Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»வைகை அணையில் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை: தொடர் கண்காணிப்பில் அதிகாரிகள்
    மாநிலம்

    வைகை அணையில் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை: தொடர் கண்காணிப்பில் அதிகாரிகள்

    adminBy adminAugust 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    வைகை அணையில் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை: தொடர் கண்காணிப்பில் அதிகாரிகள்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஆண்டிபட்டி: வைகை அணையின் நீர்மட்டம் 68.5 அடியாக உயர்ந்ததைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப் பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை நெருங்கும் நிலை உள்ளதால் நீர்வளத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களின் முக்கிய குடிநீர் மற்றும் பாசன நீர் ஆதாரமாக வைகை அணை உள்ளது. தற்போது கேரள, தமிழக எல்லையில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் மூல வைகையில் நீர்ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்தும் விநாடிக்கு 1,867 கனஅடி நீர் கடந்த 20-ம் தேதி முதல் தொடர்ந்து திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதனால் வைகை அணைக்கான நீர் வரத்து அதிகரித்தபடி இருந்தது. இந்நிலையில் ஜூலை 20-ம் தேதி 63.77 அடியாக இருந்த நீர்மட்டம் (மொத்த உயரம் 71) படிப்படியாக அதிகரித்து 26-ம் தேதி 66 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து முதல் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    தற்போது மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பெரியாறு பிரதான கால்வாய் பாசனப் பகுதியில் உள்ள இரு போக பாசன நிலங்களின் முதல் போகம் மற்றும் குடிநீர் திட்டங்களுக்காக விநாடிக்கு 769 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர் நீர்வரத்தினால் அணையின் நீர்மட்டம் இன்று (ஆக.4) 68.50 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. 69 அடி அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்ததும் மூன்றாம் கட்ட எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்படும்.

    இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், ”தற்போது விநாடிக்கு ஆயிரத்து 594 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் விரைவில் 69 அடியை எட்டிவிடும். இருப்பினும் நீர்வரத்துக்கு ஏற்ப நீர்மட்டத்தை 69 அல்லது 71 அடியில் நிலை நிறுத்தப்படும். இந்நிலையில் மூன்றாம் கட்ட அபாய எச்சரிக்கைக்குப் பிறகு எந்த நேரமும் உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளதால் 5 மாவட்டத்தின் கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” என்று அதிகாரிகள் கூறினர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தூத்துக்குடியில் மின்சார கார் தொழிற்சாலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

    August 5, 2025
    மாநிலம்

    தென் தமிழகம் இதுவரை பார்க்காத தொழில் வளர்ச்சியை சாத்தியமாக்கி வருகிறோம்: முதல்வர் ஸ்டாலின் @ தூத்துக்குடி

    August 5, 2025
    மாநிலம்

    10 மாவட்டங்களில் இன்று கனமழை

    August 5, 2025
    மாநிலம்

    செங்கல்பட்டு மாவட்ட நகராட்சிகளில் கரையானுக்கு இரையாகும் ‘ஸ்மார்ட்’ கடைகள்

    August 5, 2025
    மாநிலம்

    “திமுக கூட்டணியில் விரிசல்…” – பாளை.யில் கொட்டும் மழையில் பழனிசாமி பிரச்சாரம்

    August 5, 2025
    மாநிலம்

    மடப்புரம் அஜித்குமார் வழக்கில் கைதான காவலர்களை காவலில் எடுக்க சிபிஐ மனு

    August 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • டெல்லியில் நடைபயிற்சி மேற்கொண்ட தமிழக காங்கிரஸ் எம்.பி.சுதாவிடம் நகை பறிப்பு
    • தூத்துக்குடியில் மின்சார கார் தொழிற்சாலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
    • ராகுல் காந்தி எல்லையில் முகாமிட்டு இருந்தாரா? – உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்; வழக்கின் முழு விவரம்
    • தென் தமிழகம் இதுவரை பார்க்காத தொழில் வளர்ச்சியை சாத்தியமாக்கி வருகிறோம்: முதல்வர் ஸ்டாலின் @ தூத்துக்குடி
    • இலவங்கப்பட்டை Vs ஏலக்காய்: எந்த மசாலா உங்கள் உணவு, இரத்த சர்க்கரை மற்றும் பலவற்றிற்கு ஆரோக்கியமானது மற்றும் சிறந்தது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.