Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»வீட்டுக்கு மின் இணைப்பு கோரி கவிஞர் கண்ணதாசனின் மகன் வழக்கு: மின்சார வாரியம் பதிலளிக்க உத்தரவு
    மாநிலம்

    வீட்டுக்கு மின் இணைப்பு கோரி கவிஞர் கண்ணதாசனின் மகன் வழக்கு: மின்சார வாரியம் பதிலளிக்க உத்தரவு

    adminBy adminMay 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    வீட்டுக்கு மின் இணைப்பு கோரி கவிஞர் கண்ணதாசனின் மகன் வழக்கு: மின்சார வாரியம் பதிலளிக்க உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தனது வீட்டுக்கு மின் இணைப்பு வழங்கக் கோரி, கவிஞர் கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை கண்ணதாசன் தொடர்ந்த வழக்கில், மின்சார வாரியம் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கவிஞர் கண்ணதாசனின் மனைவி பார்வதி அம்மாளுக்கு சென்னை மாடம்பாக்கம் பகுதியில் ஒரு ஏக்கர் 72 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அவர் தனது வாரிசுகளுக்கு பிரித்து கொடுத்துள்ளார். இந்த நிலத்தின் அருகேயுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை மின்நிலையம் செயல்பட்டு வருகிறது.

    அதற்கு அருகில் காலியாக இருந்த பகுதியை கண்ணதாசன் குடும்பத்தினர் பாதையாகப் பயன்படுத்தி வந்தனர். இதற்கு மின்சார வாரியம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் கண்ணதாசனின் மகன்கள், தாம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில், துணை மின் நிலையம் அருகே உள்ள நிலத்தை பாதையாகப் பயன்படுத்த அனுமதியளித்து தாம்பரம் நீதிமன்றம் கடந்த 2011-ல் உத்தரவிட்டது,

    இந்நிலையில், தனக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டுவதற்காக மின் இணைப்பு கோரி அண்ணாதுரை கண்ணதாசன் விண்ணப்பித்திருந்தார். ஆனால் மின்வாரியத்துக்கு சொந்தமான நிலத்தை பாதையாக பயன்படுத்துவதாகக் கூறி இணைப்பு வழங்க மின்சார வாரியம் மறுத்து விட்டது.

    இதை எதிர்த்து அண்ணாதுரை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் தனது வீட்டுக்கு மின்இணைப்பு வழங்க மின்வாரியத்துக்கு உத்தரவிடக் கோரியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி என்.மாலா முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, அண்ணாதுரை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன், ‘‘காலியாக கிடந்த பகுதியை பாதையாகப் பயன்படுத்திக் கொள்ள தாம்பரம் நீதிமன்றம் ஏற்கெனவே அனுமதி வழங்கியுள்ளதால், வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க மின்வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும். கீழமை நீதிமன்ற உத்தரவுப்படி துணை மின் நிலையம் அருகே உள்ள காலியிடத்தை பாதையாக அறிவிக்க வேண்டும்’’ என வாதிட்டார்.

    அதையடுத்து நீதிபதி, இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ஆனைமலையாறு – நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: பழனிசாமி வலியுறுத்தல்

    September 12, 2025
    மாநிலம்

    அதிமுக – பாஜக கூட்டணியில் பிளவு ஏற்படவில்லை: நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்

    September 12, 2025
    மாநிலம்

    சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியா? – மநீம கட்சியினருடன் கமல் ஆலோசனை

    September 12, 2025
    மாநிலம்

    சாதிய வன்கொடுமை கொலைகளுக்கு எதிராக சட்டம்: பிருந்தா காரத் வேண்டுகோள்

    September 12, 2025
    மாநிலம்

    4 தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் எச்ஐவி, பாலியல் நோய்களுக்கு இலவச சிகிச்சை

    September 12, 2025
    மாநிலம்

    கார் ஏற்றி கல்லூரி மாணவர் கொலை: திமுக பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமீன்

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கர்​நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு ரூ.4.5 கோடியில் தங்க, வைர ஆபரணங்கள் வழங்கிய இளையராஜா
    • சென்னை மாவட்ட பி-டிவிஷன் வாலிபால் போட்டி தொடக்கம்
    • குடியரசு கட்சியின் மூத்த தலைவர் சுட்டுக் கொலை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம்
    • ஆனைமலையாறு – நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: பழனிசாமி வலியுறுத்தல்
    • படை நோய் Vs தடிப்புகள்: அறிகுறிகளைக் கண்டுபிடி, காரணங்களைப் புரிந்து கொள்ளுங்கள் மற்றும் திறம்பட நிர்வகிப்பதற்கான உதவிக்குறிப்புகள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.