Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 20
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»வேலூர் காவல் பயிற்சியகத்துக்கு வேலுநாச்சியார் பெயர்: கிண்டியில் சிலையை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
    மாநிலம்

    வேலூர் காவல் பயிற்சியகத்துக்கு வேலுநாச்சியார் பெயர்: கிண்டியில் சிலையை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

    adminBy adminSeptember 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    வேலூர் காவல் பயிற்சியகத்துக்கு வேலுநாச்சியார் பெயர்: கிண்டியில் சிலையை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சென்​னை, கிண்டி காந்​தி​ மண்டப வளாகத்​தில் புதி​தாக நிறு​வப்​பட்ட சுதந்​திரப் போராட்ட வீராங்​கனை ராணி வேலு நாச்​சி​யார் உரு​வச்​சிலையை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று திறந்து வைத்​தார். மேலும், வேலூரில் உள்ள காவல் பயிற்​சி​யகத்​துக்கு வேலு​நாச்​சி​யார் பெயர் சூட்​டப்​படும் என்​றும் அறி​வித்​துள்​ளார்.

    இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: மன்​னர் செல்​ல​முத்து விஜயரகு​நாத சேதுபதி – முத்​தாத்​தாள் நாச்​சி​யார் தம்​ப​தி​யரின் மகளாக 1730-ம் ஆண்டு பிறந்​தார் வீரமங்கை ராணி வேலு​நாச்​சி​யார். 1746-ம் ஆண்டு சிவகங்கை மன்​னர் முத்​து​வடு​க​நாதரை மணந்​து, சிவகங்கை சமஸ்​தானத்​தின் ராணி​யா​னார். 1772-ம் ஆண்டு ஆங்​கிலேயர் சிவகங்​கை​யின் மீது போர் தொடுத்த போது, மன்​னர் முத்​து​வடு​க​நாதர் வீர மரணமடைந்​தார்.

    பின்​னர், வேலு​நாச்​சி​யார், மைசூர் மன்​னர் ஹைதர் அலி, திப்பு சுல்​தான் மற்​றும் அக்​காலத்​தில் திண்​டுக்​கல் பகு​தியைஆண்ட கோபால் நாயக்​கர் ஆகியோர் உதவி​யுடன் ஆங்​கிலேயர்​களு​டன் போரிட்டு வென்று சிவகங்கைச் சீமையை 1780-ம் ஆண்டு மீட்​டார். அதன்​பின், 16 ஆண்​டு​கள் சிவகங்​கைச் சீமை​யைச் சிறப்​பாக ஆட்சி செய்​தார். ஆங்​கிலேயர்​களை எதிர்த்த “முதல் இந்​திய விடு​தலைப் பெண் போராளி” வீரமங்கை வேலு​நாச்​சி​யார் 1796 டிசம்​பர் 25ம் தேதி மறைந்​தார்.

    வேலு​நாச்​சி​யாரின் வீரத்தை வருங்​காலத் தலை​முறை​யினர் அறிந்து போற்​றும் வகை​யில், சென்​னை கிண்​டி காந்தி மண்டப வளாகத்​தில் அரசின் சார்​பில் ரூ.50 லட்​சம் செல​வில் புதி​தாக நிறு​வப்​பட்​டுள்ள வேலு​நாச்​சி​யார் சிலையை நேற்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் திறந்து வைத்​தார். நிகழ்ச்​சி​யில்​,துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின்​, அமைச்​சர்​கள் மு.பெ. சாமி​நாதன், மா. சுப்​பிரமணி​யன், எம்​.பி. டி.ஆர்​.​பாலு உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

    முதல்வர் அறி​விப்பு: சிலை திறப்பு தொடர்​பாக முதல்​வர் ஸ்டா​லின் வெளி​யிட்ட சமூக வலை​தளப்​பதிவில், ‘‘இந்​தி​யா​வின் விடு​தலைக்​காகப் போராடிய முதல் பெண் போராளி – ஆங்​கிலேயர்​களை வெற்றி கொண்ட வீரமங்கை வேலு​நாச்​சி​யாரின் சிலையை கிண்டி காந்தி மண்டப வளாகத்​தில் திறந்து வைத்​தேன். இந்த மகிழ்ச்​சிமிகு நாளில், வேலூரில் உள்ள காவல் பயிற்​சிப் பள்​ளிக்கு வீரமங்கை வேலு​நாச்​சி​யார் பெயர் சூட்​டப்​படும். மண் – மானம் காக்​கப் புயலெனப் புறப்​பட்ட வீரத்​தாய் வேலு​நாச்​சி​யாரின் வரலாறும், அவருக்​குத் துணை நின்ற மருது சகோ​தரர்​கள் உள்​ளிட்ட தீரமிக்க தமிழர்​களின் வரலாறும், இந்த மண் யாருக்​கும் தலைகுனி​யாது எனும் வரலாற்றை உரக்​கச் சொல்​லும்” என தெரி​வித்​துள்​ளார்.

    சிவகங்கை சமஸ்தானம் நன்றிசிவகங்கை சமஸ்​தானம் தேவஸ்​தானம் பரம்​பரை அறங்​காவலர் ராணி டிஎஸ்​கே.மது​ராந்​தகி நாச்​சி​யார், வேலு​நாச்​சி​யார் சிலை திறப்​புக்​காக முதல்​வருக்கு நன்றி தெரி​வித்து கடிதம் அனுப்பியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.10 கோடியாக மத்திய அரசு உயர்த்த வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

    September 20, 2025
    மாநிலம்

    கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள் வராதீர்கள் என விஜய் தெரிவிக்கலாமே? – நீதிபதி அறிவுறுத்தல்

    September 19, 2025
    மாநிலம்

    ‘பிங்க்’ பஸ் கண்டிஷனில் தான் திமுக இருக்கிறது: உதயநிதிக்கு இபிஎஸ் பதிலடி

    September 19, 2025
    மாநிலம்

    300 ஆண்டு பழமையான 40 கோடி ஆவணங்கள் பராமரிப்பு: அமைச்சர் கோவி. செழியன் தகவல்

    September 19, 2025
    மாநிலம்

    “போலி செய்திகளை மக்களிடம் சேர்க்க முயற்சி” – ராகுல் காந்தி மீது வானதி சீனிவாசன் விமர்சனம்

    September 19, 2025
    மாநிலம்

    சாராயம் விற்ற பணத்தில் திமுக முப்பெரும் விழா: அண்ணாமலை விமர்சனம்

    September 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஆளுமை சோதனை: நீங்கள் முதலில் பார்ப்பது ஒரு மோசமான அல்லது கூர்மையான எண்ணம் கொண்ட நபராக இருந்தால் முதலில் வெளிப்படுத்துகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 71 வயதான அமெரிக்காவை தளமாகக் கொண்ட என்.ஆர்.ஐ கில்லிங்: திருமணத்தின் வாக்குறுதி, ரூ .40 லட்சம், கடந்த வழக்குகள் என்.ஆர்.ஐ ரூபிந்தர் கவுரின் கொலைக்கு பிணைக்கப்பட்டுள்ளன | லூதியானா நியூஸ் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.10 கோடியாக மத்திய அரசு உயர்த்த வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
    • இந்தியர்கள் ஏன் தங்கள் 20 களில் நரை முடியைப் பெறுகிறார்கள்: காரணங்கள், உணவு உதவிக்குறிப்புகள் மற்றும் தீர்வுகள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘11% பண்டைய இந்திய டி.என்.ஏ ‘: தொழிலாளர் தலைவர் பர்விந்தர் கவுரின் பேச்சு வைரலாகிறது; ‘யார் அதிக ஆஸ்திரேலிய’ விவாதம் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறுகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.