் சேர்ந்த 108 அவசர ஊர்தி ஓட்டுநர் இருளாண்டி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நான் கடந்த 16 ஆண்டுகளாக 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வருகிறேன். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடந்த 18.08.2025 வேலூர் மாவட்டத்தில் அணைப் பகுதியில் ‘மக்களை காப்போம்’ பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். இரவு 9.45 மணியளவில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுரேந்தர், அடுக்கம்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட சந்திரா என்ற பெண்ணை அழைத்துக்கொண்டு கூட்டம் நடைபெற்ற இடத்தை கடந்தார்.

    அப்போது எடப்பாடி பழனிசாமி, ஆம்புலன்ஸை பார்த்து, இனிமேல் நோயாளி இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதே வாகனத்தில் நோயாளியாகச் செல்வார் என பகிரங்மாக மிரட்டினார். இந்த மிரட்டல் தொடர்பாக போலீஸில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இந்நிலையில் 24.08.2025 அன்று திருச்சி அதிமுக பிரச்சாரக் கூட்டத்தின் போது கூட்டத்தில் மயங்கி விழுந்த ஒருவரை அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸ் வந்த போது, அங்கிருந்த அதிமுக உறுப்பினர்கள் டிரைவரைத் தாக்கி 108 ஆம்புலன்ஸை சேதப்படுத்தினர். இதில் பாதிக்கப்பட்ட ஓட்டுநர் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் 108 ஊழியர்களின் உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே 108 ஆம்புலன்ஸ் மற்றும் அதன் ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும். குறைந்த பட்சம் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடியும் வரையாவது தமிழ்நாடு முழுவதும் உள்ள 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்களின் உயிருக்கும் உடைமைக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், திருச்சியில் ஆம்புலன்ஸ் வேன் ஓட்டுனர் தாக்கப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதிகள், ஆம்புலன்ஸ் வாகனங்களை தாக்கியது யாராக இருந்தாலும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மனு தொடர்பாக டிஜிபி பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை செப்.12-க்கு தள்ளிவைத்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    நேரடி போட்டித் தேர்வின் மூலம் தேர்வான 2,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்க ஐகோர்ட் உத்தரவு

    September 3, 2025
    மாநிலம்

    “இந்த அவல ஆட்சி இருந்து என்ன பயன்?” – மழைநீர் வடிகால் பள்ளத்தில் பெண் உயிரிழந்த சம்பவத்துக்கு இபிஎஸ் கண்டனம்

    September 3, 2025
    மாநிலம்

    காட்டுப்பள்ளியில் போலீஸார் மீது கல் வீச்சு சம்பவம்: வடமாநில தொழிலாளர்கள் 29 பேர் சிறையில் அடைப்பு

    September 3, 2025
    மாநிலம்

    பத்திரிகையாளர்களுக்கு சமூக அக்கறை மிகவும் அவசியம்: மூத்த பத்திரிகையாளர் அறிவுரை

    September 3, 2025
    மாநிலம்

    திருச்சி வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் முர்மு: ஆளுநர், அமைச்சர்கள் வரவேற்பு

    September 3, 2025
    மாநிலம்

    “கழுதைகள் எங்கே என்று யாராவது கவலைப்படுகிறார்களா?” – தெருநாய்கள் குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் பதில்

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • விக்ரமை இயக்கும் விஷ்ணு எடவன்?
    • நேரடி போட்டித் தேர்வின் மூலம் தேர்வான 2,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்க ஐகோர்ட் உத்தரவு
    • அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் நாகை இறால் விவசாயிகள் அச்சம்!
    • மாதவன் 55 வயதில் இவ்வளவு இளமையாக தோற்றமளிக்கிறார்!
    • சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கியது ‘லோகா’ படக்குழு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.