Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை கனமழை: வானிலை ஆய்வு மையம்
    மாநிலம்

    விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை கனமழை: வானிலை ஆய்வு மையம்

    adminBy adminSeptember 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை கனமழை: வானிலை ஆய்வு மையம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழகத்தில் செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்ளில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (செப்.11) ஒருசில இடங்களிலும், 12-ம் தேதி ஓரிரு இடங்களிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் வீசக்கூடும். 13 முதல் 16-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    தமிழகத்தில் நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் 13-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

    தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 8 செமீ, திருச்சி மாவட்டம் துறையூர், திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் தலா 7 செமீ, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், புகையிலை நிலையம், கொடைக்கானல், ஒட்டன்சத்திரத்தில் தலா 6 செமீ, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி, கோவை மாவட்டம் சின்னக்கல்லார், தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், சேலம், நீலகிரி மாவட்டம் கோடநாடு, திண்டுக்கல் மாவட்டம் பழனி, திருப்பத்தூர், தேனி மாவட்டம் சோத்துப்பாறை, நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ரேபரேலியில் பாஜகவினரால் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்: செல்வப்பெருந்தகை கண்டனம்

    September 10, 2025
    மாநிலம்

    தேர்தல்வரை பசி, தூக்கம், ஓய்வின்றி உழைப்போம்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் அறிவுறுத்தல்

    September 10, 2025
    மாநிலம்

    கல்லூரி மாணவர் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட வழக்கு: திமுக பிரமுகரின் பேரனுக்கு ஐகோர்ட் ஜாமீன்

    September 10, 2025
    மாநிலம்

    சென்னை: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    September 10, 2025
    மாநிலம்

    கடலூர் சிப்காட் பாதிப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ராமதாஸ்

    September 10, 2025
    மாநிலம்

    அரசு சார்பில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா: செப்.13-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது

    September 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ரேபரேலியில் பாஜகவினரால் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்: செல்வப்பெருந்தகை கண்டனம்
    • எந்த வயதில் நீங்கள் பால் குடிப்பதை நிறுத்த வேண்டும்? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சிறந்த மாற்று வழிகள் இங்கே | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிரபஞ்சம் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் பிற விண்மீன் திரள்களின் எழுச்சி | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இரவில் பசியுடன் இருப்பது முதல் சர்க்கரை பசி வரை: குறைந்த இரத்த சர்க்கரையின் 4 நுட்பமான அறிகுறிகள் புறக்கணிக்கப்படக்கூடாது
    • இந்தியப் பெருங்கடலின் கீழ் ஆழமாக பூமியில் வேறு எங்கும் போலல்லாமல் ஒரு ஈர்ப்பு மர்மம் உள்ளது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.