Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘ஸ்டாலின் சாரே நினைத்தாலும் அந்த சாரை காப்பாற்ற முடியாது’ – எடப்பாடி பழனிசாமி
    மாநிலம்

    ‘ஸ்டாலின் சாரே நினைத்தாலும் அந்த சாரை காப்பாற்ற முடியாது’ – எடப்பாடி பழனிசாமி

    adminBy adminJune 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘ஸ்டாலின் சாரே நினைத்தாலும் அந்த சாரை காப்பாற்ற முடியாது’ – எடப்பாடி பழனிசாமி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: “ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர, அவசரமாக இந்த வழக்கை முடிக்க திமுக அரசு முனைந்தது ஏன்? SIRஐ காப்பாற்றியது யார் ? இந்த கேள்விகள் கேள்விகளாகவே நீண்ட நாட்கள் இருக்காது. ஸ்டாலின் சாரே நினைத்தாலும், அந்த SIR-ஐ எந்த சாராலும் காப்பாற்ற முடியாது.” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் இன்று காலை தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. அதில் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எந்தவித தண்டனைக் குறைப்புமின்றி ஞானசேகரன் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

    இந்நிலையில் தண்டனை விவரம் வெளியான சில நிமிடங்களில் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர, அவசரமாக இந்த வழக்கை முடிக்க திமுக அரசு முனைந்தது ஏன்? SIRஐ காப்பாற்றியது யார் ? இந்த கேள்விகள் கேள்விகளாகவே நீண்ட நாட்கள் இருக்காது. ஸ்டாலின் சாரே நினைத்தாலும், அந்த SIR-ஐ எந்த சாராலும் காப்பாற்ற முடியாது.” என்று பதிவிட்டிருந்தார்.

    அந்தப் பதிவின் முழு விவரம்: அண்ணா பல்கலை. பாலியல் வழக்கின் குற்றவாளியான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது சென்னை மகளிர் நீதிமன்றம். இந்த வழக்கில் குற்றவாளி திமுக ஞானசேகரனைக் காப்பாற்ற எத்தனையோ சித்து வேலைகளை செய்தது ஸ்டாலின் மாடல் திமுக அரசு.

    அத்தனையும் முறியடித்து, மக்கள் மன்றம் முதல் சமூக ஊடகங்கள் வரை தனது தொடர் போராட்டத்தால் இந்த வழக்கின் குற்றவாளிகளில் ஒருவனான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு தண்டனையை சாத்தியப்படுத்தியுள்ளது அதிமுக.

    பாதிக்கப்பட்ட மாணவியின் குரலாக அஇஅதிமுக தொடர்ந்து ஒலிக்கும் என்ற வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றி வருகிறோம். அதனால் தான் #யார்_அந்த_SIR என்ற முழுமையான நீதிக்கான கேள்வியை இன்றும் கேட்கிறோம்.

    FIR-ல் குறிப்பிடப்பட்ட அந்த SIR யார்? விசாரணையின் போதே அந்த SIR Ruled-out செய்யப்பட்டது ஏன்? எதற்காக ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர அவசரமாக இந்த வழக்கை முடிக்க முனைந்தது திமுக அரசு? SIRஐ காப்பாற்றியது யார் ? இந்த கேள்விகள் கேள்விகளாகவே நீண்ட நாட்கள் இருக்காது. அதிமுக ஆட்சி அமைந்ததும், அனைத்து பதில்களும் கிடைக்கத் தான் போகிறது. ஸ்டாலின் சாரே நினைத்தாலும், அந்த SIR-ஐ எந்த சாராலும் காப்பாற்ற முடியாது!. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “செம்மொழிக்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்?” – சீமான் கேள்வி

    June 29, 2025
    மாநிலம்

    மீனவர்கள் பிரச்சினையில் கடிதம் எழுதுவதுடன் ஸ்டாலின் கடமையை முடித்துக் கொள்கிறார்: அன்புமணி

    June 29, 2025
    மாநிலம்

    இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது

    June 29, 2025
    மாநிலம்

    தாயின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசிய மகன்கள் – அடக்கம் செய்ய நிதி வசதி இல்லாததால் பரிதாபம்

    June 29, 2025
    மாநிலம்

    மனமகிழ் மன்றங்களை ஏற்படுத்தி போதைக்கு பாதை அமைத்து தருகிறார் முதல்வர்: தமிழிசை குற்றச்சாட்டு

    June 29, 2025
    மாநிலம்

    “முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை முடிவு செய்யும்” – ஹெச்.ராஜா கருத்து

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “செம்மொழிக்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்?” – சீமான் கேள்வி
    • முடி எண்ணெய் அல்லது முடி சீரம்? உங்கள் முடி வகைக்கு எது சிறந்தது என்பதைக் கண்டறியவும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்தியாவை கண் நோயான ‘டிராக்கோமா’ இல்லாத நாடாக WHO அறிவித்துள்ளது: பிரதமர் பேச்சு
    • மறக்குமா நெஞ்சம் | இந்தியாவின் அசாத்திய வெற்றியும்; டி20 உலகக் கோப்பை பட்டமும் OTD
    • ‘தி பாரடைஸ்’ படப்பிடிப்பில் இணைந்த நானி!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.