Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»10,000 புத்தகங்களுடன் ரூ.1.85 கோடியில் சென்ட்ரல் மெட்ரோவில் விரைவில் மாபெரும் புத்தக பூங்கா!
    மாநிலம்

    10,000 புத்தகங்களுடன் ரூ.1.85 கோடியில் சென்ட்ரல் மெட்ரோவில் விரைவில் மாபெரும் புத்தக பூங்கா!

    adminBy adminMay 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    10,000 புத்தகங்களுடன் ரூ.1.85 கோடியில் சென்ட்ரல் மெட்ரோவில் விரைவில் மாபெரும் புத்தக பூங்கா!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் 10 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெறும் வகையில் ரூ.1.85 கோடியில் மாபெரும் புத்தக பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் இது மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது.

    வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் புத்தக பூங்காக்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து, சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் ரூ.1.85 கோடியில் மாபெரும் புத்தக பூங்கா அமைக்கப்படுகிறது. தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் அமைக்கப்படும் இந்த புத்தக பூங்கா, மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் திறக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து பாடநூல் கழக அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் அதிக மக்கள் வந்துசெல்லும் இடங்களில் முக்கியமானது சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம். தவிர, இங்கு போதிய இடவசதியும் உள்ளது. எனவே, ரயிலில் பயணம் செய்வோர் மட்டுமின்றி, பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில் மாபெரும் புத்தக பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெறும்.

    அகராதி, அரசியல், இலக்கியம், கல்வியியல், இயற்பியல், வேதியியல், கணிதவியல், தாவரவியல், விலங்கியல், உடற்செயலியல், உயிரியல், வேளாண்மை, மருத்துவம், பொருளாதாரம், பன்னாட்டு பொருளாதாரம், வணிகவியல், தமிழக, இந்திய, உலக வரலாறு, இங்கிலாந்து – ஐரோப்பிய வரலாறு, நிலவியல், மனையியல், சமூகவியல், உளவியல், வானியல், நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்கள், உயர்கல்வி நூல்கள், கீழடி நூல்கள், செவ்வியல் நூல்கள், சிறார் நூல்கள், கதை, கவிதை என பல்வகை நூல்கள் இடம்பெறும். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள், ஆங்கிலம் மட்டுமின்றி, மொழிபெயர்க்கப்பட்ட உலக மொழி புத்தகங்களும் இருக்கும்.

    அனைத்து புத்தகங்களையும் இங்கு ஒரே இடத்தில் வாங்கலாம். இதனால், பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். இங்கு விற்கப்படும் புத்தகங்களுக்கு 10 சதவீத தள்ளுபடி உண்டு. சிறப்பு நிகழ்வுகளில் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படும். நூலகம் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும்.

    சிறிய அளவில் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி, இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்த வசதியாக 80 பேர் அமரக்கூடிய அரங்கம், சிற்றுண்டியகம், வைஃபை ஆகிய வசதிகள் உள்ளன. மெட்ரோ ரயில் நிலையம் முழுவதும் ஏ.சி. வசதி உள்ளது. கண்காணிப்பு கேமரா, போதிய மின்வசதி, கழிப்பிட வசதி ஆகியவையும் உள்ளன. இதனால், இங்கு வரும் வாசகர்கள், பொதுமக்களுக்கு புத்தக வாசிப்பு ஓர் இனிய அனுபவத்தை தரும். இந்த புத்தக பூங்கா விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ஜெயலலிதா சொ.கு வழக்கில் தொடர்பில்லாத தனது சொத்தும் முடக்கப்பட்டதாக மூதாட்டி வழக்கு

    July 9, 2025
    மாநிலம்

    “கோயில் பணத்தில் கல்லூரிகள் கட்டுவதா?” – இபிஎஸ் பேச்சு சர்ச்சையும், அதிமுக விளக்கமும்

    July 9, 2025
    மாநிலம்

    “அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வென்று ஆட்சி அமைக்கும்!” – கோவை பிரச்சாரத்தில் பழனிசாமி பேச்சு

    July 8, 2025
    மாநிலம்

    “ஜெயலலிதா வாரிசுகளா, அமித் ஷா வழித்தோன்றல்களா?” – அதிமுகவினருக்கு திருமாவளவன் கேள்வி

    July 8, 2025
    மாநிலம்

    “அஜித்குமாரை தாக்கிய காவலர்கள் ஒரு சதவீத குற்ற உணர்ச்சி கூட இல்லாதவர்கள்” – வைகோ வேதனை

    July 8, 2025
    மாநிலம்

    கடலூர் ரயில் விபத்துக்கு மாவட்ட நிர்வாகம்தான் காரணமா? – முதல்வர் பதிலளிக்க பாஜக வலியுறுத்தல்

    July 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஜெயலலிதா சொ.கு வழக்கில் தொடர்பில்லாத தனது சொத்தும் முடக்கப்பட்டதாக மூதாட்டி வழக்கு
    • இதய ஆரோக்கியம்: குடிநீர் இதயத்தைப் பாதுகாக்க முடியும், மேலும் இதய செயலிழப்பு அபாயத்தைக் குறைக்கும் என்று அறிவியல் கூறுகிறது! | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “கோயில் பணத்தில் கல்லூரிகள் கட்டுவதா?” – இபிஎஸ் பேச்சு சர்ச்சையும், அதிமுக விளக்கமும்
    • ஹார்வர்ட் பயிற்சி பெற்ற தோல் மருத்துவரால் மெல்லிய, பம்ப் இல்லாத கால்களுக்கு ஸ்ட்ராபெரி கால்கள் மற்றும் 4-படி ஷேவிங் வழக்கம் என்ன? – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வென்று ஆட்சி அமைக்கும்!” – கோவை பிரச்சாரத்தில் பழனிசாமி பேச்சு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.