Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 20
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் மனுக்கள் மிதந்த விவகாரம்: அலுவலகத்திலிருந்து மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக வழக்கு
    மாநிலம்

    வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் மனுக்கள் மிதந்த விவகாரம்: அலுவலகத்திலிருந்து மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக வழக்கு

    adminBy adminAugust 31, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் மனுக்கள் மிதந்த விவகாரம்: அலுவலகத்திலிருந்து மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக வழக்கு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சிவகங்கை: திருப்​புவனம் வைகை ஆற்​றில் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாம் மனுக்​கள் மிதந்த விவ​காரத்​தில், வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​திலிருந்து அவற்றை மர்ம நபர்​கள் திருடிச்​சென்​ற​தாக போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.

    சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் வட்​டத்​துக்கு உட்​பட்ட திருப்​புவனம் பேரூ​ராட்சி மற்​றும் பூவந்​தி, கீழடி, கொந்​தகை, நெல்​முடிக்​கரை, மடப்​புரம் உள்​ளிட்ட கிராமங்​களில் நடை​பெற்ற ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாம்​களில் ஆயிரக்​கணக்​கானோர் மனுக்​களை சமர்ப்​பித்​தனர். இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் காலை திருப்​புவனம் வைகை ஆற்​றில் இந்த மனுக்​கள் மிதந்​தன. இதையடுத்​து, அவற்றை வரு​வாய்த் துறை அதி​காரி​கள் மீட்​டுச் சென்​றனர். இச்​சம்​பவம் பொது​மக்​கள் மத்​தி​யில் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது.

    இதைக் கண்​டித்து அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், முன்​னாள் மாநிலத் தலை​வர் அண்​ணா​மலை, பாமக தலை​வர் அன்​புமணி, நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் உள்​ளிட்​டோர் அறிக்கை வெளி​யிட்​டனர்.

    இது தொடர்​பாக மாவட்ட ஆட்​சி​யர் கா.பொற்​கொடி உத்​தர​வின்​பேரில், கோட்​டாட்​சி​யர் விஜயகு​மார் விசா​ரணை நடத்​தி​னார். அதில், ஆற்​றில் மிதந்​தவற்​றில் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாம் மனுக்​கள் 6, வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில் பெற்ற மனுக்​கள் 7 என மொத்​தம் 13 மனுக்​களின் நகல்​களே இருந்தன என்​றும், ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாமில் பெறப்​பட்ட 6 மனுக்​களும் தீர்வு காணப்​பட்டவை என்​றும் தெரிய​வந்​த​தாக மாவட்ட ஆட்​சி​யர் தெரி​வித்​தார்.

    இதனிடையே, திருப்​புவனம் வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில் நில அளவைப் பிரி​வில் பராமரிக்​கப்​பட்டு வந்த 13 பட்டா மாறு​தல் தொடர்​பான மனுக்​களை மர்​ம நபர்​கள் திருடிச் சென்​ற​தாக, வட்​டாட்​சியர் விஜயகு​மார் அளித்த புகாரின்​பேரில் திருப்​புவனம் போலீ​ஸார் வழக்​குப் பதிந்​தனர். அந்த மனுக்​களை திருடியது யார், ஆற்​றுக்​குள் வீசி​யது யார் என்​பது குறித்து போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர். வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில் சிசிடிவி கேம​ராக்​கள் இல்​லாத​தால், அந்த அலு​வல​கத்​தில் இருந்து வைகை ஆறு வரை​யில் உள்ள கடைகளில் பொருத்​தப்​பட்​டுள்ள சிசி​விடி கேமராக்​களை போலீ​ஸார் ஆய்வு செய்து வரு​கின்​றனர்.

    இதற்​கிடை​யில், திருப்​புவனம் வட்​டாட்​சி​யர் விஜயகு​மார் இடமாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ள​தாக​வும், வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில் அலட்​சி​ய​மான முறை​யில் பணி​யாற்​றிய 7 அலு​வலர்​கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும் மாவட்ட ஆட்​சி​யர் கா.பொற்​கொடி தெரி​வித்​தா​ர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சிறுபான்மையினர் நலத்திட்டங்களை ஆய்வு செய்ய சிறப்புக் குழு

    September 20, 2025
    மாநிலம்

    ரூ.105 கோடி இன்சூரன்ஸ் மோசடிகளை விசாரிக்க உத்தரவு

    September 20, 2025
    மாநிலம்

    “அணைகள் விவகாரத்தில் திமுக செய்வது வாக்கு வங்கி அரசியல்” – ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

    September 20, 2025
    மாநிலம்

    “விவசாயிகளின் வயிற்றில் அடித்து, நெல் கொள்முதலில் பல கோடி ரூபாய் கமிஷன்” – திருவாரூரில் விஜய் காட்டம்

    September 20, 2025
    மாநிலம்

    பெண் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்​டதாக குற்றச்சாட்டு: விசாரணையை தொடங்க ஐகோர்ட் உத்தரவு

    September 20, 2025
    மாநிலம்

    சிபிசிஎல் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதி மூலம் சென்னையில் 300 மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்: உதயநிதி வழங்கினார்

    September 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சிறுபான்மையினர் நலத்திட்டங்களை ஆய்வு செய்ய சிறப்புக் குழு
    • ரூ.105 கோடி இன்சூரன்ஸ் மோசடிகளை விசாரிக்க உத்தரவு
    • ‘மோடிக்கு ட்ரம்ப் அனுப்பும் பரிசுகள்…’ – எச்1பி விசா கட்டண உயர்வை முன்வைத்து காங். விமர்சனம்
    • “எப்போதுமே தேசத்தின் ஆதரவு எங்களுக்கு உள்ளது” – பாக். உடனான போட்டி குறித்து சூர்யகுமார் யாதவ்
    • “அணைகள் விவகாரத்தில் திமுக செய்வது வாக்கு வங்கி அரசியல்” – ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.