Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, August 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»வெல்டிங்கில் உடைப்பு ஏற்பட்டதே மேம்பால தூண் இடிந்து விழுந்ததுக்கு காரணம் – மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர்
    மாநிலம்

    வெல்டிங்கில் உடைப்பு ஏற்பட்டதே மேம்பால தூண் இடிந்து விழுந்ததுக்கு காரணம் – மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர்

    adminBy adminJune 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    வெல்டிங்கில் உடைப்பு ஏற்பட்டதே மேம்பால தூண் இடிந்து விழுந்ததுக்கு காரணம் – மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: மெட்ரோ ரயில் மேம்பால தூண் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்த விபத்துக்கு, இரும்பு உபகரணம் பொருத்த வைக்கப்பட்ட வெல்டிங்கில் உடைப்பு ஏற்பட்டதே காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பூந்தமல்லி-போரூர் இடையே ரயில் பாதை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், போரூர் அருகே மணப்பாக்கத்தில் உள்ள எல் அண்ட் டி தலைமை அலுவலக பிரதான வாயிலுக்கு அருகில் ஒரு வாரத்துக்கு முன்பு அமைக்கப்பட்ட 2 தூண்கள், அதன் இணைப்புப் பாலம் நேற்று முன்தினம் இரவு சரிந்து விழுந்ததால் இடிந்தன. இந்த விபத்தின்போது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயிரிழந்தார்.

    கான்கிரீட் தூண்கள் சாலையில் சரிந்து விழுந்ததையடுத்து, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விரைந்து சென்ற போக்குவரத்து போலீஸார், உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், சாலையில் சரிந்த மெட்ரோ தூண்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இந்நிலையில், மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் அதிகாரிகள் குழு விபத்து நிகழ்ந்த இடத்தில் நேற்று காலை நேரில் ஆய்வு நடத்தியது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் அர்ச்சுனன் கூறுகையில், “மெட்ரோ பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் ஒரு தூண் விழுந்துள்ளது. இந்த தூண் பொருத்தப்பட்டு நீண்ட நாட்கள் ஆகின்றன. அதற்கு பக்கபலமாக `A’ வடிவ இரும்பு உபகரணம் பொருத்தப்பட்டிருந்தது.

    அந்த இரும்பு உபகரணத்தை பொருத்துவதற்காக வைக்கப்பட்ட வெல்டிங்கில் உடைப்பு ஏற்பட்டு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்துக்கு உலோகத்தின் உறுதித்தன்மை இழப்புதான் காரணம். இதே போன்று வேறு எங்கேனும் உறுதித் தன்மையில் பிரச்சினை இருக்கிறதா என்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் மற்றும் காவல் துறை தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அனைத்து இணைப்புகளிலும் உறுதித் தன்மையை அதிகரிக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளோம்.

    எனவே, இனிமேல் இதுபோன்ற விபத்துகள் ஏற்பட வாய்ப்பு இல்லை. விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு மெட்ரோ நிர்வாகம் சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அர்ச்சுனன் தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அதிமுகவின் நகரும் நியாயவிலைக் கடை திட்டத்தை காப்பியடித்து ‘தாயுமானவர்’ திட்டம் – இபிஎஸ் குற்றச்சாட்டு

    August 16, 2025
    மாநிலம்

    வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியை தனி நெறியாக அறிவிக்க அதிகாரிகளை அணுகலாம்: கோர்ட் உத்தரவு

    August 16, 2025
    மாநிலம்

    8 மாதங்களாக மாற்றுத்திறனாளி உள்ளிட்டோருக்கான உதவித்தொகைக்கு ஒப்புதல் கொடுப்பது நிறுத்திவைப்பு

    August 16, 2025
    மாநிலம்

    தொடர் விடுமுறைக்காக சென்னையிலிருந்து 3 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

    August 16, 2025
    மாநிலம்

    நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாட்டம்: டெல்லியில் பிரதமர், சென்னையில் முதல்வர் தேசியக் கொடி ஏற்றி மரியாதை

    August 16, 2025
    மாநிலம்

    பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

    August 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சிறந்த கல்லீரல் நிபுணர் கல்லீரல் ஆரோக்கியம் பற்றிய 5 முக்கியமான உண்மைகளைப் பகிர்ந்து கொள்கிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சுதந்திர தின விழாவை தவிர்த்த ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே
    • அதிமுகவின் நகரும் நியாயவிலைக் கடை திட்டத்தை காப்பியடித்து ‘தாயுமானவர்’ திட்டம் – இபிஎஸ் குற்றச்சாட்டு
    • ஷில்லாங்: மேகலயாவின் தலைநகர் இந்தியாவின் அதிகம் தேடப்பட்ட இடத்தை உருவாக்குவது எது
    • சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: ரூ.25 லட்சம் பரிசுடன் பட்டம் வென்றார் வின்சென்ட் கீமர்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.