Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, October 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘விஜய் வீட்டில் முடங்கிக் கிடப்பது சரியல்ல; கைதுக்கு பயந்தால் அரசியல் செய்ய முடியாது’ – கிருஷ்ணசாமி
    மாநிலம்

    ‘விஜய் வீட்டில் முடங்கிக் கிடப்பது சரியல்ல; கைதுக்கு பயந்தால் அரசியல் செய்ய முடியாது’ – கிருஷ்ணசாமி

    adminBy adminOctober 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘விஜய் வீட்டில் முடங்கிக் கிடப்பது சரியல்ல; கைதுக்கு பயந்தால் அரசியல் செய்ய முடியாது’ – கிருஷ்ணசாமி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: விஜய் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பது சரியானது கிடையாது. விஜய்யும் இந்நேரம் வெளியே வந்து இருக்க வேண்டும். காவல்துறை கைதுக்கெல்லாம் பயந்து தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

    சென்னையில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பொதுவாக ஒருநபர் ஆணையங்கள் ஆளும் கட்சியின் வழிகாட்டுதலின் படிதான் அறிக்கை கொடுக்கும். கரூரில் 41 பேர் உயிரிழந்தது மிகப்பெரிய சோக சம்பவம். எனவே இதற்கு ஒரு நபர் ஆணையம், சிறப்பு புலனாய்வுக் குழு போன்றவை உண்மையை வெளிக்கொண்டு வர உதவாது. அஸ்ரா கார்க் நேர்மையானவராக இருந்தாலும், அவர் தமிழக அரசுக்கு எதிராகவோ அல்லது காவல்துறைக்கு எதிராகவோ அறிக்கை கொடுக்க முடியும் என நான் நம்பவில்லை.

    கரூர் சம்பவத்துக்கு நீதிபதிகளே நான்கு பேர் சேர்ந்து விசாரிக்கலாம். எனவே நடுநிலையோடு இதனை விசாரிக்க வேண்டும். இதன் மூலமாக விஜய்யை கார்னர் செய்ய வேண்டும், அவரை ஒடுக்க வேண்டும், அவரை தேர்தல் பாதைக்கு வரவிடாமல் பலவீனப்படுத்த வேண்டும் என சிலர் நினைக்கிறார்கள்.

    விஜய்யும் இந்நேரம் வெளியே வந்து இருக்க வேண்டும். காவல்துறை கைதுக்கெல்லாம் பயந்து தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது. கைது செய்தால் என்ன, 15 நாள், ஒரு மாதம் சிறையில் வைக்கப்போகிறார்கள். அதனை எதிர்கொள்ளவேண்டும். தவெகவினர் வீட்டுக்குள் பூட்டிக்கொண்டு இருப்பது பொதுவாழ்வுக்கு நல்லது கிடையாது. தைரியத்தோடு வெளியே வந்தால்தான் அரசியல் களத்தில் நிற்க முடியும். இடைவெளி விழுந்துவிட்டால் அதனை மீண்டும் நிரப்ப முடியாது.

    அரசியலில் தொடர்ந்து இருக்க வேண்டுமானால், பூட்டிய கதவுகளை திறந்து தவெகவினர் வெளியே வர வேண்டும். கரூர் துயரம் நடந்தவுடன் ஏன் உடனே அங்கிருந்து வெளியேறினார் என்பதற்கு விஜய் விளக்கமளிக்க வேண்டும். அவர் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பது சரியானது கிடையாது.

    கரூர் சம்பவத்தில் எந்த இடத்தில் என்ன தவறு எனக் கண்டறிய வேண்டும். அப்போதுதான் அடுத்து இதுபோல நிகழ்வு நடக்காது. இதில் மேம்போக்காக விஜய் மீது தவறு, காவல்துறை மீது தவறு என மேம்போக்காக சொல்ல முடியாது” என அவர் தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    நேரடி கொள்முதல் நிலையங்களில் பிற மாவட்ட நெல்லை கொள்முதல் செய்தால் நடவடிக்கை: திருவள்ளூர் ஆட்சியர்

    October 4, 2025
    மாநிலம்

    கரூர் துயரம்: ஒரு வாரத்துக்குப் பின் தவெக சார்பில் நேரில் ஆறுதல்

    October 4, 2025
    மாநிலம்

    திருப்பூர் குமரனையும், சுப்பிரமணிய சிவாவையும் நினைவுகூர்ந்து வணங்குவோம்: பிரதமர் மோடி

    October 4, 2025
    மாநிலம்

    சென்னை மெட்ரோ ரயில் கடந்த மாதம் 1.01 கோடி பயணச்சீட்டுகள் விற்பனை

    October 4, 2025
    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

    October 4, 2025
    மாநிலம்

    விஜய்யை கூட்டணிக்குள் இழுக்க பாஜக முயற்சி செய்கிறது: சீமான்

    October 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நேரடி கொள்முதல் நிலையங்களில் பிற மாவட்ட நெல்லை கொள்முதல் செய்தால் நடவடிக்கை: திருவள்ளூர் ஆட்சியர்
    • ம.பி.யில் குழந்தைகள் மரணத்துக்கு இருமல் சிரப் காரணமா? – 19 ஆலைகளில் ஆய்வு தீவிரம்
    • கரூர் துயரம்: ஒரு வாரத்துக்குப் பின் தவெக சார்பில் நேரில் ஆறுதல்
    • உலகெங்கிலும் இருந்து ஐந்து சக்திவாய்ந்த குணப்படுத்தும் ஹனிகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • எல்னாஸ் ஹஜ்தாமிரி கடத்தல் வழக்கு: டெக்சாஸில் கைது செய்யப்பட்ட இந்திய -ஆரிஜின் சுக்பிரீத் சிங் கனடாவுக்கு ஒப்படைக்கப்பட்டார் – இந்தியாவின் டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.