Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»விவசாயிகளுக்கு பாதிப்பின்றி காட்டுப் பன்றிகள் பிடிக்கப்படும்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்
    மாநிலம்

    விவசாயிகளுக்கு பாதிப்பின்றி காட்டுப் பன்றிகள் பிடிக்கப்படும்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

    adminBy adminJuly 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    விவசாயிகளுக்கு பாதிப்பின்றி காட்டுப் பன்றிகள் பிடிக்கப்படும்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருநெல்வேலி: விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் காட்டுப் பன்றிகள் சுட்டுப் பிடிக்கப்படும் என்று மாநில வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.

    திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணை பகுதியில் மேம்பாட்டு பணிகள் குறித்து அவர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு, திருக்குறுங்குடி, அப்பர் கோதையார் பகுதிகளை உள்ளடக்கிய களக்காடு வனச்சரகப் பகுதியில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதி விவசாயிகளுக்கு காட்டு பன்றிகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருவதை தடுப்பதற்கு, காட்டுப் பன்றிகளை சுட்டு பிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதற்காக வனத்துறை அலுவலகத்திற்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் காட்டுப் பன்றிகளை சுட்டு பிடிக்கப்படும். குடியிருப்பு பகுதிகளுக்கு காட்டு யானை வருவதை தடுப்பதற்கு, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் வனப்பகுதியை 21.76 சதவீதமாக உயர்த்தியிருக்கிறோம். இன்னும் குறுகிய காலத்தில் தமிழ்நாட்டில் வனப்பகுதி 33 சதவீதமாக உயர்த்தப்படும்.

    தமிழ்நாட்டில் வனக் கல்லூரி கோவையில் உள்ளது. தென்பகுதியில் வனக் கல்லூரி அமைப்பதற்கு தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். பல்லூயிர் வன உயிரின புங்கா 1,500 ஏக்கர் பரப்பளில் ஆசியாவிலையே பெரியதாக சென்னை வண்டலூரில் உள்ளது. இதுபோல் பல்லூயிர் வன உயிரின புங்கா வேலூரிலும் அமைந்துள்ளது.

    தென் தமிழக மக்களுக்காக திருச்சியில் பல்லூயிர் வன உயிரின புங்கா 420 ஏக்கர் பரப்பளவில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வனத்துறையில் 10 ஆண்டுகள் பணி நிறைவு பெற்ற வேட்டை தடுப்பு காவலர்களை நிலையான பணியாளர்களாக மாற்றும் பணி நடைபெறுகிறது. தமிழக முதல்வரின் உத்தரவிற்கு இணங்க வனத்துறையில் காலியாக உள்ள பிற பணியிடங்களை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வனவிலங்குகள் மூலம் விவசாயிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பெரும்பாலான இடங்களில் மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கிருஷ்ணகிரி வேப்பனப்பள்ளி அருகே யானைகள் முகாமிட்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் அவற்றை வனப்பகுதிக்குள் வனத்துறையினர் மூலம் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு வன விலங்குகளா ல் எந்த வித பாதிப்பும் இல்லாமல் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறினார்.

    முன்னதாக களக்காடு வனச்சரக துணை இயக்குனர் அலுவலகத்தில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் வன ஊழியர்களுடன் வனப்பகுதியை மேம்படுத்துவது குறித்து அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிகழ்வில், களக்காடு சரணாலயம் துணை இயக்குநர் ராமேஸ்வரன், களக்காடு நகராட்சி தலைவர் சாந்தி சுபாஸ், துணை தலைவர் பி.சி.ராஜன், களக்காடு வனச்சரக அலுவலர் பிரபாகரன், திருக்குறுங்குடி வனச்சரக அலுவலர் யோககேஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கூட்டணிக் கட்சிகளை கூறு போடுவது பாஜக வழக்கம்: செல்வப்பெருந்தகை கருத்து

    September 9, 2025
    மாநிலம்

    கலாச்சார ரீதியாக இணையும் கேம்பர்லீ நகரமும் மதுரையும்: பென்னி குயிக் நினைவை போற்றும் விதமாக ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு

    September 9, 2025
    மாநிலம்

    தமிழகத்​தில் சில மாவட்​டங்​களில் செப்.10-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு

    September 9, 2025
    மாநிலம்

    அடர் சிவப்பு நிறத்தில் அழகாக தோன்றிய ‘ரத்த நிலா’ – ​முழு சந்திர கிரகணத்தை மக்கள் கண்டு ரசித்தனர்

    September 9, 2025
    மாநிலம்

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க நடவடிக்கை

    September 9, 2025
    மாநிலம்

    நலம் காக்கும் ஸ்டாலின் 5-வது வார​ முகாம்களில் 54 ஆயிரம் பேர் பயன்

    September 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கூட்டணிக் கட்சிகளை கூறு போடுவது பாஜக வழக்கம்: செல்வப்பெருந்தகை கருத்து
    • ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி தேயிலை சுகாதார நன்மைகள்: கிரீன் டீ அல்ல, இந்த சிவப்பு மலர் 10x சக்தியை பொதி செய்கிறது! | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆபத்தில் பூமி! பாதுகாப்பான சுற்றுச்சூழல் வரம்புகளுக்கு அப்பால் இப்போது உலகளாவிய நிலத்தில் 60%, விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கலாச்சார ரீதியாக இணையும் கேம்பர்லீ நகரமும் மதுரையும்: பென்னி குயிக் நினைவை போற்றும் விதமாக ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு
    • தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்: பவுன் ரூ.80,480-க்கு விற்பனை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.