Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 20
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»வீட்டுவசதி வாரியத்தால் நோட்டீஸ் கொடுக்கப்பட்ட நிலங்களை வாங்கியவர்களுக்கு நிலம் விடுவிக்கப்படும்: அமைச்சர் தகவல்
    மாநிலம்

    வீட்டுவசதி வாரியத்தால் நோட்டீஸ் கொடுக்கப்பட்ட நிலங்களை வாங்கியவர்களுக்கு நிலம் விடுவிக்கப்படும்: அமைச்சர் தகவல்

    adminBy adminAugust 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    வீட்டுவசதி வாரியத்தால் நோட்டீஸ் கொடுக்கப்பட்ட நிலங்களை வாங்கியவர்களுக்கு நிலம் விடுவிக்கப்படும்: அமைச்சர் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: வீட்​டு​வசதி வாரி​யத்​தால் நோட்​டீஸ் கொடுக்​கப்​பட்ட நிலத்தை வாங்​கிய​வர்​களுக்​கு, அவர்​கள் தாங்​கும் அளவி​லான தொகை நிர்​ண​யிக்​கப்​பட்டு நிலம் விடு விக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​வ​தாக அமைச்​சர் சு.​முத்​து​சாமி தெரி​வித்​தார்.

    இதுகுறித்​து, தலை​மைச்​செயல​கத்​தில் நேற்று அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: வீட்​டு​வசதி வாரி​யத்​தால் நீண்ட நாட்களுக்கு முன் கையகப்​படுத்த முயற்சி எடுக்​கப்​பட்டு அது முழு​மை​யாக நிறைவேறாத சூழலில் அந்த நிலங்​களை வாரி​யம் பயன்​படுத்த முடிய​வில்​லை. அதே​நேரம் அதன் உரிமை​யாளர்​களும் முழு உரிமை எடுக்க முடியவில்லை என்ற சூழல் இருந்​தது.

    இது முதல்​வர் முதல்​வர் கவனத்​துக்​குச் சென்​றதும், எல்​லோருக்​கும் சட்​ட​திட்​டங்​களுக்கு உட்​பட்டு ஒரே மாதிரி நடவடிக்கை எடுக்க அறி​வுறுத்​தி​னார். அதற்​காக வீட்​டு​வசதி வாரி​யம், வீட்​டு​வச​தித் துறை இணைந்து அந்த நிலங்​கள் 5 வகை​யாக பிரிக்கப்பட்​டன. இதுத​விர்த்த 10,575 ஏக்​கர் நிலம் எதிர்​காலத்​தில் எடுக்​கலாம் என்று உத்​தேசிக்​கப்​பட்ட நில​மாகும். இந்த இடத்தை அந்த நில உரிமை​யாளர்​கள் மற்​றவர்​களுக்கு சிறிது, சிறிய​தாக விற்​று​விட்டு போய்​விட்​டார்​கள்.

    இதில், வாங்​கிய​வர்​களும் பாதிக்​கப்​படக் கூடாது என்​ப​தால், ஒரே ஒரு சுற்​றறிக்கை மூலம் அவர்​களுக்கு நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலம் போக மீத​முள்ள நிலம் தான் 5 வகை​யாக பிரிக்​கப்​பட்​டது. இதில் ஐந்​தாவது வகை என்​பது வீட்டு​வசதி வாரி​யம் முழு​மை​யாக அதை கையகப்​படுத்​தி, அதில் சில மேம்​பாடு​கள் செய்​திருக்​கிறது. அதை பொறுத்​தவரை வீட்டு வசதி வாரி​யம் முழு​மை​யான உரிமையை கொண்​டுள்​ளது. முதல் இரண்டு வகை என்​பது நோட்​டீஸ் கொடுக்​கப்​பட்​டதுடன் நின்​றுள்​ளது. அதற்​குமேல் வீட்டு வசதி வாரி​யம் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை.

    இது, 40 ஆண்​டு​களுக்கு மேல் ஆகி​விட்​ட​தால், மேல் நடவடிக்கை எடுக்க முடி​யாது. மேலும், அந்த நிலங்​கள் சிறிது சிறி​தாக விற்​கப்​பட்​டு​விட்​டன. அதை எடுப்​ப​தாக இருந்​தால், ஆயிரக்​கணக்​கான வீடு​களை இடிக்க வேண்​டிய​திருக்​கும்.

    இதில் நீதி​மன்​ற​மும் கேள்வி எழுப்​பி​யுள்​ள​தால், இந்த 1 மற்​றும் 2-வது வகை நிலங்​களை நாம் விடு​விப்​பது என்​பது கொள்கை முடி​வாக எடுக்​கப்​பட்​டது. அதன்​படி, 4,396.44 ஏக்​கர் நிலம் விடுவிக்​கப்​பட்​டுள்​ளது. அதில் பெரும்​பகுதி கொடுக்​கப்​பட்​டுள்​ளது.

    மீத​முள்ள 743 ஏக்​கருக்கு அரசாணை வழங்க ஏற்​பாடு நடந்து கொண்​டிருக்​கிறது. இதில் சில​வற்​றில், நீதி​மன்ற வழக்கு போன்ற பிரச்​சினை​கள் இருக்​கின்​றன. எனவே, அதை​யும் பகுப்​பாய்வு செய்​து​விட்​டு, அதற்​குப் பிறகு​தான் அதில் நடவடிக்கை எடுக்​கப்​படும். அதற்​கடுத்த 3 மற்​றும் 4-வது வகையை பொறுத்​தவரை, அதற்​காக 2 ஓய்​வு​பெற்ற அதி​காரி​கள் நியமிக்​கப்​பட்​டு, அவர்​கள் ஆய்வு செய்து வரு​கின்​றனர்.

    அதில் பல நீதி​மன்​றம் மற்​றும் அரசு உத்​தர​வு​கள் இருக்​கின்​றன. அதன்​மீது வீட்​டு​வசதி வாரி​யம் செய்த விவரங்​கள் அனைத்​தும் இருக்​கின்​றன. இத்​தனை​யும் அவர்​கள் ஆய்வு செய்து அவர்​கள் கொடுக்​கும் பரிந்​துரை​யின்​படி அந்த நடவடிக்​கைகள் எடுப்​ப​தற்​கான ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டிருக்​கின்​றன.

    நவம்​பர் மாதத்​துக்​குள் அவர்​கள் பரிந்​துரை கிடைக்க வாய்ப்​புள்​ளது. அதை பின்​பற்றி வீட்​டு​வசதி வாரி​யம் டிசம்​பர், ஜனவரிக்​குள் மீத​முள்ள அந்த நிலத்​தை​யும், பாதிக்​கப்​பட்ட மக்​களுக்கு கொடுக்க முடி​யும். இதில் வாரி​யத்​துக்​கோ, அரசுக்கோ எவ்​வித நஷ்ட​மும் ஏற்​படக் கூடாது. வாரி​யம் செல​வழித்த தொகை, அதற்​கான வட்டி கிடைக்க வேண்​டும்.

    தொகை அது மிக நியாய​மான​தாக அவர்​கள் தாங்​கக்​கூடிய சக்தி படைத்​த​தாக அது இருக்க வேண்​டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்​காகத்​தான் 16 இடங்​களில் புகார்​பெட்டி வைத்து அதில் மனுக்​கள் போடுங்​கள் என்று தெரிவித்தோம். அதை அடிப்​படை​யாக வைத்து தான் இந்த நடவடிக்கை எடுக்​கப்​படு​கிறது.

    ஒரு​வேளை புகார்​பெட்​டி​யில் போடா​மல் இருந்​தா​லும் கூட இதே வகை​யில் அவர்​கள் தகு​தி​யுடைய​வர்​களாக இருந்​தால் அவர்களுக்​கும் இந்த சலுகை கிடைக்​கும். ஒரு சிறு தவறும் கூட ஏற்​படக்​கூ​டாது. யாருடைய பரிந்​துரை​யின்​பேரிலும்​ இது நடை பெற கூடாது என்​ப​தில்​ தெளி​வாக உள்​ளோம்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ஆக.22-ல் நடக்கவிருந்த கோட்டை முற்றுகை போராட்டம் தள்ளிவைப்பு: டிட்டோ ஜாக் அறிவிப்பு

    August 20, 2025
    மாநிலம்

    மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: கருத்துகேட்பு கூட்டத்தில் அரசு ஊழியர் சங்கங்கள் மனு

    August 20, 2025
    மாநிலம்

    ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்​ கோரி அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் போராட்டம்

    August 20, 2025
    மாநிலம்

    எந்த நிதி மோசடி வழக்கிலாவது 2 ஆண்டுகளுக்குள் வழக்கை முடித்த வரலாறு உள்ளதா? – போலீஸாருக்கு ஐகோர்ட் கண்டனம்

    August 20, 2025
    மாநிலம்

    75 டன் எடையுள்ள செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்த முயற்சி: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

    August 20, 2025
    மாநிலம்

    பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் பதிவேற்றம் செய்வதை தடுப்பது குறித்து பரிசீலிக்க டிஜிபி-க்கு ஐகோர்ட் உத்தரவு

    August 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வீட்டுவசதி வாரியத்தால் நோட்டீஸ் கொடுக்கப்பட்ட நிலங்களை வாங்கியவர்களுக்கு நிலம் விடுவிக்கப்படும்: அமைச்சர் தகவல்
    • ஆக.22-ல் நடக்கவிருந்த கோட்டை முற்றுகை போராட்டம் தள்ளிவைப்பு: டிட்டோ ஜாக் அறிவிப்பு
    • மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: கருத்துகேட்பு கூட்டத்தில் அரசு ஊழியர் சங்கங்கள் மனு
    • ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்​ கோரி அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் போராட்டம்
    • இண்டியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி அறிவிப்பு: நாளை மனு தாக்கல் 

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.