Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ஸ்டாலினா பெட்டியைத் திறந்து மனுக்களை படிக்கப் போகிறார்? – உள்ளதைச் சொல்ல முடியாமல் உழலும் உடன்பிறப்புகள்!
    மாநிலம்

    ஸ்டாலினா பெட்டியைத் திறந்து மனுக்களை படிக்கப் போகிறார்? – உள்ளதைச் சொல்ல முடியாமல் உழலும் உடன்பிறப்புகள்!

    adminBy adminJune 25, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஸ்டாலினா பெட்டியைத் திறந்து மனுக்களை படிக்கப் போகிறார்? – உள்ளதைச் சொல்ல முடியாமல் உழலும் உடன்பிறப்புகள்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஆளும் கட்சியாக இருந்தாலும் அடிமட்ட திமுக-வினருக்கு ஆயிரம் மனக்குறைகள் இருக்கின்றன. அதையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் கட்சி நிர்வாகிகளை சட்டமன்ற தொகுதி வாரியாக சந்தித்து வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். ஆனால், இந்தச் சந்திப்புகளில் ஆர்வமாக பங்கெடுக்கும் உடன்பிறப்புகள், தங்களது மனக்குமுறலை கொட்டி ஆறுதல் தேட முடியாமல் பேருக்கு வந்து போய்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

    இதற்கு முன்​பும் இது​போன்ற சந்​திப்​பு​களை நடத்தி இருக்​கி​றார் ஸ்டா​லின். அப்​போதெல்​லாம், மாவட்​டச் செய​லா​ளர்​கள், உள்​ளிட்​டோர் மீது கீழ்​மட்ட நிர்​வாகி​கள் ஏராள​மான குற்​றச்​சாட்​டு​களைக் கொட்டி இருக்​கி​றார்​கள். அதற்​கெல்​லாம் எந்த விடியலும் ஏற்​பட​வில்​லை. மாறாக, சில இடங்​களில் குறை​களைச் சொன்​ன​வர்​களே குற்​ற​வாளி​களாக சித்​தரிக்​கப்​பட்​டார்​கள்.

    இந்த நிலை​யில் இப்​போது, ஒன் டு ஒன் என்று சொல்லி நிர்​வாகி​களை நேரடி​யாக சந்​தித்து வரு​கி​றார் ஸ்டா​லின். ஒரு தொகு​திக்கு 12 நிர்​வாகி​களிடம் நேர்​காணல் நடத்​தும் அவர், ஒரு நிர்​வாகிக்கு 5 நிமிடங்​கள் ஒதுக்​கு​கி​றார். இது ஒன் டு ஒன் சந்​திப்பு எனச் சொல்​லப்​பட்​டாலும் ஒன் டு செவன் சந்​திப்​பாகவே நடக்​கிறது.

    ஸ்டா​லினுடன் அவரது தனி செய​லா​ளர் தினேஷ், அமைப்​புச் செய​லா​ளர் ஆர்​.எஸ்​.​பார​தி, டி.கே.எஸ். இளங்​கோவன், அன்​பகம் கலை, தாயகம் கவி, ஆஸ்​டின் என ஏழு பேர் அமர்ந்​திருக்​கி​றார்​கள். நேர்​காணலுக்கு வரும் நிர்​வாகி​களிடம் கட்​சி​யில் என்ன பிரச்​சினை இருக்​கிறது என்று கேட்​ப​தற்கு பதிலாக தனது கையிலுள்ள ரிப்​போர்ட்​டில் இருக்​கும் விவரங்​களை அவர்​களிடம் கேட்டு சரி பார்க்​கி​றார் ஸ்டா​லின்.

    சம்​பந்​தப்​பட்ட நிர்​வாகி​யின் செயல்​பாடு​கள், அவரது பகுதி சார்ந்த கட்சி பிரச்​சினை​கள், எதிர்க்​கட்​சி​யின் பலம் ஆகியவை ஸ்டா​லின் கையில் இருக்கும் ரிப்​போர்ட்​டில் இருக்​கிறது. அதன் மீதான தனது சந்​தேகங்​களை கேட்​டுத் தெளிந்து கொண்டு நிர்​வாகிக்கு விடை கொடுக்​கி​றார். யாராவது மற்ற பிரச்​சினை குறித்து பேச ஆரம்​பித்​தால், அங்​கிருக்​கும் மற்​றவர்​கள் குறுக்​குக் கேள்வி கேட்டு அவரை வாயடைக்க வைத்​து​விடு​வ​தாகச் சொல்கி​றார்​கள். இதனால், மாவட்​டச் செய​லா​ளர்​கள், அமைச்​சர்​கள் உள்​ளிட்ட நிர்​வாகி​கள் மீது தங்​களுக்கு இருக்​கும் மன வருத்​தத்தை சொல்​ல​முடி​யாமலேயே வந்​தவர்​கள் திரும்​பி​விடு​கி​றார்​கள்.

    ஸ்டா​லினுடன் அமர்ந்​திருக்​கும் மற்ற நிர்​வாகி​கள் சதா அறி​வால​யத்​தில் இருப்​பவர்​கள். அதனால் இவர்​களுக்​கும் மாவட்​டச் செய​லா​ளர்​களுக்​கும் பரிச்​சய​மான நட்பு இருக்​கும். அப்​படி இருக்​கை​யில், மாவட்​டச் செய​லா​ளர்​கள் பற்றி குறை சொன்​னால் இவர்​களில் யாராவது சம்​பந்​தப்​பட்ட மாவட்​டச் செய​லா​ளர்​களுக்கு அதைச் சொல்ல மாட்​டார்​கள் என்​பது என்ன நிச்​ச​யம்? என திமுக நிர்​வாகி​கள் கேள்வி எழுப்​பு​கி​றார்​கள்.

    இதுகுறித்து நம்​மிடம் பேசிய நிர்​வாகி​கள் சிலர், “ஜெயலலிதா இருந்த போது கொளப்​பாக்​கத்​தில் நேர்​காணல் நடத்​தி​னார். ஒரு நாளைக்கு அதி​கபட்​சம் 13 ஆயிரம் பேர் வரைக்​கும் அந்த நேர்​காணலுக்கு அழைக்​கப்​பட்​டார்​கள். அத்​தனை பெரிய கூட்​டத்​தில் குத்​து​ம​திப்​பாக யாரிட​மாவது மைக்​கைக் கொடுத்து பேசவைப்​பார். அந்த நபர் யாரைப் பற்றி குறை சொல்​கி​றாரோ அது குறித்து உடனே விசா​ரணை நடத்தி சம்​பந்​தப்​பட்ட நிர்​வாகி யாராக இருந்​தா​லும் அவர்​களை பொறுப்​பிலிருந்து தூக்​கி​விடு​வார். அதனால், அம்மா நேர்​காணல் என்​றாலே அதி​முக-​காரர்​கள் அலறி​னார்​கள். அது போன்ற நடவடிக்கை எல்​லாம் திமுக-​வில் இல்​லை. பிறகு என்ன நம்​பிக்​கை​யில் நிர்​வாகி​கள் உண்மை நில​வரத்​தைச் சொல்ல முன்​வ​ரு​வார்​கள்?

    நேரில் சொல்​ல​முடி​யாததை எழுதி பெட்​டி​யில் போடச் சொல்​கி​றார்​களே… இதற்கு முன்பு வைத்த பெட்​டிகளில் போட்ட மனுக்​களுக்கு என்ன நடவடிக்கை எடுத்​தார்​கள்? அந்​தப் பெட்​டியை ஸ்டா​லினா திறந்து பார்த்து மனுக்​களை படிக்​கப் போகி​றார்? ஆக மொத்​தத்​தில், இது ஒரு சம்​பிர​தாய சடங்கு என்​ப​தைத் தவிர வேறெது​வும் இல்​லை” என்​கி​றார்​கள்.

    இதுகுறித்து திமுக மாநில செய்தி தொடர்பு இணைச் செய​லா​ளர் வழக்​கறிஞர் தமி​ழன் பிரசன்​னா​விடம் கேட்​டதற்கு, “தலை​வ​ருட​னான இந்​தச் சந்திப்​பில் நிர்​வாகி​கள் தங்​களது கருத்​துகளை எந்​த​வித தயக்​கமோ, அச்​சமோ இல்​லாமல் எடுத்​துச் சொல்​கி​றார்​கள். கட்​சி​யில் உள்ள பிரச்​சினை​களை​யும் தயக்​கமின்றி சொல்​கி​றார்​கள். அவர்​கள் சொல்​வது நடவடிக்கை எடுக்​கும் அளவுக்​கான பிரச்​சினை என்​றால் தலை​வர் உடனடி நடவடிக்கை எடுக்​கி​றார்.

    நேர்​காணலின் போது தலை​மைக் கழக நிர்​வாகி​களை உடன் வைத்​துக் கொள்​வது ஒரு பேரியக்​கத்​தின் மரபு. அவர்​கள் இல்​லாமல் சம்​பந்​தப்​பட்ட மாவட்​டச் செய​லா​ளரோ, மாவட்ட அமைச்​சரோ அங்​கிருந்​தால் குறை சொல்​லலாம். முந்​தைய சந்​திப்​பு​களில் சொல்​லப்​பட்ட குறை​கள் தொடர்​பாக தேவை​யான நடவடிக்​கை​கள் எடுக்​கப்​பட்​டுள்​ளன. எடுத்​தேன் கவிழ்த்​தேன் என்​றில்​லாமல், நிர்​வாகி​கள் சொல்​லும் குறை​களை அலசி ஆராய்ந்து முடி​வெடுப்​பது தான் தலை​மை​யின் பண்​பு. எனவே, தலை​வ​ருட​னான இந்த சந்​திப்பு நிர்​வாகி​களுக்​கும் தலை​மைக்​கும் மிகுந்த மகிழ்ச்​சியை தருவதாக இருக்​கிறது என்​பதே நிஜம்” என்​றார்.

    பிரசன்னா இப்​படிச் சொன்​னாலும், இத்​தனை நாள் விட்​டு​விட்டு ஆட்​சி​யின் இறு​திக் கட்​டத்​தில் வந்து கருத்​துக் கேட்​ப​தால் என்ன ஆகி​விடப் போகிறது என்ற மனநிலை​யில் தான் பெரு​வாரி​யான நிர்​வாகிகள் இருக்​கிறார்​கள்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

    July 1, 2025
    மாநிலம்

    21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் ஜூலை 9 தொழிற்சங்கங்கள் பந்த்

    July 1, 2025
    மாநிலம்

    பாமக-வை சிதைக்கும் நோக்கத்துடன் திமுக செயல்படுகிறது: கட்சி நிர்வாகிகள் கூட்டாக பேட்டி

    July 1, 2025
    மாநிலம்

    புதுச்சேரியில் சூதாட்ட சுற்றுலா கப்பலுக்கு அனுமதி: முதல்வர், ஆளுநருக்கு அதிமுக கேள்வி

    July 1, 2025
    மாநிலம்

    தமிழகத்தின் மீது அக்கறையுள்ள கட்சி திமுக: அமைச்சர் துரைமுருகன்

    July 1, 2025
    மாநிலம்

    ஞானசேகரன் குறித்த ஆதாரங்கள் இருப்பதாக கூறிய அண்ணாமலையிடம் விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி 

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மூளை ஆரோக்கிய பூஸ்ட் உதவிக்குறிப்புகள்: மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், டிமென்ஷியா அபாயத்தைக் குறைக்கவும் நரம்பியல் நிபுணர் 5 பயனுள்ள உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்
    • ஜிஎஸ்டியால் 8 ஆண்டுகளில் 18 லட்சம் நிறுவனங்கள் மூடல்: ராகுல் காந்தி
    • அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
    • புற்றுநோய்: முழுமையான இருளில் தூங்குவது: புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்க இது எவ்வாறு உதவுகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மகாராஷ்டிராவில் ஒலிபெருக்கி கட்டுப்பாடு எதிரொலி: மசூதிகளின் பாங்கு ஒலிக்கும் ‘செயலி’க்கு வரவேற்பு!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.