Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»விஜய் பிரச்சாரத்தில் கல்வீச்சு சம்பவம் நடைபெறவில்லை: ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தகவல்
    மாநிலம்

    விஜய் பிரச்சாரத்தில் கல்வீச்சு சம்பவம் நடைபெறவில்லை: ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தகவல்

    adminBy adminSeptember 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    விஜய் பிரச்சாரத்தில் கல்வீச்சு சம்பவம் நடைபெறவில்லை: ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கரூர்: கரூரில் தவெக பிரச்​சா​ரத்​தின்​போது கல்​வீச்சு சம்​பவம் எது​வும் நடை​பெற​வில்லை என ஏடிஜிபி டேவிட்​சன் தேவாசீர்​வாதம் கூறி​னார்.

    கரூர் ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் நேற்று ஆட்​சி​யர் மீ.தங்​கவேல், ஏடிஜிபி டேவிட்​சன் தேவாசீர்​வாதம், மின்​வாரிய தலை​மைப் பொறி​யாளர் ராஜலட்​சுமி ஆகியோர் செய்​தி​யாளர்​களுக்​குப் பேட்​டியளித்​தனர். அப்​போது, ஆட்​சி​யர் மீ.தங்​கவேல் கூறும்​போது, “கூட்ட நெரிசலில் உயி​ரிழந்த 39 பேரும் சடல​மாகத்​தான் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு கொண்டு வரப்​பட்​டனர். மயங்கி விழுந்​தவர்​களில் ஒரு​வர் உயி​ரிழந்​த​தால், உயி​ரிழப்பு எண்​ணிக்கை 40-ஆக உயர்ந்​துள்​ளது. தற்​போது 80 பேர் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர்” என்​றார்.

    ஏடிஜிபி டேவிட்​சன் தேவாசீர்​வாதம் கூறிய​தாவது: கரூரில் பிரச்​சா​ரம் மேற்​கொள்ள லைட்​ஹவுஸ் முனை பகு​தியை முதலில் தவெக​வினர் கேட்​டனர். அங்கு பெட்​ரோல் பங்க், அமராவதி ஆறு உள்​ள​தா​லும், நெருக்​கடி​யான இடம் என்​ப​தா​லும் அனு​மதி வழங்​க​வில்​லை. உழவர்​சந்தை பகு​தி​யும் குறுகலான பகுதி என்​ப​தால் அனு​மதி வழங்​க​வில்​லை. வேலு​சாமிபுரத்​தில் ஏற்கெ​னவே வேறு கட்சி பிரச்​சா​ரம் செய்​த​தால் அந்த இடம் வழங்​கப்​பட்​டது. கூட்​டம் அதி​க​மான இடங்​களில் 50 பேருக்கு ஒரு​வர் வீதம் பணி​யில் அமர்த்​தப்​படு​வார். கரூரில் 20 பேருக்கு ஒரு​வர் என ஒரு எஸ்​.பி, 4 ஏடிஎஸ்​பி, டிஎஸ்​பிகள், இன்​ஸ்​பெக்​டர்​கள், சப்​-இன்​ஸ்​பெக்​டர்​கள், போலீ​ஸார் என 500 போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டனர். மற்ற இடங்​களை​விட அதிக போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டது.

    வேலு​சாமிபுரத்​தில் நடந்த பரப்​புரை​யின்​போது கல்​வீச்சு சம்​பவம் எது​வும் நடை​பெற​வில்​லை. தவெக தலை​வரின் வாக​னம் கரூர் மாவட்​டம் தளவா​பாளை​யத்​தில் இருந்து திரு​காம்​புலியூர் ரவுண்​டானா வர 2 மணி நேர​மாகியது. சாதா​ரண​மாக 30 நிமிடங்​களில் அந்த இடத்​தைக் கடந்​து​விடலாம். சிறிது நேரம் வாக​னத்​திலிருந்து வெளியே வந்த தவெக தலை​வர், பின்​னர் உள்ளே சென்​று​விட்​டார். இதனால், அங்​கிருந்​தவர்​களுக்கு அவரை பார்க்​கும் ஆர்​வம் அதி​கரித்​தது.

    அதீத கூட்​டத்​தால் பிரச்​சார இடத்​துக்கு முன்பே வாக​னத்தை நிறுத்தி பிரச்​சா​ரம் செய்​யும்​படி போலீ​ஸார் கூறி​யுள்​ளனர். ஆனால், அந்த அறி​வுறுத்​தலை ஏற்​காமல், திட்​ட​மிட்ட இடத்​திலேயே பிரச்​சா​ரம் மேற்​கொண்​டனர். சம்பவ இடத்​தில் இருந்த போலீ​ஸார் கேட்​டுக்​கொண்​ட​தாலேயே 10-க்​கும் மேற்​பட்ட ஆம்​புலன்​ஸ்​கள் அனுப்​பப்​பட்​டன. கூட்​டம் காரண​மாக ஆம்​புலன்​ஸ்​கூட உள்ளே செல்ல முடிய​வில்​லை. அனு​ம​தி​கேட்ட நேரத்​தை​விட 4 மணி நேரம் தாமத​மாகவே பிரச்​சா​ரத்தை தொடங்​கி​னார். அதிக கூட்​டம் கூடும்​போது அரசி​யல் கட்​சி​யினர் ஒத்​துழைப்பு வழங்​கவேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

    மின்​சா​ரம் துண்​டிக்​கப்​பட​வில்லை: மின் வாரிய தலை​மைப் பொறி​யாளர் ராஜலட்​சுமி கூறும்​போது, “விஜய் பிரச்​சா​ரத்​தின்​போது மின்​சா​ரம் துண்​டிக்​கப்​பட​வில்​லை. விஜய் வரு​வதற்கு முன்பு டிரான்​ஸ்​பார்​மரிலும், மரத்​தி​லும் சிலர் ஏறிய​தால் மின்​சா​ரத்தை துண்​டித்​து, காவல் துறை மூலம் அவர்​களை கீழே இறக்​கிய பின்​னர் மீண்​டும் மின் விநி​யோகம் செய்யப்​பட்​டது” என்​றார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ஆணைய அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் உறுதி

    September 29, 2025
    மாநிலம்

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க மீண்டும் கரூர் செல்ல விஜய் திட்டம்

    September 29, 2025
    மாநிலம்

    நெரிசல் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோருகிறது தவெக: உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று விசாரணை

    September 29, 2025
    மாநிலம்

    நீதிமன்றம் முன்கூட்டியே அறிவுறுத்தியும் கரூரில் நடந்த துயரம்: பொதுமக்களின் எதிர்பார்ப்பு என்ன?

    September 29, 2025
    மாநிலம்

    தமிழக அரசும், விஜய்யும் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும்: கரூரில் பழனிசாமி கருத்து

    September 29, 2025
    மாநிலம்

    கரூர் சம்பவத்தில் நீதிமன்றத்தை நாடிய தவெக தலைவர் விஜய் மீது விசிக கடும் விமர்சனம்

    September 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஆணைய அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் உறுதி
    • உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க மீண்டும் கரூர் செல்ல விஜய் திட்டம்
    • நெரிசல் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோருகிறது தவெக: உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று விசாரணை
    • விஜய் பிரச்சாரத்தில் கல்வீச்சு சம்பவம் நடைபெறவில்லை: ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தகவல்
    • ஆப்டிகல் மாயை: உங்கள் கண்கள் கடிகாரத்தை வெல்ல முடியுமா? மறைக்கப்பட்ட நட்சத்திர மீன்களை 7 வினாடிகளில் கண்டுபிடி! | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.