Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»வைகை ஆற்றில் மனுக்கள் மிதந்த விவகாரம்: நில அளவை துறை உதவி வரைவாளர் கைது
    மாநிலம்

    வைகை ஆற்றில் மனுக்கள் மிதந்த விவகாரம்: நில அளவை துறை உதவி வரைவாளர் கைது

    adminBy adminSeptember 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    வைகை ஆற்றில் மனுக்கள் மிதந்த விவகாரம்: நில அளவை துறை உதவி வரைவாளர் கைது
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சிவகங்கை: சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் வைகை ஆற்​றில் ஆக. 29-ம் தேதி காலை ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாம் மனுக்​கள் மிதந்​தன. இதுகுறித்து சிவகங்கை கோட்​டாட்​சி​யர் விஜயகு​மார் விசா​ரணை நடத்​தி​னார். அதனடிப்​படை​யில், திருப்​புவனம் வட்​டாட்​சி​யர் விஜயகு​மார் இடமாற்​றம் செய்​யப்​பட்​டார். மேலும், அலட்​சி​ய​மாகப் பணிபுரிந்த 7 அலு​வலர்​கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டது.

    முன்னதாக, திருப்​புவனம் வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில் நில அளவைப் பிரி​வில் பராமரிக்​கப்​பட்டு வந்த 13 பட்டா மாறு​தல் தொடர்​பான மனுக்​களை மர்ம நபர்​கள் திருடிச் சென்​ற​தாக, வட்​டாட்​சி​யர் விஜயகு​மார் புகார் அளித்​திருந்தார். அதன்​பேரில், திருப்​புவனம் போலீ​ஸார் வழக்​குப்பதிந்​தனர். வட்​டாட்​சியர்அலு​வல​கத்​தில் சிசிடிவி கேம​ராக்​கள் இல்​லாத​தால், மனுக்​களை திருடிய நபரைக் கண்​டறிவ​தில் தாமதம் ஏற்​பட்​டது.

    இதனிடையே, திருப்​புவனம் வட்​டாட்​சி​யர் அலு​வலக நில அளவைப் பிரி​வில் பணிபுரி​யும் முது​நிலை வரை​வாளர் சரவணனுக்கு 17 ‘பி’-ன் கீழ் நடவடிக்கை எடுக்​க​வும், அவுட்​சோர்​சிங்​கில் பணிபுரி​யும் புல உதவி​யாளர் அழகுப்​பாண்​டியை பணிநீக்​கம் செய்​ய​வும், நில அளவைத் துறை உதவி இயக்​குநருக்கு மாவட்ட ஆட்​சி​யர் அறி​வுறுத்​தி​ய​தாகக் கூறப்​படு​கிறது.

    இதற்​கு, தமிழ்​நாடு அரசு அலு​வலர் ஒன்​றி​யம், நில அளவை அலு​வலர்​கள் ஒன்​றிப்பு சங்​கத்​தினர் எதிர்ப்பு தெரி​வித்​தனர். இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு திருப்​புவனம் வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில் நில அளவைப் பிரி​வில் பணிபுரி​யும் உதவி வரை​வாளர் முத்​துக்​குமரனை (42) போலீ​ஸார் பிடித்து விசா​ரித்​தனர். நில அளவை அலு​வலர்​கள் ஒன்​றிப்பு சங்​கத்​தினர், முறை​யான ஆதா​ரம் இல்​லாமல் கைது செய்​யக் கூடாது என எதிர்ப்பு தெரி​வித்​தனர். எனினும், வைகை ஆற்​றுப் பாலத்​தில் முத்​துக்​குமரன் சென்று வந்​தது அங்​குள்ள சிசிடிவி காட்​சிகளில் பதி​வான​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

    அதே​நேரத்​தில், மனுக்​கள் கொண்டு வந்​ததற்​கோ, ஆற்​றில் வீசி​யதற்கோஆதா​ரம் இருந்​தால் மட்​டுமே கைது செய்ய வேண்​டுமென சங்​கத்​தினர் வலி​யுறுத்​தினர். இதையடுத்​து, மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் சிவபிர​சாத், கூடு​தல் காவல் கண்​காணிப்​பாளர் பிரான்​சிஸ், டிஎஸ்பி பார்த்​திபன், ஆய்​வாளர் முத்​துக்​கு​மார் ஆகியோர் நேற்று முழு​வதும் விசா​ரணை நடத்​தினர். பின்​னர், வைகை ஆற்​றுப் பாலத்​துக்​குச் சென்று வந்​ததற்கு முறை​யாக காரணம் கூற​வில்லை என்று கூறி முத்​துக்​குமரனை நேற்​று இரவு கைது செய்​தனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தேசிய லோக் – அதாலத் மூலம் ரூ.719 கோடி இழப்பீடு: ஒரே நாளில் 90,892 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு

    September 14, 2025
    மாநிலம்

    பொதுமக்களின் குரல் உங்களுக்கு கேட்கிறதா முதல்வரே? – திருச்சி பிரச்சாரத்தில் தவெக தலைவர் விஜய் கேள்வி

    September 14, 2025
    மாநிலம்

    அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி திறப்பதுதான் திமுக அரசின் சாதனை: இபிஎஸ் விமர்சனம்

    September 14, 2025
    மாநிலம்

    இனி ஆண்டுதோறும் ‘இசைஞானி இளையராஜா’ பெயரில் விருது – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

    September 14, 2025
    மாநிலம்

    இந்திய கம்யூ. மாநில செயலாளராக வீரபாண்டியன் போட்டியின்றி தேர்வு

    September 14, 2025
    மாநிலம்

    “நான் எப்போதும் மக்கள் கடலோடு இருப்பதைப் பார்த்த எதிரிகள்…” – அரியலூரில் விஜய் பேச்சு

    September 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தேசிய லோக் – அதாலத் மூலம் ரூ.719 கோடி இழப்பீடு: ஒரே நாளில் 90,892 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு
    • பொதுமக்களின் குரல் உங்களுக்கு கேட்கிறதா முதல்வரே? – திருச்சி பிரச்சாரத்தில் தவெக தலைவர் விஜய் கேள்வி
    • குரூப்-2 தேர்வுக்கு செப்.23-ல் 3-வது கட்ட கலந்தாய்வு
    • அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி திறப்பதுதான் திமுக அரசின் சாதனை: இபிஎஸ் விமர்சனம்
    • ஆப்டிகல் மாயை: 82 களில் மறைக்கப்பட்ட 28 ஐ 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.