Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»விஜய் மாநாட்டில் தொண்டரை தூக்கி வீசிய வழக்கு: போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்க காவல்துறை அறிவுறுத்தல்
    மாநிலம்

    விஜய் மாநாட்டில் தொண்டரை தூக்கி வீசிய வழக்கு: போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்க காவல்துறை அறிவுறுத்தல்

    adminBy adminSeptember 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    விஜய் மாநாட்டில் தொண்டரை தூக்கி வீசிய வழக்கு: போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்க காவல்துறை அறிவுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: விஜய் கட்சியின் மதுரை மாநாட்டில் தொண்டர் ஒருவர் தூக்கி வீசப்பட்ட விவகாரத்தில் போதிய ஆதாரங்களை சமர்பிக்க புகார்தாரருக்கு போலீஸ் அறிவுறுத்தி உள்ளது.

    மதுரை – தூத்துக்குடி ரோட்டில் கூடக்கோவில் அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு ஆக.21-ல் நடந்தது. தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள், ரசிகர்கள் கூடினர்.

    மாநாட்டு மேடையில் தோன்றிய விஜய் மேடைக்கு முன்பாக அமைத்திருந்த ‘ரேம்ப் வாக்’கில் நடந்து சென்றார். அப்போது, பாதுகாப்பு கட்டுப்பாட்டை மீறி சிலர் ‘ரேம்ப் வாக்’ மேடையில் ஏறி விஜய்க்கு கை கொடுத்தனர்.

    விஜய்யின் பவுன்சர்கள் தொண்டர்களை அப்புறப்படுத்தும் நோக்கில், தொண்டர் ஒருவரை பவுன்சர்கள் தூக்கி வீசிய காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி அதிர்வலையை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக அக்கட்சியின் தொண்டரான பெரம்பலூர் மாவட்டம், பெரியம்மாபாளையம் சரத்குமாரை பவுன்சர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வீசியதாகவும், இதில் நெஞ்சு வலித்து மருத்துவமனைக்கு சென்றதாகவும் அவர் தனது தாயாருடன் சென்று பெரம்பலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

    இதன்பேரில் குன்னம் போலீஸார் தவெக தலைவர் விஜய், 10 பவுன்சர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். சம்பவ இடம் மதுரை மாவட்டம், கூடக்கோவில் காவல் நிலைய பகுதி என்பதால் கூடக்கோவில் காவல் நிலையத்திற்கு வழக்கை மாற்றினர்.

    தவெக தலைவர் விஜய் உட்பட அவரது பவுன்சர்கள் 10 பேர் மீதும் 3 பிரிவுகளில் கூடக்கோவில் காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர் சரத்குமார் அல்ல. மாநாட்டு ரேம்ப் வாக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டவர் வேலூரைச் சேர்ந்த ஒரு தொண்டர் என்றும் சில தகவல்கள் பரவின.

    இதனால், சரத்குமார் தாயாரை மதுரை எஸ்.பி அரவிந்த் நேரில் அழைத்து விசாரித்தார். மதுரை கூடக்கோவில் காவல் நிலையத்திலும் சரத்குமார் விசாரணைக்கு ஆஜராகினார். அவரிடம் ஆய்வாளர் சாந்தி விசாரித்த நிலையில், பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்டவர் சரத்குமாரே என்பதற்கு போதிய ஆதாரங்களை சமர்பிக்க அறிவுறுத்தியதாக போலீஸார் தெரிவித்தனர்.

    போலீஸார் கூறுகையில், ‘பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சரத்குமாரிடம் நேரில் விசாரித்தோம். மேடையில் தூக்கி வீசப்பட்டவர் வேலூரைச் சேர்ந்த தொண்டர் அஜித்குமார் என்ற தகவலும் பரவுவதால் இருவரின் உருவ ஒற்றுமை விவரம் சேகரிக்கிறோம். மேலும், ரேம்ப் வாக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டவர் சரத்குமார் தான் என்பதை உறுதி செய்யும் வகையில் அவரிடமும் சில வீடியோ, போட்டோ, மதுரைக்கு பயணித்தது போன்ற ஆதாரங்களை சமர்பிக்க அறிவுறுத்தி உள்ளோம். இதன் பின், சம்மன் அனுப்பி பவுன்சர்களிடம் விசாரிக்கப்படும்’ என்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    முன்னாள் பெண் அமைச்சரை தொந்தரவு செய்தோர் மீது நடவடிக்கை: புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர்

    September 5, 2025
    மாநிலம்

    செங்கோட்டையன் திமுகவில் இணைந்தால் வரவேற்பீர்களா? – அப்பாவு பதில்

    September 5, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    September 5, 2025
    மாநிலம்

    அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அனுமதியின்றி தனது பாடல்கள் பயன்பாடு: இளையராஜா வழக்கு

    September 5, 2025
    மாநிலம்

    செங்கோட்டையன் மூலம் பழனிசாமிக்கு பாஜக மறைமுக நெருக்கடி கொடுக்கிறது: திருமாவளவன்

    September 5, 2025
    மாநிலம்

    ஒற்றை அடுக்கு ஜிஎஸ்டியை நோக்கி பயணிப்பது தான் நமது இலக்கு: அன்புமணி கோரிக்கை

    September 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • முன்னாள் பெண் அமைச்சரை தொந்தரவு செய்தோர் மீது நடவடிக்கை: புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர்
    • GIS: சொத்து மதிப்பீட்டுக்கு உதவும் புவியியல் தகவல் முறைமை தொழில்நுட்பம்!
    • பால்கனி தோட்டத்தில் f enugreek (மெதி) வளர்ப்பது எப்படி
    • ரஷ்ய எண்ணெய் இறக்குமதியால் பிராமணர்களே பயனடைகிறார்கள் என்ற நவரோவின் வாதம் தவறானது: இந்தியா
    • செங்கோட்டையன் திமுகவில் இணைந்தால் வரவேற்பீர்களா? – அப்பாவு பதில்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.