மேட்டூர்: சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக-தவெக இடையேதான் போட்டி என்று தவெக தலைவர் விஜய் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து, மக்களின் கருத்து அல்ல என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் நேற்று அதிமுக நகரம், ஒன்றிய, பேரூர் கட்சி நிர்வாகிளை சந்தித்துப் பேசிய அவர், கட்சியினருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக-தவெக இடையேதான் போட்டி என்று தவெக தலைவர் விஜய் பேசியது குறித்து கேட்கிறீர்கள். விஜய் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து, மக்களின் கருத்து அல்ல.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சேலத்தில் என்னை சந்தித்துப் பேசினார். அப்போது, தேர்தல் சுற்றுப்பயணம் குறித்து மட்டுமே என்னுடன் ஆலோசித்தார். இவ்வாறு பழனிசாமி கூறினார்.