Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»வைகை ஆற்றில் மிதந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள்: நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி
    மாநிலம்

    வைகை ஆற்றில் மிதந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள்: நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி

    adminBy adminAugust 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    வைகை ஆற்றில் மிதந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள்: நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சிவகங்கை: ​திருப்​புவனம் வைகை ஆற்​றில் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாமில் பெறப்​பட்ட மனுக்​கள் மிதந்து வந்​த​தால், பொது​மக்​கள் அதிர்ச்சி அடைந்​தனர். இதில் சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்​சி​யர் கா.பொற்​கொடி தெரி​வித்​துள்​ளார்.

    தமிழகம் முழு​வதும் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாம்​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இந்த முகாம்​களில் பெறப்​படும் மனுக்​களுக்கு அதி​கபட்​சம் 45 நாட்​களுக்​குள் தீர்வு காணப்​படும் என்று முதல்​வர் ஸ்டா​லின் அறி​வித்​திருந்​தார். அதன்​படி, சிவகங்கை மாவட்​டத்​தில் தின​மும் 6 முகாம்​கள் என்ற வகை​யில், வாரத்​துக்கு 4 நாட்​கள் முகாம்​கள் நடத்​தப்​படு​கின்​றன.

    திருப்​புவனம் வட்​டத்​துக்கு உட்​பட்ட திருப்​புவனம் பேரூ​ராட்சி மற்​றும் பூவந்​தி, கீழடி, கொந்​தகை, நெல்​முடிக்​கரை, மடப்​புரம் உள்​ளிட்ட கிராமங்​களில் நடை​பெற்ற முகாம்​களில் ஆயிரக்​கணக்​கானோர் மனுக்​கள் அளித்​திருந்​தனர். இந்​நிலை​யில், நேற்று காலை திருப்​புவனம் வைகை ஆற்​றில் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாம்​களில் பெறப்​பட்ட மனுக்​கள் மிதந்​தன. இதைப் பார்த்த அப்​பகு​தி​யைச் சேர்ந்த கார்த்​திக் என்​பவர், வரு​வாய்த் துறை அதி​காரி​களுக்கு தகவல் தெரி​வித்​தார்.

    அங்கு சென்ற அதி​காரி​கள், அந்த மனுக்​களை மீட்​டனர். இம்​மனுக்​கள், கிராம நிர்​வாக அலு​வலர், வரு​வாய் ஆய்​வாளர் உள்​ளிட்ட அதி​காரி​களின் கையெழுத்​திட்ட அசல் மனுக்​களாக இருந்​தன. இதுகுறித்து திருப்​புவனம் போலீ​ஸார் விசா​ரிக்​கின்​றனர். தீர்வு கிடைக்​கும் என்று எதிர்​பார்த்​து, பல மணி நேரம் காத்​திருந்து அளித்த மனுக்​கள் ஆற்​றில் மிதந்த சம்​பவம் பொது​மக்​களிடையே அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

    மீட்கப்பட்ட மனுக்கள்.

    இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்​சி​யர் கா.பொற்​கொடி கூறிய​தாவது: ஆற்​றில் மனுக்​கள் மிதந்​தது குறித்து சிவகங்கை கோட்​டாட்​சி​யர் விஜயகு​மார் தலை​மை​யில் விசா​ரணை நடத்​தப்​பட்​டது. அதில், உங்​களு​டன் ஸ்டா​லின் திட்ட முகாமில் பெறப்​பட்ட 6 பட்டா மாறு​தல் மனுக்​களின் நகல்​கள் இருந்​தன. அந்த மனுக்​கள் மீது ஏற்​கெனவே தீர்வு காணப்​பட்​டுள்​ளன. அத்​துடன் வட்​டாட்​சி​யர் அலு​வல​கம் மூலம் பெறப்​பட்ட 7 மனுக்​களின் நகல்​களும் இருந்​தன.

    மனுக்​களை ஆற்​றில் வீசி​யது தொடர்​பாக, திருப்​புவனம் வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில் கடந்த 2 நாட்​களாகப் பணிபுரிந்த அலு​வலர்​கள், பணி​யாளர்​களிடம் விசா​ரணை நடை​பெறுகிறது. மேலும், இது தொடர்​பாக மாவட்ட காவல் கண்​காணிப்​பாளரிடம் கோட்​டாட்​சி​யர் மனு அளித்​துள்​ளார். அரசுக்கு களங்​கம் ஏற்படுத்தும் வகை​யில், இது​போன்ற சமூக​விரோதச் செயல்​களில் ஈடு​பட்​டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

    நடவடிக்கை எடுக்​க​வில்​லை… ஆற்​றில் கிடந்த மனுக்​களில் பூவந்​தி​யைச் சேர்ந்த செல்வி என்​பவரது மனு​வும் இருந்​தது. இதுகுறித்து அவரிடம் கேட்​ட​போது, “பட்டா மாறு​தல் குறித்து மனு கொடுத்​திருந்​தேன். மனு மீது உடனடி​யாக நடவடிக்கை எடுப்​ப​தாக அதி​காரி​கள் கூறினர். இது​வரை நடவடிக்கை எடுக்​காத நிலை​யில், வைகை ஆற்​றில் எங்​களது மனுக்​களை ஏன் வீசவேண்​டும்? சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்​றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மாணவர்களிடம் சாதிய உணர்வு போன்ற பிற்போக்குத்தனம் வந்துவிடக் கூடாது: ஆசிரியர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

    September 21, 2025
    மாநிலம்

    நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் ஆங்கிலேய கல்விமுறையை தொடர்வது வேதனை: ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

    September 21, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் மோசமான ஆட்சி நடப்பதால் விஜய்யின் தாக்குதல் திமுக மீது மட்டுமே இருக்க வேண்டும்: தமிழிசை கருத்து

    September 21, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் கடந்த 5 நாட்களில் 17 பாலியல் குற்றங்கள்: நயினார் நாகேந்திரன் கண்டனம்

    September 21, 2025
    மாநிலம்

    பாஜகவை தடுத்து நிறுத்​தும் ஆற்றல் திமுகவுக்கு மட்டுமே இருக்கிறது: மக்களின் கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

    September 21, 2025
    மாநிலம்

    அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து: ஜவாஹிருல்லா கண்டனம்

    September 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சூரிய கிரகணம் 2025: சூரிய கிரகணத்தின் போது திடீர் இருளுக்கு விலங்குகள் எவ்வாறு செயல்படுகின்றன
    • பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜேடியு – பாஜக சரிபாதி தொகுதிகளில் போட்டி?
    • ஞாயிற்றுக்கிழமை ரசிகர்களுக்கு சிறப்பானதாக அமையும்: கேப்டன் சூர்யகுமார் யாதவ் நம்பிக்கை
    • தொடர்ந்து தண்ணீர் குடிப்பது ஆனால் இன்னும் நீரிழப்புடன் உணர்கிறீர்களா? இந்த முக்கியமான நீரேற்றம் உறுப்பை அவர்கள் காணவில்லை என்று பெரும்பாலான மக்கள் அறிந்திருக்கவில்லை – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • போர்டில் பீதி: K 100K H -1B விசா கட்டணம் இந்திய பயணிகளிடையே விமான குழப்பத்தைத் தூண்டுகிறது – வாட்ச் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.