சென்னை: சென்னையில் மதிமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் அணிச் செயலாளர் ப.த.ஆசைத்தம்பி தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியின் முதன்மைச் செயலர் துரை வைகோ சிறப்புரையாற்றினார்.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: அமைப்பு ரீதியான மாவட்டங்கள் அனைத்திலும் ஒன்றியம், நகரம், பகுதி அளவில் இளைஞரணி அமைப்பாளர்களை மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் நியமிக்க வேண்டும்.
பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வரும் முதன்மைச் செயலர் துரை வைகோவுக்கு பாராட்டுக்கள். பொதுச்செயலாளர் வைகோ மீது சாதி முலாம் பூசும் தீய சக்திகளுக்கு வன்மையான கண்டனம். இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.