Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»வேளச்சேரி, அரக்கோணம் வழித்தடத்தில் 2 நாட்களுக்கு ரயில் சேவை ரத்து
    மாநிலம்

    வேளச்சேரி, அரக்கோணம் வழித்தடத்தில் 2 நாட்களுக்கு ரயில் சேவை ரத்து

    adminBy adminMay 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    வேளச்சேரி, அரக்கோணம் வழித்தடத்தில் 2 நாட்களுக்கு ரயில் சேவை ரத்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: கடற்கரை யார்டில் நடைமேம்பாலம் பணி நடைபெறுவதால், சென்னை கடற்கரை – வேளச்சேரி, அரக்கோணம் வழித் தடத்தில் சில புறநகர் மின்சார ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரயில்வே, சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    சென்னை கடற்கரை யார்டில் நடைமேம்பாலம் பணி நடைபெறுவதால், கடற்கரை – வேளச்சேரி, அரக்கோணம் வழித் தடத்தில் சில புறநகர் மின்சார ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வேளச்சேரி – கடற்கரை இடையே இரவு 9, 9.40, 10.20 மற்றும் கடற்கரை – வேளச்சேரி இடையே இரவு 10.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சேவை இன்று (17-ம் தேதி) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    இதேபோல், கடற்கரை – வேளச்சேரி இடையே காலை 5, 5.30, 6, 6.30, 7.05, 7.25, 7.45 மற்றும் வேளச்சேரி – கடற்கரை இடையே காலை 5, 5.30, 6, 6.15, 6.35 மற்றும் 6.55 மணிக்கு இயக்கப்படும் ரயில் சேவைகள் நாளை (18-ம் தேதி) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. எனினும், பயணிகளின் வசதிக்காக வேளச்சேரி – கடற்கரை இடையே 5, 5.30, 6, 6.35 மற்றும் 7 மணிக்கும், சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே காலை 6, 6.30, 7, 7.35, 8 மணிக்கு நாளை சிறப்பு ரயில் இயக்கப்படும்.

    மேலும், சென்னை கடற்கரையில் இருந்து ஆவடிக்கு காலை 4.05, திருவள்ளூருக்கு 5.10, 5.40, 6.10 மற்றும் ஆவடியில் இருந்து கடற்கரைக்கு காலை 4.35, 5.40, 7.05 மணிக்கு இயக்கப்படும் ரயில் சேவைகள் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    எனினும், பயணிகளின் வசதிக்காக ஆவடியில் இருந்து அரக்கோணத்துக்கு காலை 5, ஆவடியில் இருந்து திருவள்ளூருக்கு காலை 6, 6.45 மற்றும் 7.05 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.

    சென்னை கடற்கரையில் இருந்து பொன்னேரிக்கு காலை 5.40 மணிக்கு இயக்கப்படும் ரயில் நாளை பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். கும்மிடிப்பூண்டி-சென்னை கடற்கரை இடையே இரவு 8.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் இன்று பேசின் பிரிட்ஜ் வரை மட்டுமே இயக்கப்படும். பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்-சென்னை கடற்கரை இடையே இரவு 8.25 மணிக்கு இயக்கப்படும் ரயில் சேவை இன்று ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கம்யூனிஸ்ட் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள்: விஜய்க்கு பெ.சண்முகம் அறிவுறுத்தல்

    September 15, 2025
    மாநிலம்

    சீருடை பணியாளர்கள் 193 பேருக்கு அண்ணா பதக்கம்

    September 15, 2025
    மாநிலம்

    பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டம் இன்று தொடக்கம்

    September 15, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் நாளை முதல் செப்.19 வரை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

    September 15, 2025
    மாநிலம்

    வடபழனி முருகன் கோயில் ஓதுவார் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க அக்.13-ம் தேதி கடைசி நாள்

    September 15, 2025
    மாநிலம்

    நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விட தமிழக வளர்ச்சி இரு மடங்கு அதிகம் – மா.சுப்பிரமணியன்

    September 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கம்யூனிஸ்ட் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள்: விஜய்க்கு பெ.சண்முகம் அறிவுறுத்தல்
    • பள்​ளி​களில் அமையும் ரோபோட்​டிக்ஸ் ஆய்​வகங்கள்
    • விஞ்ஞானத்தால் ஆதரிக்கப்படும் நினைவகத்திற்கு ரகசியமாக தீங்கு விளைவிக்கும் அன்றாட பழக்கவழக்கங்கள்
    • சீருடை பணியாளர்கள் 193 பேருக்கு அண்ணா பதக்கம்
    • பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டம் இன்று தொடக்கம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.